மேலும் அறிய

”திமுக சூழ்ச்சியில் ராமதாஸ்!விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்?”பகீர் கிளப்பும் அன்புமணி!

திமுக தான் பாமகவுக்கு எதிரி எனக் கூறியுள்ள அன்புமணி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் வர என்னக் காரணம்? அவரை தீய சக்தி ஒன்று இயக்கிக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பாமகவின் உட்கட்சி மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சமூக ஊடகங்களில் ராமதாஸ் அணியினர் மற்றும் அன்புமணி அணியினர் என இரு தரப்பினராக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது. 

கூட்டத்தில் பேசிய அன்புமணி ஐந்து ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை. அய்யா அய்யாவாக இருந்தால்  எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். யாரும் பாமக நிறுவனர் ராமதாசை விமர்சனம் செய்யக்கூடாது என தெரிவித்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார். அவருக்கு பிறகுதான் நான் தலைவராக வேண்டுமென நான் அப்போதே முடிவெடுத்து விட்டேன்.  அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமதாஸ் அவராகவே இல்லை. ஒரு மகனாகவும்,  மருத்துவராகவும் சொல்கிறேன் அவர் இப்போது குழந்தை போல் இருக்கிறார் என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுய லாபத்திற்காக, அதை பயன்படுத்திக் கொள்கின்றனர். அது தெரிந்த பிறகு தான் நான் தலைவராவதற்கு ஒப்புக்கொண்டேன். யாரும் சமூக ஊடகங்களில் ராமதாசை விமர்சனம் செய்யக்கூடாது என ஊடகப் பேரவை நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கட்டளையிட்டார்.
 
பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை பேசியபோது மூன்று முறை ராமதாஸிடம் பேசினேன். அப்போதெல்லாம் பாஜகவுடன் கூட்டணி பேசு என்று தான் கூறினார். அதன் பிறகு திடீரென சிவி சண்முகத்துடன் சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகும் அது குறித்து அவரிடம் கேட்டேன். பத்திரிக்கை வைக்க வந்ததாகவே கூறினார். சி.வி. சண்முகத்துடன் அப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றதற்கு காரணம் அங்கிருந்த விஷ கிருமிகள் தான் காரணம். அதிமுகவுடன் கூட்டணி பேசு என்று கூறினாலும் பேசி இருப்பேன். பாஜக விடும் கூட்டணி குறித்து மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தை நடந்தது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

திமுக தான் முதல் எதிரி, மருத்துவர் ராமதாஸ் குழந்தை மாதிரி. அவரை தீய சக்தி ஒன்று இயக்கிக் கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் ராமதாஸ்  பற்றி தவறாக போடக்கூடாது என ஊடகப் பேரவினருக்கு கட்டளை  என தெரிவித்தார்.  செல்வப்பெருந்தகை மற்றும் திருமாவளவன் ஆகிய இருவருக்கும் திடீரென ராமதாஸ் மீது ஏன் பாசம் என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறுபதாவது திருமண நாள் விழாவின்போது தொலைபேசியில் கூற நான் பேசவில்லை என ராமதாஸ் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அம்மாவிடம் திருமண நாள் அன்று பேசினேன். தொடர்ந்து அம்மாவிடம் வர முடியாத சூழல் குறித்து எடுத்துக் கூறினேன்.‌ அப்போது அம்மா எனக்கு ஆறுதல் கூறினார்கள். நான் தொலைபேசியில் கூட பேசவில்லை என்று கூறுவது உண்மை இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை
பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த காதலன் ! துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய தந்தை

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget