மேலும் அறிய

Crime: செல்ஃபோன் சார்ஜர் வெடித்ததில் பரவிய தீ... உடல் கருகி தீக்கிரையான நபர்

தினமும் தான் தூங்கும்போது செல்போனை சார்ஜ் போடுவதை அர்ஜூன் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், நள்ளிரவில் இவரது செல்போன் சார்ஜர் எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது.

செல்ஃபோன் சார்ஜர் வெடித்து வீடு முழூவதும் தீ பரவி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜுன். பட்டதாரியான அர்ஜுன் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஆக.19) இரவு தனது இரண்டாவது மகன் திவினை சிறிது தூரத்தில் உள்ள தன் தாயின் வீட்டில் விட்டு தன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் அர்ஜூன்.

அப்போது வீட்டில் அவரது மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கிக் கொண்டிருந்ததை அடுத்து அருகே இருந்த தகர வீடு ஒன்றில் அர்ஜூன் தூங்கியுள்ளார். தினமும் தான் தூங்கும்போது செல்போனை சார்ஜ் போடுவதை அர்ஜூன் வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், நள்ளிரவில் இவரது செல்போன் சார்ஜர் எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது. தொடர்ந்து தீ குடிசையில் மளமளவெனப் பரவியுள்ளது.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட அர்ஜூன் வீட்டின் உள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவி கஸ்தூரியும், அருகில் இருந்தவர்களும் வருவதற்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீக்கு அர்ஜூன் பரிதாபமாக இரையானார். காவல் துறையினர் முன்னதாக நடத்திய விசாரணையில்  செல்போன் சார்ஜர் வெடித்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் கடந்த ஆண்டு கோவை மாவட்டம், மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மயில்சாமியின் மகன் சிவராம் என்பவர் சார்ஜர் வெடித்து உயிரிழந்த சம்பவம் நடந்தது. 18 வயதான இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர் கடந்த 9ஆம் தேதி இரவு வழக்கம்போல வீட்டில் தனது அறையில் படுக்கையில் இருந்தவாறு செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். பின்னர் செல்போனை சார்ஜ்ஜில் போட்டுவிட்டு தூங்கிவிட்டார்.

மறுநாள் அதிகாலை மின் இணைப்பில் இருந்த செல்போன் திடீரென்று வெடித்துள்ளது. அப்போது ஏற்பட்ட தீ சிவராமின் படுக்கையில் பரவி, அவர் மீதும் பற்றியது. இதில் உடலில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்நிலையில்,  இது போன்ற சம்பவங்கள் நேராமல் இருக்க வழக்கமாக தூங்கச் செல்வதற்கு முன் சார்ஜ் போடாமல் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்

Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai Vs Annamalai : அ.மலையை வச்சிகிட்டே சம்பவம் செய்த தமிழிசை! Meeting-ல் நடந்தது என்ன?Cellphone Theft : ’’அண்ணே..1 சிக்கன் ரைஸ்’’செல்போனை திருடிய வாலிபர்..பரபரப்பு சிசிடிவி காட்சிகள்Kallakurichi issue : அடுத்தடுத்து உயிரிழப்பு! மாவட்ட ஆட்சியர் மாற்றம்! கள்ளக்குறிச்சி விவகாரம்Dharmapuri collector  : ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய கலெக்டர்! ஷாக்கான POLICE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Breaking News LIVE: கள்ளச்சாராய மரணம் அரசு நிர்வாகத்தின் அலட்சியம் - த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
ENG Vs WI, T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து - சூப்பர் 8 சுற்றில் அபார வெற்றி
ENG Vs WI, T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து - சூப்பர் 8 சுற்றில் அபார வெற்றி
Kallakurichi Illicit Liquor: சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
Kallakurichi Illicit Liquor Death: கள்ளச்சாராயத்தில் மெத்தனால்! இவ்வளவு கொடியதா? உயிரை பறிப்பது இப்படித்தான்!
Kallakurichi Illicit Liquor Death: கள்ளச்சாராயத்தில் மெத்தனால்! இவ்வளவு கொடியதா? உயிரை பறிப்பது இப்படித்தான்!
Embed widget