மேலும் அறிய

விவசாயிகளே.. 6000 ரூபாய் நிதி வேண்டுமா..? அதற்கு ஆட்சியர் சொன்ன வழி இதுதான்...!

பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பயனடைய நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், பிரதமர் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் (PM-KISAN) கீழ் விவசாயிகள் பயனடைவதை உறுதிசெய்ய, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சொந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக தலா ரூ.2000/- வீதம் ரூ.6000/- வழங்கப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் சிறப்பு முகாம் 

இந்தத் திட்டத்தின் முழுப் பலனையும் விவசாயிகள் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் மே 1, 2025 முதல் மே 31, 2025 வரை சிறப்பு நிறைவுநிலை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் கிசான் திட்டம்

பிரதமர் கிசான் திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முக்கிய திட்டமாகும். இதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது நோக்கம். இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக நிதி உதவி செலுத்தப்படுகிறது. இது விவசாயிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும், விவசாய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள் தங்கள் இடுபொருள் செலவுகள், அன்றாட தேவைகள் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியும்.

முகாமின் முக்கிய அம்சங்கள்

மாவட்டம் முழுவதும் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்கள் விவசாயிகளுக்கு PM-KISAN திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கவும், புதிய வசதிகளைப் பெறவும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. 

இந்த முகாம்களில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்:

 

  • e-KYC பதிவு: PM-KISAN திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற e-KYC (மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு) பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

  • e-KYC பதிவு மேற்கொள்ளாத விவசாயிகள், இம்முகாம்களைப் பயன்படுத்தி தங்கள் பதிவை விரைந்து மேற்கொள்ளலாம். இது நிதியுதவி தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும்.

 

  • ஆதார்-வங்கிக் கணக்கு இணைப்பு: வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (India Post Payment Bank - IPPB) சேமிப்பு கணக்கு துவங்கி, ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். இது நிதியை நேரடியாகவும், பாதுகாப்பாகவும் பெறுவதற்கு வழியாகும்.

 

புதிய விவசாயிகள் இணைப்பு

இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாத, ஆனால் தகுதியுடைய விவசாயிகள் இம்முகாம்களில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். புதிய பயனாளிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் வந்து இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

குறைகள் நிவர்த்தி 

ஏற்கனவே இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு ஏதேனும் குறைகள் (எ.கா: தவணைத்தொகை கிடைக்காதது, தகவல் பிழைகள்) இருப்பின், இம்முகாம்கள் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காண உதவுவார்கள்.

வாரிசுதாரர்கள் இணைப்பு: 

இத்திட்டத்தில் பயன் பெற்று வந்த விவசாயி இறந்திருப்பின், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, தற்போது அவர்களின் வாரிசுதாரர்களின் பெயரில் நிலம் மாற்றப்பட்டிருந்தால், அந்த வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் இணைவதற்கு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குடும்பத்திற்கு தொடர்ந்து நிதி உதவி கிடைப்பதை உறுதிசெய்யும்.

20வது தவணைத்தொகை மற்றும் விவசாயிகள் தனிப்பட்ட அடையாள எண்

வரும் ஜூன் 2025 ஆம் மாதத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு 20வது தவணைத்தொகை விடுவிக்கப்பட உள்ளது. இந்த 20வது தவணைத்தொகை பெறுவதற்கு அனைத்து PM-KISAN திட்ட பயனாளிகளும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணை (Farmer ID) பெற்றிருத்தல் வேண்டும். இந்த அடையாள எண், விவசாயிகளின் தகவல்களை எளிதாக அணுகவும், அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும் உதவும். எனவே, மேற்கண்ட முகாம்களைப் பயன்படுத்தி e-KYC பதிவு, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல், நில விவரங்களை இணைத்தல் மற்றும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் போன்றவற்றை பெற்று விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட விவசாயிகளிடம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Nainar Nagendran: ”பாஜக கூட்டணியை மறந்துவிட்டார்கள், எடப்பாடி பழனிசாமி எனும் நான்” - நயினார் நாகேந்திரன் பேச்சு
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Mahindra XUV 7XO: காரில் தியேட்டர் மோட், 540 டிகிரி கேமரா, ADAS விசுவல் - XUV 7XO-ல் மஹிந்த்ராவின் டெக் மேஜிக்
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Crime News: 19 வயதில் 8 பேருடன் திருமணம்.. ஆந்திராவை அலற வைத்த இளம்பெண்!
Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!
Couple Divorce: திருமணம் செய்த 24 மணி நேரத்திற்குள் விவாகரத்து... இப்படியும் ஒரு ஜோடி!
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Embed widget