மேலும் அறிய

கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!

கொடைக்கானலில் மாயாவி திரைப்பட துணை நடிகை தந்தை கொடுரமான கொலை செய்யப்பட்ட வழக்கில்,பெண் தொழிலதிபர், டாக்டர், கல்லூரி மாணவர் உட்பட 10 பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக உள்ள குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவில் அருகே, மாயாவி திரைப்பட துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணனுக்கு (73) சொந்த பங்களா உள்ளது, இந்த பங்களாவில் அனுமதி இல்லாமல் தனியார் தங்கும் அறைகள் சுற்றுலாப்பயணிகளுக்கு வாடகைக்கு விடப்படுவதாக சொல்லப்படுகிறது, இந்நிலையில் இந்த பங்களாவில் கடந்த 21ம் தேதி சுற்றுலாப்பயணிகள் போல்  5 இளைஞர்கள் வருகை புரிந்து தங்கியுள்ளனர், இதனையடுத்து கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணிக்கு, இந்த பங்களாவின் பணியாளர் ஆறுமுகம் வெளியே வந்து சத்தமிட்டு ,அருகே உள்ள குடிருப்பு பகுதி வாசி செல்போன்  எண்ணில் இருந்து மாவட்ட காவல் காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து, இந்த பங்களாவில் கொலை நடந்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பங்களாவின் கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்,


கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!

அங்கு முதல் அறையில் முரளி(பணியாளர்) கை, கால்களை  டேப் மூலம் கட்டி போட்ட நிலையில் இருந்தவரை மீட்டனர், அடுத்த அறைக்கு செல்லும் போது துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணன் சேரில் அமரவைத்து வாய்,மூக்கு,தலை என உடல் முழுவதும் டேப் போட்டு சுற்றி, உடலில் ரத்த காயங்கள் ஏற்படாமல் கொடுரமாக கொலை செய்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரது சடலத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர், மேலும் ஆறுமுகத்தை துணியால் கை,கால் கட்டப்பட்டு இருந்ததால் அவரே துணியை கழற்றி வெளியே வந்ததும் தெரிய வந்துள்ளது, மேலும் பங்களாவில் தங்கியிருந்த 5 இளைஞர்கள் தங்களை கட்டி போட்டதுடன், சூரிய நாரயணனை டேப்பால் சுற்றி கொலை செய்ததாக தகவல் தெரிவித்துள்ளனர், இதனையடுத்து சம்பவ இடமான பங்களாவிற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா, திண்டுக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்,


கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும்,மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து வந்தனர், இதனையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின் படி 3 தனிப்படைகள் அமைத்து கொடைக்கானல் காவல் ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில்,100 க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் செல்போன் சிக்னல்களைக் கொண்டும் விசாரணை நடத்தினர். வேளாங்கண்ணி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து தனிப்படை தீவிர விசாரணை நடத்தினர்,இதில் சோழிங்கர் பகுதியை சேர்ந்த சியாம்(31) தலைமையில், அவரது நண்பர்களான மகேந்திரன், அரக்கோணத்தை சேர்ந்த கோகுல்நாத்(26) , ரஞ்சித்(32), திருவள்ளூவரை சேர்ந்த கிஷோர் என்ற கிருஷ்ண பிரசாத்(25), அட்சய நடராஜ்(26), கார்த்தி(26) உள்ளிட்ட 7 இளைஞர்கள் நண்பர்களாக உள்ளனர், மேலும் இவர்கள் சுய தொழில், கட்ட பஞ்சாயத்து மற்றும் பணத்தை இரட்டிப்பாக பெற்று தருவது  உள்ளிட்ட  சட்ட விரோத வேலைகளை செய்து வந்துள்ளனர்,


கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!

இந்நிலையில் சியாம் அவரது நண்பரான சென்னையை சேர்ந்த டாக்டர் கிரணுக்கும்( 36 ) அவரது தாயாரான கிரிஜா(53) விற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக கிரிஜா பணத்தை இரட்டிப்பாக மாற்றி தருவேன் என மோசடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் சியாமிற்கு கிரிஜாவுடன்  பழக்கம் அதிகரிக்கவே பண இரட்டிப்பு மோசடி தொழிலுக்கு 5 லட்சம் பணத்தை கிரிஜாவிடம் சியாம் பெற்றுள்ளார், அப்போது பணம் கிரிஜாவுக்கு திரும்ப தர வில்லை என கூறி பணம் தருவதற்கு பல நெருக்கடிகளை கிரிஜாவின் மகன் டாக்டர் கிரண் , சியாமிற்கு கொடுத்துள்ளார், மேலும் சியாமிடம் கிரிஜா இருந்தாலும் எனது கணவரின் உறவினர் சூரிய நாரயணன் கொடைக்கானலில் உள்ளார், அவருக்கு  ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள சுமார் மூன்றரை கோடி மதிப்புள்ள அப்பார்ட்மென்ட் உள்ளது.  

அந்த அப்பார்ட்மெண்ட் உடைய பட்டாவை அவரது வீட்டில் சென்று அவரை கட்டி போட்டு விட்டு எடுத்து வருமாறு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே திட்டம் தீட்டியுள்ளனர், மேலும் இதை நீ செய்து முடித்தால்  உனக்கு 50 லட்சம் பணம் தருகிறேன் என சியாமிற்கு ஆசை வார்த்தைகள் கிரிஜாவும், அவரது மகன் கிரணும்  கூறியுள்ளார், இதனையடுத்து இந்த 7 பேர் கொண்ட கும்பல் இரண்டு முறை கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே  வருகை புரிந்து சூரிய நாரயணன் பங்களாவிலும், இதன் அருகே உள்ள பங்களாவிலும் தங்கியுள்ளனர்,மேலும் பங்களாவில் சூரிய நாராயணனை தாக்கி அவரிடம் உள்ள பல கோடி மதிப்புள்ள ,பட்டாக்கள் எங்கு உள்ளது என கிரிஜாவிடம் கேட்டறிந்து தொடர்ந்து பங்களாவை நோட்டமிட்டுள்ளனர், இதனையடுத்து 3 வது முறையாக சியாம், மகேந்திரன்,கோகுல்நாத், ரஞ்சித்,கிஷோர் உள்ளிட்ட ஐவர் குழுவினர் ஸ்விப்ட் காரில் இந்த பங்களாவுக்கு கடந்த 19ஆம் தேதி வருகை புரிந்து  தங்கினர்.


கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!

பணியாளர்களிடம் லாவகமாக பேசி ரொம்ப நாட்கள் பழகி இருப்பதாக  காட்டி, வரும் போதே பங்களா பணியாளர் ஆறுமுகத்திற்கு மது பாட்டில்கள் அதிகமாக வாங்கி வந்துள்ளனர், பங்களாவிற்கு வந்த உடனே ஆறுமுகம் உள்ளிட்ட ஐவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர், 20ஆம் தேதி முழுவதும் பங்களாவிலேயே இருந்துள்ளனர், 21ஆம் தேதி அன்று மாலை ஆறுமுகம் வெளியே  மது பாட்டில் வாங்க சென்றுள்ளார், அதே போல அங்குள்ள பெண் பணியாளர் அவரது வீட்டிற்கு பணி முடிந்து சென்றுள்ளார், இது தான் தருணம் என நினைத்த ஐவர் குழுவினர்  ஒரு அறையில் பங்களா பணியாளர் முரளியை கட்டி போட்டுள்ளனர்,அடுத்த அறையில் சூரிய நாரயணனை சேரில் அமர வைத்து டேப் மூலம் வாய்,மூக்கு, தலை  உள்ளிட்ட உடல் முழுவதும் கட்டி போட்டு வைத்துள்ளனர், மது வாங்கி வந்த ஆறுமுகத்தை டேப் தீர்ந்ததால் துணி மூலம் கை கால்களை கட்டி போட்டதாகவும், பங்களாவில் உள்ள ஹார்ட் டிஸ்க், மற்றும் மூன்றரை கோடி மதிப்புள்ள அப்பார்ட்மென்ட் பட்டா உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு பங்களாவின் வெளிபுறத்தில் பூட்டு போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.


கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!

மேலும் அரக்கோணத்தில்  ஸ்டூடியோ வைத்துள்ள விக்னேஷ்(28) கடையில் இந்த ஹார்ட் டிஸ்க்,பட்டா மற்றும் செல்போனை வைத்துவிட்டு சென்றதாக கொலையாளிகள் ஒப்பு கொண்டுள்ளனர், இதன் அடிப்படையில் சியாம், ரஞ்சித், கோகுல்நாத், கிஷோர், மகேந்திரன், அட்சயநடராஜன், கார்த்தி, விக்னேஷ் மற்றும் கொலைக்கு மூலக்காரணமான கிரிஜா மற்றும் அவரது மகன் கிரண்,மற்றும் இந்த பங்களாவில் பணியாற்றிய ஆறுமுகத்திற்கும் கிரிஜாவிற்கும் சூரிய நாரயணன் மூலம் பழக்கம்  ஏற்பட்டு பணம் இரட்டிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டதுடன்,இந்த கொலைக்கு உறுதுணையாக இருந்ததும் தெரியவந்ததை அடுத்து ஆறுமுகம் உள்ளிட்ட 10 நபர்களை கைது செய்துள்ளனர், மேலும் மகேந்திரன் தப்பியோடியுள்ளார், இவர்களிடம் இருந்து தங்க மோதிரம், செயின், மூன்றரை  கோடி மதிப்புள்ள பட்டா, கொலையாளிகள் பயன்படுத்திய2  சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சூரிய நாரயணனும், கிரிஜாவின் கணவரும் நணபர்களாகி உள்ளனர். மேலும் சூரிய நாரயணன் கொடைக்கானலில் உள்ள டிரைவரின் கொலை வழக்கில் குற்றவாளியாக உள்ளார் இந்த வழக்கில் சூரிய நாராயணனுக்கு கிரிஜா  ஜாமின் உள்ளிட்ட பல்வேறு பணிகளை  செய்து உள்ளார், மேலும் 3 மாதங்களாக சூரிய நாரயணன் சென்னையில் வசிக்கும் கிரிஜா வீட்டில் தங்கி இருந்து மருத்துவமனைக்கும் சென்று வந்தததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொடைக்கானலில் துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்யா நாராயணனின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மூன்று தினங்களுக்குள் கொடைக்கானல் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானலில் திரைப்பட துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்யா நாராயணனின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Affordable Long Range EVs: பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
பெட்ரோல், டீசல் விலை கூடிடுமேன்னு பயப்பட்றீங்களா.? EV கார் வாங்குங்க; மலிவான கார்கள் லிஸ்ட் இதோ
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Embed widget