மேலும் அறிய

தொழிலாளர்கள் போராட்டம்; 5 நாட்கள் விடுமுறை அறிவித்தது ஹூண்டாய்

தொற்று அச்சுறுத்தல் காரணமாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என ஹுண்டாய் ஆலையில் தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தொழிற்சாலைக்கு 5 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர்கள் போராட்டம்; 5 நாட்கள் விடுமுறை அறிவித்தது ஹூண்டாய்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் காா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் இங்கு பணிபுரியும் தொழிலாளா்களில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் கடந்த இரண்டு வாரங்களில் 5 தொழிலாளா்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனா்.
இதனால் ஹுண்டாய் ஆலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் எனக் கோரி 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தொழிலாளா்கள் மற்றும் தொழிற்சாலை நிா்வாகத்தினா் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 25-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு ஆலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஏற்கனவே தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் கூட இதில் மூடப்பட்டு பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இருப்பினும் உயிர் காக்கும் நடவடிக்கை என்பதால் இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரத்தில் விதிமுறைகளுடன் செயல்படுகிறோம் என்கிற பெயரில், சில பெரு நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி தொழிற்சாலைக்கு வரவழைக்கின்றனர். தொற்றுக்கு பெரு நிறுவனம், சிறு நிறுவனம் தெரியாது.


தொழிலாளர்கள் போராட்டம்; 5 நாட்கள் விடுமுறை அறிவித்தது ஹூண்டாய்

தவிர யாரிடத்தில் தொற்று இருக்கும் என்பது மற்றொருவருக்கு தெரியாது. அப்படிபட்ட நிலையில் பெரிய தொழிற்சாலைகளில் பலர் கூடினால், அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விதிமுறை என வரும் போது, அனைத்து நிறுவனங்களும் சமம் என்கிற அடிப்படையில் தொழிலாளர்கள் நலன் கருதி அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டையும் நிறுத்த வேண்டும். பெரும்பாலும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தான் பெரு நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படும் நிறுவனங்களின் ஊழியர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதால் பொதுவான ஊரடங்கை அனைத்து நிறுவனத்திலும் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. 

அதுமட்டுமின்றி பல தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, விடுப்பு கேட்பவர்களுக்கு பணி நீக்க மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகிறது. தமிழக அரசு இது குறித்து விரிவான விசாரணை நடத்தி தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Zomato கட்டண உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்! சம்பளத்தைத்தவிர எல்லாமே ஏறுது..
Zomato கட்டண உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்! சம்பளத்தைத்தவிர எல்லாமே ஏறுது..
Kerala Lottery Result: வெள்ளிக்கிழமை மங்களம் பெருகுமா? ஸ்வர்ண கேரளா லாட்டரி முடிவுகள் இதோ!
Kerala Lottery Result: வெள்ளிக்கிழமை மங்களம் பெருகுமா? ஸ்வர்ண கேரளா லாட்டரி முடிவுகள் இதோ!
PNB Bank: ஏப்ரல் 15 கடைசி..! செயல்படாத வங்கிக் கணக்குகள் மொத்தமாக முடக்கம் - பயனர்களுக்கு வார்னிங், RBI
PNB Bank: ஏப்ரல் 15 கடைசி..! செயல்படாத வங்கிக் கணக்குகள் மொத்தமாக முடக்கம் - பயனர்களுக்கு வார்னிங், RBI
Kerala Lottery Result: கேரளா லாட்டரியில் இன்று அதிர்ஷ்டம் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் உடனுக்குடன்!
Kerala Lottery Result: கேரளா லாட்டரியில் இன்று அதிர்ஷ்டம் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் உடனுக்குடன்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
TVK Vijay: சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் - வதந்தி வாய்கள்
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
Kamal Haasan: விஜயை பார்க்குறது தான் எனக்கு வேலையா? - டென்ஷனான கமல்ஹாசன்!
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
Embed widget