![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Accident: மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ! லாரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பள்ளிக்குழந்தைகள் - ஆந்திராவில் சோகம்
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ, லாரி மீது மோதியதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![Accident: மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ! லாரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பள்ளிக்குழந்தைகள் - ஆந்திராவில் சோகம் an auto truck carrying school children collided with lorry in Visakhapatnam Andhra Pradesh Accident: மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ! லாரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பள்ளிக்குழந்தைகள் - ஆந்திராவில் சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/b9d0d49c627d33ff860b239e6d6dd90e1700634927091589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ லாரி மீது மோதியதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#WATCH | Andhra Pradesh: Eight students were injured in an accident when their auto collided with a lorry near Sangam Sarat Theatre in Visakhapatnam. The injured have been shifted to the hospital. Further details awaited. pic.twitter.com/MrcfwJzyfW
— ANI (@ANI) November 22, 2023
தூக்கி வீசப்பட்ட பள்ளி குழந்தைகள்:
விசாகப்பட்டினத்தில் இருக்கும் சங்கம் சாரத் திரையரங்கம் அருகே இன்று காலை வழக்கம் போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த லாரி மீது அந்த ஆட்டோ மோதியதில் அதில் பயணம் செய்த 8 குழந்தைகளும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி, சாலையில் வீசப்பட்ட குழந்தைகளை மீட்டனர். 8 குழந்தைகளில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மற்றவர்கள் காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
At least 8 children were seriously injured when the auto carrying them to school collided with a speeding truck in Visakhapatnam this morning. The truck driver and cleaner tried to flee but, auto drivers present there detained and handed them over to the police.#AndhraPradesh pic.twitter.com/wQtlGcujp7
— Ashish (@KP_Aashish) November 22, 2023
தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பப்வ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)