மேலும் அறிய

30 நிமிட MEETING! ராமதாஸை சந்தித்த EPS! மாறும் கூட்டணி கணக்குகள்?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸ்-ஐ சந்தித்து 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இபிஎஸ். ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் இருக்கும் நேரத்தில் கூட்டணி கணக்கில் முக்கிய ட்விஸ்ட் நடக்கப் போவதாக சொல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணியிடம் இருந்து தலைவர் பதவியை பறிப்பதாக ராமதாஸ் அறிவித்தாலும் பொதுக்குழுவின் முடிவால் அன்புமணியே தலைவராக இருந்தார். அதேபோல் அன்புமணியே 2026 ஆகஸ்ட் வரை தலைவராக தொடர்வார் என்ற பொதுக்குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அந்த வகையில் தற்போது கட்சியும், சின்னமும் அன்புமணி வசமே இருப்பதால் தேர்தலில் ராமதாஸ் தரப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி வந்தது.

இந்தநிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை மகனுக்கு இடையே மோதல் இருந்தாலும் ராமதாஸ்-ஐ பார்ப்பதற்காக உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார் அன்புமணி. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என அடுத்தடுத்து ராமதாஸ்-ஐ நேரில் சந்தித்தனர்.

இபிஎஸ் ராமதாஸ்-ஐ சந்தித்து 30 நிமிடங்கள் பேசியதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தையை பாமக எம்.எல்.ஏ அருள் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பான அவரது சமூகவலைதள பதிவில், ‘மருத்துவர் ஐயா அவர்களுடன் எடப்பாடியார் தனிமையில் 30 நிமிடம் பேசியது உண்மை தான். என்னனு எனக்கு எப்படி தெரியும்” என தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் இருப்பதால் இன்னும் கூட்டணி முடிவுக்கு வராமல் இருக்கிறது. அன்புமணி அதிமுக கூட்டணியையே விரும்புவதாகவும், அதற்கு ராமதாஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. ராமதாஸ் திமுக பக்கம் சாய்வதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருந்தது. இந்தநிலையில் இபிஎஸ் ராமதாஸை சந்தித்து பேசியதன் மூலம் கூட்டணி விவகாரம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி வருகிறது.

அன்புமணி அதிமுக கூட்டணியையே விரும்புவதால் விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகவிருப்பதாக சொல்கின்றனர். கட்சியும் சின்னமும் அன்புமணியிடம் இருப்பதால் ராமதாஸ் தரப்பும் ஒன்றுசேர்வதற்கான வாய்ப்பே அதிகம் இருப்பதாக தெரிகிறது. ராமதாஸ் அன்புமணி இடையிலான பஞ்சாயத்து முடிவுக்கு வந்து இருவரும் ஒன்றுசேர்ந்து தேர்தலை சந்திப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர். இபிஎஸ் சந்திப்பும் அதற்கான அச்சாரமா என பாமக தரப்பில் பேச்சு இருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

School Holiday: நாளை பள்ளிக்கு போக வேண்டாம்! திங்கட்கிழமையே விடுமுறை அறிவித்த கல்வித்துறை
School Holiday: நாளை பள்ளிக்கு போக வேண்டாம்! திங்கட்கிழமையே விடுமுறை அறிவித்த கல்வித்துறை
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ABP Nadu Top 10, 30 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 30 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget