மேலும் அறிய

தொழிலாளர்கள் போராட்டம்; 5 நாட்கள் விடுமுறை அறிவித்தது ஹூண்டாய்

தொற்று அச்சுறுத்தல் காரணமாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என ஹுண்டாய் ஆலையில் தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தொழிற்சாலைக்கு 5 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர்கள் போராட்டம்; 5 நாட்கள் விடுமுறை அறிவித்தது ஹூண்டாய்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் காா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் இங்கு பணிபுரியும் தொழிலாளா்களில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் கடந்த இரண்டு வாரங்களில் 5 தொழிலாளா்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனா்.
இதனால் ஹுண்டாய் ஆலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் எனக் கோரி 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தொழிலாளா்கள் மற்றும் தொழிற்சாலை நிா்வாகத்தினா் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 25-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு ஆலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏற்கனவே தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் கூட இதில் மூடப்பட்டு பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இருப்பினும் உயிர் காக்கும் நடவடிக்கை என்பதால் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் விதிமுறைகளுடன் செயல்படுகிறோம் என்கிற பெயரில், சில பெரு நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி தொழிற்சாலைக்கு வரவழைக்கின்றனர். தொற்றுக்கு பெரு நிறுவனம், சிறு நிறுவனம் தெரியாது.


தொழிலாளர்கள் போராட்டம்; 5 நாட்கள் விடுமுறை அறிவித்தது ஹூண்டாய்

தவிர யாரிடத்தில் தொற்று இருக்கும் என்பது மற்றொருவருக்கு தெரியாது. அப்படிபட்ட நிலையில் பெரிய தொழிற்சாலைகளில் பலர் கூடினால், அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விதிமுறை என வரும் போது, அனைத்து நிறுவனங்களும் சமம் என்கிற அடிப்படையில் தொழிலாளர்கள் நலன் கருதி அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டையும் நிறுத்த வேண்டும். பெரும்பாலும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தான் பெரு நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படும் நிறுவனங்களின் ஊழியர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதால் பொதுவான ஊரடங்கை அனைத்து நிறுவனத்திலும் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. 

அதுமட்டுமின்றி பல தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, விடுப்பு கேட்பவர்களுக்கு பணி நீக்க மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. தமிழக அரசு இது குறித்து விரிவான விசாரணை நடத்தி தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
பிராணயாமம் வெறும் உடற்பயிற்சி அல்ல, அது ஒரு தினசரி பயிற்சி- பாபா ராம்தேவ்
பிராணயாமம் வெறும் உடற்பயிற்சி அல்ல, அது ஒரு தினசரி பயிற்சி- பாபா ராம்தேவ்
யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல.. மனம் மற்றும் சுவாசத்தை இணைக்கிறது - சுவாமி ராம்தேவ் அட்வைஸ்
யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல.. மனம் மற்றும் சுவாசத்தை இணைக்கிறது - சுவாமி ராம்தேவ் அட்வைஸ்
Gold Rate Today: ஒரே நாளில் ரூ.2400 உயர்வு.! தங்கம், வெள்ளி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த விலை
ஒரே நாளில் ரூ.2400 உயர்வு.! தங்கம், வெள்ளி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த விலை
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget