மேலும் அறிய

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்.. கைது செய்யப்பட்ட நபர் யார்? நடந்தது என்ன?

மாட்டுத்தாவணி காவலர்களையும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டு் தெரிவித்தார்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்த நபர் கைது - செல்போன் பறிமுதல்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்
 
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் நேற்று மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக  காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு  செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் மோப்பநாய் உதவியுடன் மாட்டுத்தாவணி காவல் நிலைய காவல்துறையினருடன் இணைந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தினர்.
 
வீண் வதந்தியை பரப்பியது தெரியவந்தது
 
பேருந்து நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள், பேருந்துகள் நிறுத்தும் பகுதிகள், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன நிறுத்துமிடங்கள், மற்றும் பேருந்து உள்ளே வெளியே செல்லும் முகப்பு பகுதிகள், பேருந்து நிலையத்தின் மையப்பகுதிகள், கடைகள் மற்றும் கழிவறைகள் என 3 மணி நேரத்திற்கு மேலாக தீவிரமாக சோதனை செய்தனர். ஆனால் சோதனையில் எந்தவித வெடிபொருட்களும் கிடைக்காத நிலையில் செல்போனில் வந்த தகவல் முற்றிலும் தவறான தகவல் என்பதையும் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீண் வதந்தியை பரப்பியது தெரியவந்தது. இது குறித்து மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்
 
கைது செய்து செல்போன் பறிமுதல் செய்தனர்
 
பின்னர் தவறான தகவலை அளித்த நபரின் செல்போன் எண் மூலமாக சைபர் கிரைம் காவல்துறையினர், அவருடைய இருப்பிடத்தை கண்டறிந்து தூத்துக்குடி மாவட்டம் பகுதியில் பதுங்கி இருந்தவரை கண்டறிந்தனர். அவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரின் மகன் வெங்கடாச்சலம் வயது 46 என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து, மதுரை மாட்டுத்தாவணி காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு  செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்தவுடன் விரைந்து செயல்பட்ட மதுரை மாநகர மாட்டுத்தாவணி காவலர்களையும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டு் தெரிவித்தார்.
 

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget