மேலும் அறிய

‛இவ்வளவு ஸ்ட்ராங்கா கட்டுனா நாங்க என்ன பண்ணுவோம்’ காட்பாடி கொள்ளை சம்பவத்தில் சுவாரஸ்யம்!

‛8 ஆண்டுகளுக்கு முன்பு,  இதே போல, இதே நபரின் கடையில் திருடு போனது குறிப்பிடத்தக்கது’

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் பாண்டு . இவர் திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.  இவருடைய மகன் அனில்குமார் வயது (24). இவர் சேர்காடு கூட்ரோட்டில் சொந்தமாக நகை அடகு கடை நடத்தி வந்துள்ளார். மேலும் இந்த அடகு கடையை ஒட்டி, ஜூஸ் கடையும் மற்றும் ஏடிஎம்.,மும் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கு பின்புறம் இடம் காலியாக முற்புதராக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார் அனில்குமார். மீண்டும் மறுநாள் அனில்குமார் வழக்கம்போல அடகு கடைக்கு வந்துள்ளார். அப்போது தான், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 


‛இவ்வளவு ஸ்ட்ராங்கா கட்டுனா நாங்க என்ன பண்ணுவோம்’ காட்பாடி கொள்ளை சம்பவத்தில் சுவாரஸ்யம்!

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், அடகு கடையின் பின்னால் இருந்து சுவற்றை துளையிட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அடகு கடையின் சுவர், கான்கிரீட் கொண்டு கட்டபட்டிருந்ததால் சுவற்றை உடைக்க முடியவில்லை. இதனால் அடகு கடை பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்டு, உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அடகு கடையின் பக்கவாட்டு சுவற்றை துளையிட்டு அடகு கடையின் உள்ளே சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நகை வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை உடைத்து, அதிலிருந்த தங்கநகைகள் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டுஅதிர்ச்சி அடைந்த அனில்குமார்,  இது குறித்து திருவலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அனில்குமாரிடம் விசாரணை நடத்தினர்.


‛இவ்வளவு ஸ்ட்ராங்கா கட்டுனா நாங்க என்ன பண்ணுவோம்’ காட்பாடி கொள்ளை சம்பவத்தில் சுவாரஸ்யம்!

 

விசாரணையில், 30 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 90 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துது.  இதன் மொத்த மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய்.  சம்பவ இடத்திற்கு வந்த ADSP சுந்தரமூர்த்தி, காட்பாடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முயன்ற போது கொள்ளையர்கள் சிசிடிவி  ஹார்டிஸ்கை கையோடு எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் ஏதேனும் சிசிடிவி காட்சிகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.


‛இவ்வளவு ஸ்ட்ராங்கா கட்டுனா நாங்க என்ன பண்ணுவோம்’ காட்பாடி கொள்ளை சம்பவத்தில் சுவாரஸ்யம்!

கொள்ளையர்களை பிடிக்க திருவலம் காவல் ஆய்வாளர் ஆனந்தன், லத்தேரி காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை தொடர்பாக திருவலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு,  இதே போல, இதே நபரின் கடையில் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget