மேலும் அறிய

5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: தண்டனையாக தோப்புக்கரணம் போட சொன்ன பஞ்சாயத்து! அதிர்ந்த காவல்துறை

Bihar: பிகாரில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு தண்டணையாக 5 தோப்புக்கரணம் போட்டால் போதும் என தீர்ப்பு கொடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bihar: பிகாரில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை  செய்த குற்றவாளிக்கு தண்டணையாக 5 தோப்புக்கரணம் போட்டால் போதும் என தீர்ப்பு கொடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றங்கள் பல்வேறு தண்டைகளை வழங்கி  வரும் நிலையில், பிகார் மாநிலத்தில் நடந்துள்ள உள்ளூர் பஞ்சாயத்து கூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தண்டணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பஞ்சாயத்து சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க  குற்றவாளி, 5 வயது குழந்தைக்கு இனிப்பு தருவதாக கூறி அழைத்துச் சென்று, குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் குழந்தை தனது பொற்றோரிடம் தனக்கு நடந்ததைச் சொல்லி அழுதுள்ளது. இதனால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், தங்களது கிராமத்தில் உள்ள முக்கிய நபரைச் சந்தித்து தங்களது குழந்தைக்கு நடந்த துயரச் சம்பவத்தை பற்றி கூறியுள்ளனர். அதன் பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. அப்படி கூட்டப்பட்ட பஞ்சாயத்தில் குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி தனது குற்றத்தைக் ஒப்புக்கொள்ளவே, பஞ்சாயத்தில் குற்றவாளிக்கு தோப்புக்கரணம் தண்டனையாக கொடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளியும் தோப்புக்கரணம் போட்டுள்ளார். இதனை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளத்தில் பகிரவே, காட்டுத்தீ போல், அந்த வீடியோ வைரலானது. வீடியோ வைரலானதும், பிகார் மாநில காவல் துறையினர் கிராமத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பாலியல் வன்கொடுமையும், பஞ்சாயத்துக்கு கூட்டமும் நடைபெற்றுள்ளதை உறுதி செய்துள்ளனர். அதன் பின்னர் காவல் துறையினர் குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் மூலம் வழக்குன் பதிவு செய்துள்ளனர். வீடியோ வைரலானதும் பாலியல் குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். இதனால் குற்றவாளியை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் எனவும் பலர் கூறிவருகின்றனர். பாலியல் குற்றவாளி அந்த கிராமத்தில் உள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இந்த குற்றச் சம்பவத்தை சட்டப்படி கையாளாமல், உள்ளூர் பஞ்சாயத்தில் குற்றவாளிக்கு தோப்புகரணம் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறிவருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
Embed widget