மேலும் அறிய

Master Card | வாடிக்கையாளர்கள் இனி புதிய மாஸ்டர் கார்டுகளை பெற முடியாது : ரிசர்வ் வங்கி அறிவிப்பு! ஏன்?

இந்தியாவில் ஜூலை 22 ஆம் தேதி முதல் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் மூலம் இனிமேல் புதிய டெபிட் மற்றும் கிரெட் கார்டு வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தரவுகளைச் சேமிப்பதில் விதிமுறைகளை மீறியதன் காரணமாக, மாஸ்டர் கார்டு நிறுவனம் இனி புதிய வாடிக்கையாளர்களுக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்க முடியாது எனவும், ஜூலை 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கை முறைகளும் மாறிவருகிறது. குறிப்பாக வங்கிகளில் பணம் எடுப்பதற்கு வரிசையில் நின்ற காலங்கள் மறந்து தற்பொழுது ஏடிஎம் மையங்களைத்தான் நாம் அணுகிறோம். இதோடு மட்டுமின்றி ஷாப்பிங் செய்வதற்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.  பொதுவாக வங்கிகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூபே, விசா, மாஸ்டர் போன்ற டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இதனை ஏடிஎம் கார்டு என்றே அனைவரும் அழைக்கும் பழக்கம் உண்டு. இந்நிலையில் தற்பொழுது ரூபே, விசா, மாஸ்டர் என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது? என தெரிந்துகொள்வதோடு ஏன் மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது என அறிந்துகொள்வோம்.


Master Card | வாடிக்கையாளர்கள் இனி புதிய மாஸ்டர் கார்டுகளை பெற முடியாது : ரிசர்வ் வங்கி அறிவிப்பு! ஏன்?

ரூபே, விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை மக்கள் அதிகளவில் தற்பொழுது பயன்படுத்தும் Payment networking gateway சிஸ்டம் ஆகும். இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் விபரங்கள் இதில் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான்  நாம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் பணம் எடுக்கும் பொழுது விபரங்களை அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அதன் பின் பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறைதான் தற்பொழுது banking system  என்ற பெயரில் ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 இந்நிலையில் தான் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுளை விநியோகம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களின் தகவல் பாதுகாப்புகளை உள்ளடக்கிய சர்வர் இந்தியாவில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால்  ஆனால் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிப்பதில் மாஸ்டர் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதாகவும், இந்நிறுவனத்திற்கு அதிகமான அவகாசம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டப் போதிலும் பணம் செலுத்தும் முறை தொடர்பானத் தரவுகளை சேமிக்கும் சர்வர்களை இந்தியாவில் வைக்கவில்லை.

Master Card | வாடிக்கையாளர்கள் இனி புதிய மாஸ்டர் கார்டுகளை பெற முடியாது : ரிசர்வ் வங்கி அறிவிப்பு! ஏன்?

இதனையடுத்து தான் தற்பொழுது ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின் படி, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையினை ஜூலை 22 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதோடு ஏற்கனவே மாஸ்டர் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தடையும் கிடையாது எனவும் வழக்கம் போல இந்த கார்டுகளை தொடர்ந்து அவர்கள் உபயோகிக்கலாம் என தெரிவித்துள்ளது. குறிப்பாக விசா மற்றும் மாஸ்டர் கார்டு அமெரிக்க நிறுவனங்களாக உள்ள நிலையில், இந்தியாவில் அறிமுகமாகியது ரூபே எனப்படும் Payment networking gateway ஆகும். கிராமப்புற வங்கிகளிலும் இதன் சேவையினை கொண்டுவர வேண்டும் என்பதற்காக rupay Indian domestic gateway செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Kerala Bumper Lottery: வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget