மேலும் அறிய
நாகை : கல்லூரி மாணவி தற்கொலை.. தாளாளர் உட்பட மூவரை கைதுசெய்ய வலியுறுத்திய உறவினர்கள்..
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கல்லூரி தாளாளர் உள்ளிட்ட மூவரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
![நாகை : கல்லூரி மாணவி தற்கொலை.. தாளாளர் உட்பட மூவரை கைதுசெய்ய வலியுறுத்திய உறவினர்கள்.. Nagapattinam Student death summon Issued நாகை : கல்லூரி மாணவி தற்கொலை.. தாளாளர் உட்பட மூவரை கைதுசெய்ய வலியுறுத்திய உறவினர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/3c27b4a7e3413903dcb9077b6630d165_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உறவினர்கள் காலில் விழுந்து கதறிய உறவினர்கள்
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கல்லூரி தாளாளர் உள்ளிட்ட மூவரை கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள். நான்காவது நாளாக உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உயிரிழந்த மாணவியின் தந்தைக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தா நகர் வண்ணான் குளம் மேற்கரையில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி, சித்ரா தம்பதியினரின் மூன்றாவது மகள் சுபாஷினி சர் ஐசக் நியூட்டன் (தனியார் கல்லூரி) கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வந்தார். முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக பணம் கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளது. மேலும் பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகளை வெளியே நிற்கவைத்து அவமானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
![நாகை : கல்லூரி மாணவி தற்கொலை.. தாளாளர் உட்பட மூவரை கைதுசெய்ய வலியுறுத்திய உறவினர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/5b1124b70ca6cdc0d074cbae027d47fa_original.jpg)
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு பயிலும் சுபாஷினி கடந்த 30-ஆம் தேதி தாய் தந்தையர் வேலைக்கு வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதைத்தொடர்ந்து நாகூர் காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு வழக்குப் பதிவு செய்து நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுசெய்து அங்கு பிணவறையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது நேற்று வரை தொடர்ந்து மூன்றாவது நாளாக சாலை மறியல் மற்றும் காத்திருப்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாணவி சுபாஷினி உயிரிழப்பு குறித்து நாகூரில் அவர்களது இல்லத்தில் ஏடி எஸ் பி, ராமு,சுகுமாரன், டிஎஸ் பி சரவணன், ரமேஷ் பாபு உள்ளிட்டோர் தாய் தந்தை மற்றும் உறவினர்களிடம் மாணவி உயிரிழப்பு குறித்து கேட்டறிந்தனர்.
![நாகை : கல்லூரி மாணவி தற்கொலை.. தாளாளர் உட்பட மூவரை கைதுசெய்ய வலியுறுத்திய உறவினர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/4875f3a6b00f1dcb0b0a6ef8d1caa93b_original.jpg)
அப்போது உயிரிழந்த மாணவியின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் காவல்துறையினரையும் காலில் விழுந்து கதறி என் மகளுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்படக்கூடாது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறி அழுதனர். அவர்களிடம் உயிரிழந்த மாணவியின் தந்தை சுப்பிரமணியத்திடம் வரும் 4-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளதால் மாணவியின் உடல் நான்காவது நாளாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion