மேலும் அறிய

மதுரையில் கொலை செய்ய, கை செலவிற்காக கத்தியுடன் சுற்றிய கும்பல் - சுத்துப்போட்ட போலீஸ்

மதுரையில் கொலை செய்ய பண செலவிற்காக பட்டாகத்திகளுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்ய கை செலவிற்கு, பொதுமக்களிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து 7 பேரையும் கைது செய்த அவனியாபுரம் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆறு பட்டாகத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் கை துப்பாக்கியுடன் ரோந்து பணி
 
தமிழகத்தில் கடந்த சில மாத காலமாக தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாக புகார் சொல்லப்பட்டு  வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் குற்றவாளிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டி, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், அழகர்கோயில், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, ஒத்தக்கடை, உசிலம்பட்டி உள்ளிட்ட மாவட்ட பகுதியில் குற்றச் சம்பவங்களை தொடர்ந்து கட்டுப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் மாவட்ட காவல்துறையினர் கை துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 
கூடுதல் பாதுகாப்பு வேண்டும் அப்போது தான் மக்கள் அச்சம் நீங்கும்
 
இதே போல் மதுரை மாநகர் பகுதியிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை அவனியாபுரம் காவல் நிலையம் எல்கைக்கு  உட்பட்ட பகுதியில், கொலை செய்ய பண செலவிற்காக பட்டாகத்திகளுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மறைத்து வைத்திருந்த 6 பட்டா கத்திகள் மற்றும் வாள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
தன்னை கொலை செய்ய முயற்சிப்பவர்களை முன்கூட்டியே கொலை செய்ய முடிவு

மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் சாலையில் அவனியாபுரம் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போ சந்தேகத்துக்குரிய வகையில் வாளுடன் நின்றுகொண்டிருந்த மதுரை வடக்குமாசி வீதி பகுதியை சேர்ந்த குமார் (எ) பைப்குமார் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது பைப்குமாருக்கும் வைக்கம் பெரியார் நகரில் உள்ள மச்சசிவா தரப்புக்கும் முன் பகை இருப்பதாக தெரியவந்தது. இந்த சூழலில் மச்சசிவா தனது கூட்டாளிகளான ரஞ்சித், முத்துப்பாண்டி  மூலம் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதனால் அவர்கள் இருவரையும்  கொலை செய்ய யோசித்து முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக கூறியுள்ளார்

மேலும் கொலை செய்ய கை செலவை சரி செய்வதற்காக அவனியாபுரம் வைக்கம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (24), அருண்குமார் (24), ஆரோக்கிய விஜய் (20), ஆகாஷ் (19), அசோக்குமார் (23), முகம்மது அசன் (24) ஆகியோருடன் சேர்ந்து பொதுமக்களிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து 7 பேரையும் கைது செய்த அவனியாபுரம் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆறு பட்டாகத்தி , வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்

தலைப்பு செய்திகள்

Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Embed widget