மேலும் அறிய

Crime: 1000 நாய்களை பட்டினிபோட்டு கொன்ற நபர்... காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்..!

தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை ஒருவர் கொன்று குவித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . 

தென் கொரியாவில் ஆயிரம் நாய்களை ஒருவர் கொன்று குவித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . 

செல்லப்பிராணிகள் வளர்ப்பது நம் அனைவரின் ஆசையாக இருந்தாலும்,  இருக்கின்ற இடம், காலநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில நேரம் அந்த ஆசை நிராசையாகி விடும். அதேசமயம் அந்த செல்லப்பிராணியை வளர்க்க முடியாமல் எங்கேயாவது போய் விட்டு வந்தாலோ அல்லது அது உயிரிழந்தாலோ அதன் உரிமையாளர்களால் தாங்க முடியாத துயரம் ஏற்படும். ஆனால் தென் கொரியாவிலோ ஒருவர் 1000 செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட நாய்களை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென் கொரியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள யாங்பியோங்கில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன தனது சொந்த நாயை தேடிக்கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் நாய்களின் சிதைந்த சடலங்கள் தரையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் பல நாய்களின் உடல்கள் சாக்குப்பைகளில் வைக்கப்பட்டிருப்பதை கண்டார். 

உடனடியாக இதுதொடர்பாக அந்த நபர் போலீசுக்கு புகாரளித்தார். இதன் விசாரணையின் முடிவில் 60 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் நாய்களை பட்டினி போட்டு கொன்றுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த முதியவர் இனப்பெருக்க வயதைக் கடந்த மற்றும் வியாபார ரீதியாக பெரிய விலை போகாத நாய்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து தான் அழிப்பதற்காக பெற்று வந்துள்ளார். இதற்காக 2020 ஆம் ஆண்டு முதல் நாய் ஒன்றுக்கு பராமரிப்பு செலவுக்காக மாதம் இந்திய மதிப்பில் ரூ.600 முதல் ரூ.800 பெற்றுக் கொண்டுள்ளார். 

ஆனால் அவற்றையெல்லாம் பட்டினி போட்டு கொன்றுள்ளார். அவரிடம் இருந்து ஆபத்தான நிலையில் சில நாய்களை மீட்ட காவல்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கடுமையான விலங்கு பாதுகாப்பு சட்டங்கள் அமலில் உள்ளது. அங்கு வேண்டுமென்றே ஒரு விலங்கிற்கு உணவளிக்கவோ அல்லது தண்ணீர் கொடுக்கவோ தவறி மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் வோன் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
Embed widget