By: ர.முகமது இல்யாஸ் | Updated at : 31 May 2022 05:01 PM (IST)
செல்வமகள் சேமிப்பு திட்டம்
பெண் குழந்தைகளின் பெற்றோருக்கான அரசு உதவி பெற்ற சேமிப்புத் திட்டம் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம். பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் முதலான எதிர்காலத் திட்டங்களுக்காக பெற்றோர் பணம் சேமிப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய வட்டி விகிதம் 7.6 சதவிகிதமாக வழங்கப்படுகிறது. பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதை அடைவதற்குள், குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதலீடு செய்து இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தொடங்கலாம். மேலும், ஒரு நிதியாண்டில் தொடர்ந்து குறைந்தபட்சமாக 250 ரூபாய் என்ற அளவிலும், அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் என்ற அளவிலும் இந்தத் திட்டத்தில் பணம் செலுத்தலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா வங்கிக் கணக்கை அஞ்சல் நிலையங்கள், தனியார் வங்கிகளின் அதிகாரப்பூர்வ கிளைகள் ஆகியவற்றில் தொடங்கலாம். தொடங்கப்படுவது முதல் அடுத்த 21 ஆண்டுகள் வரை இந்தக் கணக்கைப் பயன்படுத்தலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் பரிமாற்றம் செய்ய முடியும். மேலும், கணக்குதாரரின் பெற்றோர் தங்களின் இருப்பிட மாற்றத்திற்கான ஆதாரங்களை அளிக்கும் போது, இந்தப் பரிமாற்றம் இலவசமானது.ஆதாரம் அளிக்கப்படாவிடில், இதற்காக 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தும் பெண் குழந்தைகள் 18 வயதை அடைந்தாலோ, பத்தாம் வகுப்பு முடித்தாலோ இந்தக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும், பணத்தை எடுக்கும் போது, மொத்தமாகவும், தவணை முறையிலோ, ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா வங்கிக் கணக்கைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காக அதனைத் தொடங்கிய 5 ஆண்டுகளில் மூடலாம்.
1. கணக்குதாரரின் மரணம். (இறந்த நாளில் இருந்து சேமிப்பு கணக்கை மூடும் நாள் வரையிலான வட்டி விகிதம் தொடரும்)
2. கணக்குதாரருக்கு உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் நோய்
3. கணக்குதாரரின் பெற்றோர்/காப்பாளர் மரணம்
இந்தக் காரணங்களுக்காக வங்கிக் கணக்கை மூடுவதற்கான விண்ணப்பங்களும், ஆவணங்களும் வங்கிகளும், அஞ்சல் நிலையங்களிலும் கிடைக்கின்றன.
சுகன்யா சம்ரித்தி யோஜனா வங்கிக் கணக்கைத் தொடங்கிய நாள் முதல் 21 ஆண்டுகள் முடியும் வரை, வட்டி விகிதம் சேர்க்கப்பட்டு மொத்தமாக தொகையாக சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதத்திற்கு ஏற்ப வட்டி சேர்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
EPS Rules Changed: இனி 6 மாதங்களே போதும்..! பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்..!
ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
SIP Calculator: ரூ.1000 இருந்தால் போதும்.. உங்கள் குழந்தைக்காக 14 லட்சத்தை உருவாக்க முடியும் - எஸ்ஐபி திட்ட விவரம் இதோ..!
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!