மேலும் அறிய

விவசாயிகளே.. 6000 ரூபாய் நிதி வேண்டுமா..? அதற்கு ஆட்சியர் சொன்ன வழி இதுதான்...!

பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பயனடைய நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், பிரதமர் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் (PM-KISAN) கீழ் விவசாயிகள் பயனடைவதை உறுதிசெய்ய, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சொந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக தலா ரூ.2000/- வீதம் ரூ.6000/- வழங்கப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் சிறப்பு முகாம் 

இந்தத் திட்டத்தின் முழுப் பலனையும் விவசாயிகள் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் மே 1, 2025 முதல் மே 31, 2025 வரை சிறப்பு நிறைவுநிலை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் கிசான் திட்டம்

பிரதமர் கிசான் திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முக்கிய திட்டமாகும். இதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது நோக்கம். இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதி உதவி செலுத்தப்படுகிறது. இது விவசாயிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும், விவசாய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் தங்கள் இடுபொருள் செலவுகள், அன்றாட தேவைகள் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியும்.

முகாமின் முக்கிய அம்சங்கள்

மாவட்டம் முழுவதும் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்கள் விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கவும், புதிய வசதிகளைப் பெறவும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. 

இந்த முகாம்களில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்:

 

  • e-KYC பதிவு: PM-KISAN திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற e-KYC (மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு) பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

  • e-KYC பதிவு மேற்கொள்ளாத விவசாயிகள், இம்முகாம்களைப் பயன்படுத்தி தங்கள் பதிவை விரைந்து மேற்கொள்ளலாம். இது நிதியுதவி தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும்.

 

  • ஆதார்-வங்கிக் கணக்கு இணைப்பு: வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (India Post Payment Bank - IPPB) சேமிப்பு கணக்கு துவங்கி, ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். இது நிதியை நேரடியாகவும், பாதுகாப்பாகவும் பெறுவதற்கு வழியாகும்.

 

புதிய விவசாயிகள் இணைப்பு

இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத, ஆனால் தகுதியுடைய விவசாயிகள் இம்முகாம்களில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். புதிய பயனாளிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் வந்து இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

குறைகள் நிவர்த்தி 

ஏற்கனவே இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு ஏதேனும் குறைகள் (எ.கா: தவணைத்தொகை கிடைக்காதது, தகவல் பிழைகள்) இருப்பின், இம்முகாம்கள் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காண உதவுவார்கள்.

வாரிசுதாரர்கள் இணைப்பு: 

இத்திட்டத்தில் பயன் பெற்று வந்த விவசாயி இறந்திருப்பின், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, தற்போது அவர்களின் வாரிசுதாரர்களின் பெயரில் நிலம் மாற்றப்பட்டிருந்தால், அந்த வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் இணைவதற்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குடும்பத்திற்கு தொடர்ந்து நிதி உதவி கிடைப்பதை உறுதிசெய்யும்.

20வது தவணைத்தொகை மற்றும் விவசாயிகள் தனிப்பட்ட அடையாள எண்

வரும் ஜூன் 2025 ஆம் மாதத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 20வது தவணைத்தொகை விடுவிக்கப்பட உள்ளது. இந்த 20வது தவணைத்தொகை பெறுவதற்கு அனைத்து PM-KISAN திட்ட பயனாளிகளும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணை (Farmer ID) பெற்றிருத்தல் வேண்டும். இந்த அடையாள எண், விவசாயிகளின் தகவல்களை எளிதாக அணுகவும், அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும் உதவும். எனவே, மேற்கண்ட முகாம்களைப் பயன்படுத்தி e-KYC பதிவு, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல், நில விவரங்களை இணைத்தல் மற்றும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் போன்றவற்றை பெற்று விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட விவசாயிகளிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் மாட்டு சாணத்தை இயற்கை உரமாக்கி அசத்தல்
தஞ்சையில் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் மாட்டு சாணத்தை இயற்கை உரமாக்கி அசத்தல்
கும்பகோணம் விவசாயிகள் கோடை சாகுபடிக்காக தீவிரம்: களமிறங்கிய உழவர்கள்!
கும்பகோணம் விவசாயிகள் கோடை சாகுபடிக்காக தீவிரம்: களமிறங்கிய உழவர்கள்!
நேரடி நெல் கொள்முதல்: ஒரு மாதமாகியும் வராத பணம் - கண்ணீரில் தமிழக விவசாயிகள்!
நேரடி நெல் கொள்முதல்: ஒரு மாதமாகியும் வராத பணம் - கண்ணீரில் தமிழக விவசாயிகள்!
சிவகங்கை சிறையில் காய்கறி அறுவடை: மலிவு விலையில் தரமான காய்கறிகள்... பொதுமக்கள் ஆச்சரியம்!
சிவகங்கை சிறையில் காய்கறி அறுவடை: மலிவு விலையில் தரமான காய்கறிகள்... பொதுமக்கள் ஆச்சரியம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
Annamalai: போட்டியிட சீட் இல்லை.!
போட்டியிட சீட் இல்லை.! "மே 4-க்கு அப்புறம் பேசுவோம்“; அதிருப்தியில் அண்ணாமலை.? பாஜகவில் நடப்பது என்ன.?
Iran War Kuwait Hit: குவைத் எண்ணெய் கிணறு, குடிநீர் ஆலை மீது அட்டாக்; சுத்தி சுத்தி அடிக்கும் ஈரான்; கலக்கத்தில் அரபு நாடுகள்
குவைத் எண்ணெய் கிணறு, குடிநீர் ஆலை மீது அட்டாக்; சுத்தி சுத்தி அடிக்கும் ஈரான்; கலக்கத்தில் அரபு நாடுகள்
Mahindra Price Hike: SUV பிரியர்கள் ஷாக்..! மொத்தமாக விலையை உயர்த்திய மஹிந்த்ரா - எந்த காருக்கு எவ்வளவு?
Mahindra Price Hike: SUV பிரியர்கள் ஷாக்..! மொத்தமாக விலையை உயர்த்திய மஹிந்த்ரா - எந்த காருக்கு எவ்வளவு?
GOLD SILVER RATE Apr. 4th: போச்சுடா.! மறுபடியும் ஏறுமுகத்துக்கு போய்ட்டியா.? தங்கம் விலை இன்றும் உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
போச்சுடா.! மறுபடியும் ஏறுமுகத்துக்கு போய்ட்டியா.? தங்கம் விலை இன்றும் உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
Fronx, Nexon, Exter EMI Plan: மாருதி ஃபிரான்க்ஸ், டாடா நெக்ஸான், ஹூண்டாய் எக்ஸ்டர்; எந்த கார EMI-ல வாங்குனா மலிவா இருக்கும் தெரியுமா.?
மாருதி ஃபிரான்க்ஸ், டாடா நெக்ஸான், ஹூண்டாய் எக்ஸ்டர்; எந்த கார EMI-ல வாங்குனா மலிவா இருக்கும் தெரியுமா.?
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
Embed widget