மேலும் அறிய

Personal Loan Tips: தனிநபர் கடன் வாங்க போறீங்களா?.. கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள்.. மிஸ் பண்ணாதீங்க..

தனிநபர் கடன் வாங்க முற்படுபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

தனிநபர் கடன் வாங்க முற்படுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

தனிநபர் கடன்:

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெறுவது என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து தனிநபர் கடன், வீட்டு கடன், கார் கடன் என பல்வேறு பிரிவுகளில் வங்கிகள் கடன்களை வாரி வழங்கி வருகின்றன. அதற்கான வட்டி மூலம், வங்கிகள் கொள்ளை லாபம் பெற்று வருகின்றன. அதேநேரம், முறையாக மாதத்தவணை செலுத்தாவிட்டால் அதற்காக அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தனிநபர் கடன் பெறுவதற்கு முன்பாக வாடிக்கையாளர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

01. வட்டி விகிதம்:

தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் என்பது வீட்டுக்கடன் உள்ளிட்ட மற்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகம். காரணம் எந்தவொரு கூடுதல் பாதுகாப்பும் இன்றி வங்கிகள் இந்த தனிநபர் கடனை வழங்குகின்றன. எனவே வங்கிகளில் அதிகபட்சமாக 11 முதல் 16 சதவிகிதம் வரையில் கூட வட்டி வசூலிக்கப்படும். வங்கிகள் அல்லாத பிற நிதி நிறுவனங்களில் இதை விட கூடுதலாகவும் வட்டி வசூலிக்கப்படலாம். இதன் காரணமாக வட்டி விகிதம் தொடர்பான ஆவணங்களை கவனமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதேநேரம், நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்து, உங்களது நிறுவனம் டாப் லிஸ்டில் பட்டியலிடப்பட்டு இருந்தால், குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.

02. கால அவகாசம்:

தனிநபர் கடன் பெறும் ஒருவர் அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை தேர்வு செய்வதிலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட காலத்தை தேர்வு செய்வதன் மூலம் தவணைத்தொகையை குறைத்து, எளிதாக திருப்பி செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தும். ஆனால் குறுகிய காலத்தை தேர்வு செய்தால் நீங்கள் அதிக தவணைத்தொகையை கட்ட வேண்டும். நீண்ட கால அவகாசத்துடன் கூடிய தனிநபர் கடன் சிறந்ததாக இருக்கும் என்பதே நிதி ஆலோசகர்களின் பரிந்துரையாக உள்ளது. 

03. அபராத விவரம்:

மாத தவணையை முறையாக செலுத்தி வந்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஒருவேளை தாமதமானால் வங்கிகள் அதற்கு அபராதம் விதிக்கும். அதன்படி, வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், தவணை தொகையில் 5 முதல் 10 சதவிகிதம் வரை அபராதமாக வசூலிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தவணை செலுத்த தாமதமானால் விதிக்கப்படும் அபராதம் எவ்வளவு என்பதையும் ஆவணங்களில் ஆராய வேண்டும்.

04. பிரீ பேமண்ட் சார்ஜ்:

தனிநபர் கடன் பெறுபவர்களில் பெரும்பாலானோர் உடனடி அவசர தேவைக்காகவே அந்த வாய்ப்பை பயன்படுத்துகின்றனர். எனவே, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான தவணை மூலம் தான் கடனை அடைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக கையில் பணம் இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே, பிரீ பேமண்ட் மற்றும் ப்ரீ-க்ளோசர் முறையில் கடனை அடைக்கும் வாய்ப்பு வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அந்த தொகை எவ்வளவு என்பதையும் பயனாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

05. கிரெடிட் ஸ்கோர்:

எந்த வகையான கடனை பெறுவதற்கும் கிரெடிட் ஸ்கோர் மிகவும் முக்கியமானது. உங்கள் கடன் விண்ணப்பத்தை அனுமதிப்பது முதல் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவது வரையிலான அனைத்திற்கும் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வாடிக்கையாளரின் விண்ணப்பம் புராசசிங்கில் இருக்கும் போது, ​கிரெடிட் ஏஜென்சிகள் கிரெடிட் ஸ்கோரை ஆய்வு செய்வது பாதகமாக அமையலாம். இதன் காரணமாக ஒரே நேரத்தில் பல வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (27.08.2026): கேரளா காருண்யா லாட்டரி; இன்னிக்கு கோடியா தெருக்கோடியா?
LIVE | Kerala Lottery Result Today (27.08.2026): கேரளா காருண்யா லாட்டரி; இன்னிக்கு கோடியா தெருக்கோடியா?
Gold Silver Rate Today Aug.27th: ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
SCS Scheme: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ஓய்வுக்குப் பிறகு பணத்தை அள்ளித்தரும் சேமிப்பு திட்டம்!
SCS Scheme: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ஓய்வுக்குப் பிறகு பணத்தை அள்ளித்தரும் சேமிப்பு திட்டம்!
GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை உயர்வுக்கு பிரேக்.! அதிரடியாக குறைந்தது விலை- இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
தங்கம் விலை உயர்வுக்கு பிரேக்.! அதிரடியாக குறைந்தது விலை- இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
தனி மாவட்டமான சோழிங்கநல்லூர் - திமுகவில் 77 ஆக இருந்த மாவட்டங்கள் 110 ஆக உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு
CM Vijay: மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் கோரிக்கை
மக்கள் பாவம், 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் - CM விஜய் கோரிக்கை
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான ரேசில் வேகமெடுக்கும் CM விஜய், அப்ப கூட்டணி?
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
மாமல்லபுரம் மக்களே அலர்ட்! ரூ.40 ஷேர் ஆட்டோவுக்கு இனி எண்ட் கார்டு? வெளியானது அதிரடி கோரிக்கை!
Indian Railway: சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
சென்னை டூ மும்பை, ஹவுரா, டெல்லி.. 4 வழித்தடமாக மாற்ற ரயில்வே முடிவு - இனி பயணம் ரொம்ப ஈசி
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Embed widget