மேலும் அறிய

டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு..!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது அவரது தொலைபேசி எண்ணுக்கு வீட்டு லோன் வேண்டுமா? குறைந்த வட்டியில் தருகிறோம் என்று அழைப்பு வந்த சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

குடியரசுத் தலைவராக பொறுப்பு வகிக்கும் முன்பு, பிரணாப் முகர்ஜி நாட்டின் நிதியமைச்சராக இருந்தபோது அவரது தொலைபேசி எண்ணுக்கு வீட்டு லோன் வேண்டுமா? குறைந்த வட்டியில் தருகிறோம் என்று ஒரு அழைப்பு வந்த சம்பவம் நடந்தது. அப்போது இச்செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதேபோல் உலகப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கும் இது போன்ற அழைப்பு வந்தது. 

நாட்டின் முன்னாள் நிதியமைச்சருக்கும், உலகப் பணக்காரருக்குமே இந்த நிலைமை என்றால் சாமான்ய மக்களின் நிலை? இதைக் கருத்தில் கொண்டுதான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டி.என்.டி. ( டூ நாட் டிஸ்டர்ப்) என்றொரு ஆப்ஷனைக் கொண்டு வந்தது. ஆனாலும் கூட புற்றீல்சல் போல் பெருகும் டெலிமார்க்கெடிங் நிறுவனங்களாலும், மோசடி செய்வதையே பிழைப்பாகச் செய்யும் ஆர்கனைஸ்டு க்ரைம் குற்றவாளிகளாலும் சாதாரண மக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனால் கட்டுப்பாடற்ற டெலிமார்க்கெடிங் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வகையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில், தொந்தரவு செய்யும் வகையில் அழைப்புகளையும், குறுந்தகவலையும் அனுப்பும்போது அபராதம் விதிக்கப்படும் என்று டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குத் தொலைதொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய விதிமுறையின்படி ஒரு டெலிமார்க்கெட்டிங் நிறுவனம் 10 முறைக்குள் இது போன்ற அத்துமீறலில் ஈடுபடால் ஆயிரம் ரூபாய் அபராதமும், 10லிருந்து 50 முறை வரையிலான அத்துமீறலில் ஈடுபட்டால் 5,000 ரூபாய் அபராதமும் 50-க்கு மேல் அத்துமீறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

அதுமட்டுமல்லாது தொலைதொடர்பு நெட்வொர்க் மூலம் அரங்கேற்றப்படும் குற்றங்களைக் கண்காணிக்க டிஜிட்டல் இன்டலிஜென்ஸ் யூனிட் மற்றும் டெலிகாம் அனாலிஸ்ட் ஃபார் ஃப்ராட் மேனேஜ்மெண்ட் அண்ட் கன்ஸ்யூமர் புரொடக்‌ஷன் ஆகிய இரண்டு சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு அமைச்சகத்தின் கீழ் பணியாற்றவுள்ள இந்த டிஜிட்டல் புலனாய்வு அமைப்புகள் விதிமுறைகளை மீறும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களைக் கண்காணிக்கும். அத்துமீறும் மொபைல் எண்களின் ஐ.எம்.இ.ஐ. கண்டறியப்பட்டு அவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த சரிபார்ப்புக்காக சந்தேகத்திற்கிடமான எண்களுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்படும். அதன் பின்னரும் அத்துமீறல் தொடர்ந்தால், அந்த எண்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு தொடர்புடைய IMEI கள் சந்தேகத்திற்கிடமான பட்டியலில் வைக்கப்படும். சந்தேகத்திற்கிடமான பட்டியலில் உள்ள IMEI களுக்கு 30 நாட்களுக்கு  அழைப்பு, எஸ்.எம்.எஸ். சேவையைக் கூட பயன்படுத்த முடியாது.

மேலும், வாடிக்கையாளர்கள் அடிக்கடி தங்களுக்குத் தொந்தரவு தரும் டெலிமார்க்கெடிங் நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் மீறி வாடிக்கையாளர்களை குறிவைக்கு டெலி மார்க்கெடிங் நிறுவனங்களின் தொலைதொடர்பு இணைப்புகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அடையாளம் மற்றும் முகவரி ஆதாரம் 2 வருட காலத்திற்கு ப்ளாக்லிஸ்ட் செய்யப்படும்.

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
Gold Silver Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (07.08.2026): வெள்ளிக்கிழமை பொன்னும் பொருளும் கொட்டுமா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget