மேலும் அறிய

Twitter Controversy : இதுதான் கடைசி எச்சரிக்கை - ட்விட்டருக்குக் கடைசி நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!

ஒத்துழைக்காத நிலையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பெற்றுவந்த விலக்குகளை இழக்க நேரிடும் என்று அரசு எச்சரித்துள்ளது. எனினும் இதற்கான கால அவகாசம் எதுவும் அந்த நோட்டீஸில் இடம்பெறவில்லை. 

இந்தியாவின் புதிய ஐ.டி. கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஒத்துழைக்கும்படி மத்திய அரசு ட்விட்டருக்கு கடைசியாக ஒருமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒத்துழைக்காத நிலையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பெற்றுவந்த விலக்குகளை இழக்க நேரிடும் என்று அரசு எச்சரித்துள்ளது. எனினும் இதற்கான கால அவகாசம் எதுவும் அந்த நோட்டீஸில் இடம்பெறவில்லை. 

முன்னதாக, இந்தியாவில் கடந்த 25ஆம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்தன. இதை முதலில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்க மறுத்தன. பின்னர் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய விதிகளை ஏற்று கொள்வதாக கூறி மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. எனினும் ட்விட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதில் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் புதிய விதிகளை ஏற்றுகொள்ளாததால் அதன்மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். 


Twitter Controversy : இதுதான் கடைசி எச்சரிக்கை - ட்விட்டருக்குக் கடைசி நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு!

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர் ஐஏஎன்எஸ்  செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்திருந்தார். அதில், "நாங்கள் இந்தியாவில் உள்ள சட்டம் மற்றும் விதிகளை மதித்து நடக்க உள்ளோம். எனினும் எங்களுடைய தளத்தில் எப்போதும் வெளிப்படைத் தன்மை மற்றும் தனிநபர் உரிமை பாதுகாப்பு ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம். அத்துடன் எங்கள் தளத்தில் அனைவரும் கருத்து தெரிவிக்கும் கருத்து சுதந்திரமும் முறையாக கடைபிடிக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார். 

ஏற்கெனவே ஃபேஸ்புக்கும், வாட்ஸ் அப் நிறுவனங்கள் இந்த புதிய விதிகளை ஏற்று கொண்டன. இந்தச் சூழலில் தற்போது ட்விட்டரும் ஏற்றுக் கொள்ள உள்ளது. இதற்கு முன்பாக இந்தியாவின் புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள ட்விட்டர் மத்திய அரசிடம் மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டது என்ற செய்திகள் வெளியாகின. இந்தச் சூழலில் செய்தித் தொடர்பாளரின் தகவல் ட்விட்டர் நிறுவனத்தின் கருத்தை தெளிவுப்படுத்தியது. 

முன்னதாக ட்விட்டர் விவகாரம் தொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "ஒரு நாட்டில் நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டில் உள்ள அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களையும் ஏற்று நடக்க வேண்டும். அப்படி மதிக்கவில்லை என்றால் நாட்டில் தொழில் செய்ய கூடாது. இந்தப் புதிய விதிகள் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகிறது. அதை நாங்கள் தற்போது கேட்க தயாராக இல்லை.

ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் 9 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் கொண்டுள்ளது. ஆகவே இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்பட மத்திய அரசின் விதிகளை ஏற்று நடக்கவேண்டும்.ட்விட்டர் நிறுவனம் நம் நாட்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்கவில்லை என்றால் அந்த விவகாரம் தொடர்பாக அரசு ஆலோசித்து ஒரு முடிவை எடுக்கும். அப்போது அரசு எடுக்கும் முடிவை ட்விட்டர் நிறுவனம் ஏற்றுதான் ஆகவேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். 

Also Reads:இந்தியாவின் புதிய ஐடி விதிகளை ஏற்போம்..ஆனால்.. - ட்விட்டர் விளக்கம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஸ்மார்ட்போன் தண்ணீரில் நனைந்தால் என்ன செய்வது? - செய்யக்கூடாத 5 தவறுகள்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்
ஸ்மார்ட்போன் தண்ணீரில் நனைந்தால் என்ன செய்வது? - செய்யக்கூடாத 5 தவறுகள்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்
Oneplus Shutdown: ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஷாக்.! நிறுவனம் மூடப்படுவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்; என்னதான் ஆச்சு.?
ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஷாக்.! நிறுவனம் மூடப்படுவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்; என்னதான் ஆச்சு.?
WhatsApp-ல் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் இல்லாமலேயே மெசேஜ் செய்யலாம் - எப்போது அறிமுகம்?
WhatsApp-ல் அதிரடி மாற்றம்: இனி போன் நம்பர் இல்லாமலேயே மெசேஜ் செய்யலாம் - எப்போது அறிமுகம்?
உங்கள் iPhone-ஐ குறிவைக்கும் DarkSword: பாஸ்வேர்டு திருட்டு பயம்! உடனே அப்டேட் செய்ய வேண்டியது ஏன்?
உங்கள் iPhone-ஐ குறிவைக்கும் DarkSword: பாஸ்வேர்டு திருட்டு பயம்! உடனே அப்டேட் செய்ய வேண்டியது ஏன்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
China US Iran War: அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
Top 10 News Headlines: அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார், பெட்ரோல் டீசல்-வரி குறைப்பு, ஈரான் போரில் சீனா - 11 மணி செய்திகள்
Petrol Diesel Price to Reduce?: குறையும் பெட்ரேல், டீசல் விலை.? கலால் வரியை குறைத்த மத்திய அரசு; டீசலுக்கு முழுமையாக ரத்து
குறையும் பெட்ரேல், டீசல் விலை.? கலால் வரியை குறைத்த மத்திய அரசு; டீசலுக்கு முழுமையாக ரத்து
DMK Alliance: எண்ணிக்கை தான் கிடைக்கல? தொகுதியாச்சும் வருமா? திமுக கூட்டணி எதிர்பார்ப்பு - ஸ்டாலின் அறிவிக்கிறார்
DMK Alliance: எண்ணிக்கை தான் கிடைக்கல? தொகுதியாச்சும் வருமா? திமுக கூட்டணி எதிர்பார்ப்பு - ஸ்டாலின் அறிவிக்கிறார்
Ponraj Apology to TVK: அப்படி வாங்க வழிக்கு; தவெக பெண் தொண்டர்களை இழிவுபடுத்திய விவகாரம்; மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்
அப்படி வாங்க வழிக்கு; தவெக பெண் தொண்டர்களை இழிவுபடுத்திய விவகாரம்; மன்னிப்பு கேட்ட பொன்ராஜ்
Embed widget