மேலும் அறிய

Crime : மகளை கொன்று குளத்தில் குதித்து தற்கொலை முயற்சி.. ஆனால் உயிர் பிழைத்த தந்தை... நடந்தது என்ன?

கடன் தொல்லையால், தந்தை மகளை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் வசித்து வரும் ராகுல் என்பவர், ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தனது வேலையை இழந்துள்ளார். மேலும், கிரிப்டோகரன்சி முதலீட்டில் பல இழப்புகளை சந்தித்துள்ளார். இதனால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல், மிகவும் சிரமப்பட்டு உள்ளார். பின்னர் கடனை செலுத்தவதற்காக, உறவினர்களின் வீட்டில் இருந்த நகையை திருடியுள்ளார்.

குழந்தை கொலை:

நகை காணாமல் போனதால், கண்டுபிடித்து தருமாறு காவல் துறையில் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ராகுல், அவரது மகளை நவம்பர் 15 ஆம் தேதி பள்ளிக்கு கூட்டி செல்வது போன்று, அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர்  இருவரும் காணாமல் போனார்கள் என்று தகவல்கள் வெளியானது. 

பின்னர், அடுத்த நாள் காலை, ஏரியில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்ததையடுத்து, காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், ராகுலின் மகள் என்பது கண்டறியப்பட்டது. மேலும் குழந்தையை, அவரது தந்தை தான் கொலை செய்தார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். 

விசாரணை:

அவரிடம் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், அவர் தெரிவிக்கையில் வேலை இழந்து கடன் தொல்லையால் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், வீட்டிற்குச் சென்றால் எனது குழந்தை அழுகையுடன் காணப்படும். குழந்தைக்கு தேவையான உணவை கூட என்னால் வாங்கி தர முடியவில்லை. அதன் காரணமாகவே குழந்தையும் கொன்றும், நானும் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சி செய்தேன் என்றும், ஆனால் குளத்தில் அதிக தண்ணீர் இல்லாததால், அங்கிருந்து ஓடி சென்று விட்டேன் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மகளை தந்தை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Also Read: தனிநபர் கடன் தருவதாக கூறி கும்பகோணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: Bihar: பிகாரில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு தண்டணையாக 5 தோப்புக்கரணம் போட்டால் போதும் என தீர்ப்பு கொடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget