மேலும் அறிய

குளிர்பிரதேசங்களில் விளையும் பன்னீர் ஆப்பிளை தருமபுரியில் விளைவித்து அசத்தும் ஆசிரியர்

’’ஒரு செடிக்கு தற்போது 50 கிலோ வரை பன்னீர் ஆப்பிள் மகசூல் கிடைக்கும் நிலையில் நூறு செடிகளிலும் வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும்’’

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள திகிலோடு கிராமத்தை சேர்ந்த சரவணன், பாரம்பரிய விவசாயத்தை குடும்பத்தை சேர்ந்தவர். பாலக்கோட்டில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராக  தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார். தனது விவசாய நிலத்தில் சோளம், கேழ்வரகு, நெல், கம்பு, தக்காளி, கத்திரிக்காய், வெண்டை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார். ஆனால் எந்த பயிர் செய்தாலும் போதிய வருவாய் இல்லாமல், மிகுந்த நஷ்டத்தையே சந்தித்து வந்துள்ளார்.  இதனால் புதுமையான பயிர்களை தேர்வு செய்து, பயிரிடும் என எண்ணியுள்ளார். அப்பொழுது ஓசூர் சென்றபோது, உறவினர் ஒருவர் பன்னீர் ஆப்பிள் சாகுபடி செய்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர் சரவணன், பன்னீர் ஆப்பிள் சாகுபடி செய்யும் முறை குறித்து கேட்டறிந்துள்ளார். ஆனால் இந்த பயிர் குளிர் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்யமுடியும். தருமபுரி போன்ற வறட்சியான, தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வராது என தெரிவித்துள்ளனர்.

குளிர்பிரதேசங்களில் விளையும் பன்னீர் ஆப்பிளை தருமபுரியில் விளைவித்து அசத்தும் ஆசிரியர்
 
ஆனால் ஆர்வத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒசூரிலுள்ள நர்சரி ஒன்றில், நூறு பன்னீர் ஆப்பிள் செடிகளை வாங்கி வந்து தங்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தில், சிவப்பு, பச்சை, பச்சை சிவப்பு உள்ளிட்ட பன்னீர் ஆப்பிள் செடிகளை நட்டு வளர்த்து வந்துள்ளார். பன்னீர் ஆப்பிள் செடி வளர்ந்த இரண்டு வருடங்களிலேயே மகசூல் பிடித்தது. இது ஆண்டு  அறுவடைக்கு மூன்று முறை மகசூல் கிடைக்கிறது. இந்த பன்னீர் ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமுள்ளதால், ஜீரண கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குணப்படுத்தும், கர்ப்பிணிகள் உண்பதால், சுக பிரசவம் நடைபெறும். இதுபோன்ற  மருத்தவ குணம் கொண்டதால், மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தோட்டத்திற்கே வந்து  வியாபாரிகள் பொதுமக்கள் நேரடியாக வந்து வாங்கி செல்வதால் விற்பனை வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது. 

குளிர்பிரதேசங்களில் விளையும் பன்னீர் ஆப்பிளை தருமபுரியில் விளைவித்து அசத்தும் ஆசிரியர்
 
இதில் சிகப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட இரண்டு வகையான பன்னீர் ஆப்பிள் விலை ஐம்பது ரூபாய், மற்ற ரகங்கள் ரூ.70 முதல் 100 விற்பனையாகிறது. ஒரு செடிக்கு தற்போது 50 கிலோ வரை பன்னீர் ஆப்பிள் அறுவடை செய்து வருகின்றனர். இதனால் நூறு செடிகளிலும் வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்ட முடியும் என நம்பிக்கையோடு தெரிவி்க்கிறார்.  மேலும் இந்த பன்னீர் ஆப்பிள் சாகுபடிக்கு பராமரிப்பு மற்றும் கூலியாட்கள் தேவை முற்றிலுமாக இல்லை. இதனை கணவன், மனைவி இருவரே பராமரித்து அறுவடை செய்து வருகின்றனர். மேலும் இவர்களே பன்னீர் ஆப்பிள் செடிகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மலை பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய பன்னீர் ஆப்பிள் வறட்சியான தருமபுரி மாவட்டத்திலும் நன்கு வளர்ந்து லாபம் கொடுக்கிறது.  இதரால் கூலியாட்கள் பற்றாக்குறை, விவசாயத்தில் நஷ்டம் சந்தித்து வரும் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை தெரியப்படுத்தினால், விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என விவசாயிகள கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget