மேலும் அறிய

Sundar Pichai: இதுதான் என் அப்பா; எனக்கு அனுப்புன முதல் இ-மெயில்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு சுவாரஸ்யத்தை பகிர்ந்த சுந்தர்!

கடந்த 25 ஆண்டுகளில் தொழில்நுட்பம் என்பது எவ்வளவு முக்கியமானதாக மாறியது என்பது குறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பேசியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளில் தொழில்நுட்பம் என்பது எவ்வளவு முக்கியமானதாக மாறியது என்பது குறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பேசியுள்ளார். 

ஒவ்வொரு மனிதனும் தாங்கள் முதலில் பயன்படுத்திய செல்போன், சைக்கிள், பைக் என எல்லாருக்கும் ஸ்பெஷலாகவும், மறக்கமுடியாததாகவும் இருக்கும். அந்தவகையில், கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தனக்கு வந்த முதல் இ-மெயில் குறித்தும், அது யாரிடமிருந்தும் தனக்கு வந்தது என்பதும் குறித்தும் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கடந்த சில நாட்களுக்கு முன்பு, கூகுள் நிறுவனத்தின் 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த நிகழ்ச்சியில் பேசிய சி.இ.ஓ சுந்தர் பிச்சை கடந்த 25 ஆண்டுகளில் தொழில்நுட்பம் என்பது எவ்வளவு முக்கியமானதாக மாறியது என்பது குறித்தும், எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பது குறித்தும் பேசினார். 

என்ன பேசினார் சுந்தர்பிச்சை..? 

தனது முதல் மெயில் குறித்து பேசிய சி.இ.ஓ சுந்தர் பிச்சை, “நான் அமெரிக்காவில் படித்து கொண்டிருந்தபோது, என்னுடைய அப்பா இந்தியாவில் முதன்முதலாக தனக்கென ஒரு இ-மெயில் ஐடியை உருவாக்கினார். இதன்மூலம், என் அப்பாவுடன் எளிய முறையில் விரைவாக தொடர்புகொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம் என ஆச்சரியப்பட்டேன். இதையடுத்து, என்னுடைய இ-மெயில் ஐடியை அவருக்கு அனுப்பினேன். 

நானும் அவரிடம் இருந்து மெயில் வந்துவிடும் என்று மிக ஆவலாக இரண்டு நாட்களாக காத்திருந்தேன். ஆனால், இரண்டு நாட்களாக அப்படி எதுவும் வரவேயில்லை. சரியாக மூன்றாவது நாள் என் அப்பாவிடம் இருந்து பதில் மெயில் வந்தது. அதில், ‘அன்புள்ள திரு.பிச்சை, மின்னஞ்சல் கிடைத்தது, அனைவரும் நலம்’ என்று இருந்தது. 

வந்த பதில் மெயில் ஏதோ மகனுடன் பேசுவது போல் இல்லாமல், அலுவல் ரீதியாக இருந்ததால் பயந்துபோய் அப்பாக்கு போன் செய்து என்னவென்று கேட்டேன். அப்போது போனில் எனது அப்பா, ‘நண்பரின் அலுவலகத்தில் இருந்து நீ அனுப்பிய மெயில் பிரிண்ட் அவுட் எடுத்து வந்து என்னிடம் கேட்டார். அதை என் அப்பா படித்துவிட்டு, அதற்கு ரீப்ளை செய்வதற்குள் லேட் ஆகிவிட்டது’” என்று தெரிவித்தார். 

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே தன் அப்பா தனக்கு இ-மெயில் அனுப்பியதையும், அந்த நாளிலிருந்து தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று பெருமை கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், “தொழில்நுட்பத்தை இன்றைய தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிவிரைவாக கற்றுக் கொள்கிறார்கள். வாட்ஸ் மூலம் போன் ஆன் செய்து பேசுவது, ஆடியோ சென்சார் மூலம் காரில் உள்ள பாடலை ஒலிக்கவிடுவது எனனுடைய அப்பாவிற்கு இது மாயாஜாலமாக இருந்ததோ, அதை தற்போது என் மகன் அசால்ட்டாக கையாள்கிறான்” என்று தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Samsung Galaxy S26 Ultra ரூ.44,980-க்கு? வங்கி, Exchange சலுகையால் விலை குறையும் முழு விவரம்!
Samsung Galaxy S26 Ultra ரூ.44,980-க்கு? வங்கி, Exchange சலுகையால் விலை குறையும் முழு விவரம்!
Galaxy S27 Pro, Ultra-வில் 60W சார்ஜிங்! பேட்டரி திறனிலும் சாம்சங் தரும் புதிய அப்டேட்!
Galaxy S27 Pro, Ultra-வில் 60W சார்ஜிங்! பேட்டரி திறனிலும் சாம்சங் தரும் புதிய அப்டேட்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மொபைல் போன் திடீர் அனுமதி... காரணம் தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மொபைல் போன் திடீர் அனுமதி... காரணம் தெரியுமா?
Galaxy போன் வைத்திருக்கிறீர்களா? வந்துவிட்டது One UI 9 அப்டேட்.. என்னென்ன புதிய அம்சங்கள் தெரியுமா?
Galaxy போன் வைத்திருக்கிறீர்களா? வந்துவிட்டது One UI 9 அப்டேட்.. புதிய அம்சங்கள் தெரியுமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "பவளவிழா பாப்பா.. கோயில் நிலத்தை சுருட்டி பாக்கெட்டில் போட்ட திமுக.." தாறுமாறாக விமர்சித்த தவெக
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Embed widget