மேலும் அறிய

Thiruvallur Tourist Places: கோயில் முதல் ஏரி வரை! திருவள்ளூரில் சுற்றிப் பார்க்க இத்தனை இடங்களா? முழு லிஸ்ட்

Thiruvallur District Tourist Places: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த மற்றும் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலங்கள் பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Tiruvallur District Tourist Places in Tamil: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்கள் பற்றிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்:

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து மாவட்டங்களில் ஒன்று திருவள்ளூர். தொழில்துறை மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள், வணிக நிறுவனங்கள், மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவை தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியலிலும், கோயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வீர ராகவ சுவாமி கோயில்:

திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவசுவாமி கோயில் என்பது இந்துக் கடவுளான விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு விஷ்ணு வீரராகவப் பெருமாள் என்றும், அவரது மனைவி லட்சுமி கனகவல்லி தாயார் என்றும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக முதலில் நம்பப்படுகிறது . இங்கு 9 ஆம் நூற்றாண்டின் பல்லவ வம்சத்தின் பிற்பகுதியில் உள்ள கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று உள்ளூர் புராணங்கள் கூறுகின்றன. இக்கோயில் ஏழு நிலை ராஜகோபுரத்தை கொண்டுள்ளது. கோயிலில் ஆறு தினசரி சடங்குகள் மற்றும் ஆண்டுக்கு மூன்று  திருவிழாக்கள் கடைபிடிக்கப்படுகின்றன. தமிழ் மாதமான சித்திரையில் (மார்ச்-ஏப்ரல்) கொண்டாடப்படும் தேர் திருவிழா மற்றும் பவனி திருவிழா இக்கோயிலின் மிக முக்கியமான திருவிழாவாகும்.

திருத்தணி முருகன் கோயில்:

திருத்தணி முருகன் கோயில்முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருத்தணி பகுதியில் உள்ள பொதிகை மலை மீது இந்த கோயில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, இந்த கோயில் 365 படிகளைக் கொண்டுள்ளது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும்.  இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்

சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் உள்ளன. இக்கோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் உள்ளன. இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன், இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

பழவேற்காடு ஏரி (புலிகாட் ஏரி)

புலிகாட் ஏரி என அறியப்படும் பழவேற்காடு ஏரி,  இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி ஆகும். இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ளது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும், வட மேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது. பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகத்திற்கு, அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் வ்வொரு ஆண்டும், ஆயிரகணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன. இது சுற்றுலா பயணிகளை கவர்வதோடு, படகு சவாரியும் முக்கிய அம்சமாக திகழ்கிறது.

கோரமண்டல் கடற்கரையில் உள்ள 600 ஆண்டுகள் பழமையான பழவேற்காட்டில் இருந்து,  கிழக்கு திசையில் உள்ள நாடுகளுடன் வர்த்தகம் செய்ய டச்சுக்காரர்கள் 1609 ஆம் ஆண்டில் “குல்டிரா” என்ற கோட்டையை கட்டினார்கள். அந்த பகுதிக்காக டச்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் பல போர்கள் நடந்தது. இறுதியில் பிரிட்டிஷ்காரர்கள் 1825 ஆம் ஆண்டு பழவேற்காடை கைப்பற்றினர். 

பூண்டி நீர்தேக்கம்:

1944 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை நதி நீரை இடைமறித்து,  2573 டி.எம்.சி. நீரை சேமிக்க பூண்டி கால்வாய் கட்டப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் அரசியல் ஆலோசகராக இருந்த, சத்யமூர்த்தியை நினைவுகூறும் விதமாக பூண்டி நீர்தேக்கத்திற்க்கு சத்தியமூர்த்தி சாகர் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நீர் தேக்கம் சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பதோடு, முழு கொள்ளளவை எட்டும்போது கண்கொள்ளா காட்சியை வழங்கக் கூடிய சுற்றுலா தளமாகவும் உள்ளது.

புவியியல் வல்லுநரான சர் ராபர்ட் புரூஸ் ஃபுட் அவர்களால் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் குடியம் குகை திருவள்ளூர் தாலுக்காவில் பூண்டிக்கு அருகில் உள்ளது. இதைசார்ந்து, கடந்த 1985ம் ஆண்டு, திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் அரசு தொல்பொருளியல் திணைக்களம், பூண்டி மற்றும் பிற பகுதிகளிலும் காணப்படும் வரலாற்றுக்கு முந்தைய வரலாற்று சின்னங்களின் சிறப்பம்சங்களுக்குரிய அருங்காட்சியகமாகும். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.

மேற்குறிப்பிடட்டவை மட்டுமின்றி பெரியாபாளையம் பவானி அம்மன் திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில் உள்ளிட்டவையும், திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களாக உள்ளன.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
Tamilnadu Roundup: முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
Gold Rate Peaks: இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
America Threatens India: ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
Tamilnadu Roundup: முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
Gold Rate Peaks: இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
America Threatens India: ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
DMK Statement: “எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
“எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Embed widget