மேலும் அறிய

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு!

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் மற்றும் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அனுமதி கோரி மாவட்ட காவல்துறை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட் முன்னாள் அதிமுக தலைவர்  ஜெயலலிதாவிற்கு சொந்தமானது. அவருக்கும் அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரிய சசிகலாவுக்கும் சொந்தமானது. இந்த எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலர்களில் ஒருவரைக் கொன்று, பின்னர் சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச்சென்றது.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் மற்றும் வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆனால் காவல்துறை திடீரென மேலும் விசாரணைக்கு செல்ல முடிவு செய்துள்ளது.

‘புதிய சான்றுகளின் அடிப்படையில்’ ஜெயலலிதா இறந்த சில மாதங்களுக்கு பிறகு கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், சிஆர்பிசி பிரிவு 173 இன் கீழ் ஒரு வழக்கை மேலும் விசாரிக்க விதிகள் உள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு!

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த சயனுக்கு கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அந்த குற்றத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  தொடர்பு இருப்பதாக செய்தியாளர்கள் பேட்டியில் கூறினா. அதன் பின்னர், 2019 ஆம் ஆண்டில் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

இந்த கொள்ளையை ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ் மற்றும் சயன் திட்டமிட்டதாக போலீசார் கூறினர். கனகராஜ் ஏப்ரல் 2017 இல் ஒரு விபத்தில் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் சயானும் கேரளாவின் பாலக்காட்டில் ஒரே நாளில் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்தனர்.

இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் ஐடிவிங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள்…. ஆதாரங்களுடன் அனைத்தர்கும் அதிர வைக்கும் விடைகள்…..  Game Over Bro' எனப் பதிவிட்டிருந்தார். கடந்த ஜூலை 20ஆம் தேதி அவர் இந்த பதிவை இட்டுள்ளார்.

அஸ்பையர் சுவாமிநாதனின் இந்த ’மர்ம’ ட்வீட்கள் குறித்து அவரிடமே கேட்டோம், ‘நம்பகத்தன்மை வாய்ந்த நபர் ஆதாரங்களைப் பற்றியும் கொலைக்குக் காரணமானவர்கள் பேசினது பற்றியும் சொன்னாங்க. கேட்கவே ரொம்ப ஷாக்கிங்காவும் பயமாகவும் இருந்தது’ எனக் கூறினார். 

இந்த நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலும் விசாரிக்க  முடிவு செய்துள்ள போலீசார், கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஊட்டி நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இதன்பிறகாவது கொடநாடு பங்களா கொலைகளின் மர்ம முடிச்சுகள் குறித்து வெளிவருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABP நாடு Exclusive: ‛எவிடென்ஸெல்லாம் ரொம்ப ஷாக்கா பயமா இருக்கு!’ - கோடநாடு கொலை குறித்து அஸ்பையர் சுவாமிநாதன்!

தலைப்பு செய்திகள்

சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
Embed widget