மேலும் அறிய

ஏமாறாதீங்க..விழிப்புணர்வு தேவைங்க... கடன் தருவதாக கூறி ஓய்வு பெற்றஅரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி

தனிநபர் கடன் தருவதாக கூறி கும்பகோணத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்தது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் தனிநபர் கடன் வாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக பல வங்கிகளில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இவருடைய செல்போன் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் டெல்லியில் உள்ள நிதி நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் கடன் தருவதாக கூறப்பட்டு இருந்துள்ளது. மேலும் அதில் ஒரு செல்போன் எண்ணும் தொடர்புக்காக கொடுக்கப்பட்டு இருந்துள்ளது.

இதையடுத்து அந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அந்த மெசேஜில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது எதிர் முனையில் பேசிய மர்மநபர் கடன் தொகையை பெற பல்வேறு கட்டணங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தியுள்ளார்.

ஆனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேரவில்லை. இதனால் மீண்டும் அந்த எண்ணில் அந்த மர்மநபரை தொடர்பு கொண்டார். அப்போது மேலும் பணத்தை செலுத்தினால் கடன் தொகை தங்கள் வங்கி கணக்கிற்கு வந்து விடும் என்று மர்மநபர் தெரிவித்துள்ளார்.
 
இதன்படி பல்வேறு தவணைகளாக ரூ. 3 லட்சத்து 39 ஆயிரத்து 500-யை செலுத்தியுள்ளார் ஓய்வுபெற்ற அந்த அரசு ஊழியர் செலுத்தி உள்ளார். ஆனால் கடன் தொகை வந்து சேரவில்லை. இந்த நிலையில் அவருடைய செல்போன் எண்ணிற்கு மற்றொரு நிதி நிறுவனம் பெயரில் ரூ. 10 லட்சம் கடன் தருவதாக வந்த குறுந்தகவலின் பேரில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார்.

இப்படி வெவ்வேறு நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை பணம் செலுத்தியும், கடன் தொகை வராததால் தன்னை மோசடி செய்துள்ளனர் என்பதை அவர் அறிந்தார். இதுகுறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொபு) ராம்தாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏமாறாதீங்க... விழிப்புணர்வு தேவைங்க

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ”ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம். அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிபபுணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர்” என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget