மேலும் அறிய

Crime: 1000 நாய்களை பட்டினிபோட்டு கொன்ற நபர்... காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்..!

தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை ஒருவர் கொன்று குவித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . 

தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை ஒருவர் கொன்று குவித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . 

செல்லப்பிராணிகள் வளர்ப்பது நம் அனைவரின் ஆசையாக இருந்தாலும்,  இருக்கின்ற இடம், காலநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நேரம் அந்த ஆசை நிராசையாகி விடும். அதேசமயம் அந்த செல்லப்பிராணியை வளர்க்க முடியாமல் எங்கேயாவது போய் விட்டு வந்தாலோ அல்லது அது உயிரிழந்தாலோ அதன் உரிமையாளர்களால் தாங்க முடியாத துயரம் ஏற்படும். ஆனால் தென் கொரியாவிலோ ஒருவர் 1000 செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட நாய்களை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென் கொரியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள யாங்பியோங்கில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன தனது சொந்த நாயை தேடிக்கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் நாய்களின் சிதைந்த சடலங்கள் தரையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பல நாய்களின் உடல்கள் சாக்குப்பைகளில் வைக்கப்பட்டிருப்பதை கண்டார். 

உடனடியாக இதுதொடர்பாக அந்த நபர் போலீசுக்கு புகாரளித்தார். இதன் விசாரணையின் முடிவில் 60 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் நாய்களை பட்டினி போட்டு கொன்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த முதியவர் இனப்பெருக்க வயதைக் கடந்த மற்றும் வியாபார ரீதியாக பெரிய விலை போகாத நாய்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து தான் அழிப்பதற்காக பெற்று வந்துள்ளார். இதற்காக 2020 ஆம் ஆண்டு முதல் நாய் ஒன்றுக்கு பராமரிப்பு செலவுக்காக மாதம் இந்திய மதிப்பில் ரூ.600 முதல் ரூ.800 பெற்றுக் கொண்டுள்ளார். 

ஆனால் அவற்றையெல்லாம் பட்டினி போட்டு கொன்றுள்ளார். அவரிடம் இருந்து ஆபத்தான நிலையில் சில நாய்களை மீட்ட காவல்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கடுமையான விலங்கு பாதுகாப்பு சட்டங்கள் அமலில் உள்ளது. அங்கு வேண்டுமென்றே ஒரு விலங்கிற்கு உணவளிக்கவோ அல்லது தண்ணீர் கொடுக்கவோ தவறி மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் வோன் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget