மேலும் அறிய

எச்சரித்த மத்திய அரசு : ப்ரைவசி பாலிசியை திரும்பப்பெறுமா Whatsapp?

வாட்ஸ்-அப்பின் இந்த புதிய பிரைவசி பாலிசி  இந்திய தொழில் நுட்பக்கொள்கைக்கு எதிராக உள்ளது என தெரிவித்த மின்னணு மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சகம்  இதனை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனிமனித ரகசியம் காக்கும் விஷயம் என்பதால் பிரைவசி பாலிசியை திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டி வாட்ஸ் அப் தரப்பிற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் வாட்ஸ் அப் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித முறையான பதிலும் வரவில்லை.


எச்சரித்த மத்திய அரசு : ப்ரைவசி பாலிசியை திரும்பப்பெறுமா Whatsapp?

மக்களின் பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கு பிறகும் திட்டமிட்டபடி, கடந்த மே 15-ஆம் தேதியில் இருந்து வாட்ஸ் அப் புதிய பிரைவசி பாலிசி தற்போது அமலில் இருக்கிறது. இதனை பயனர்கள் ஏற்றுக்கொள்ளாவிடில் வாட்ஸ் அப் கணக்கு படிப்படியாக முடக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தனிமனித ரகசியம் காக்கும் விஷயம் என்பதால் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வந்த மக்கள் இதற்கு மாற்றாக டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனையடுத்து தான் கணக்குள் எல்லாம் முடக்கப்படாது எனவும், பயனர்களுக்கு புதிய தனியுரிமைக்கொள்கை குறித்து விளக்குவோம் என வாட்ஸ் அப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுவருகிறது.


எச்சரித்த மத்திய அரசு : ப்ரைவசி பாலிசியை திரும்பப்பெறுமா Whatsapp?

புதிய தனியுரிமைக்கொள்கையைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு வாட்ஸ் அப்பிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. இக்கடித்தத்தில் பிரைவசி பாலிசி என்பது பயனர்களின் தனிப்பட்ட உரிமை, தகவல்கள் மற்றும் பயனர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காதது போல் தெரிகிறது. எனவே இதுக்குறித்து  7 நாட்களுக்குள் வாட்ஸ்-அப் நிறுவனம் உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.


எச்சரித்த மத்திய அரசு : ப்ரைவசி பாலிசியை திரும்பப்பெறுமா Whatsapp?

ஆனால் மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸை  வாட்ஸ்-அப் நிறுவனம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இதுவரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ் அப்பின் மீது மற்றொரு குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. அதில் ஐரோப்பாவில் General Data Protection Regulation-ன் கீழ் பயனர்கள் தங்களுக்கு புதிய தனியுரிமைக் கொள்கைகள் வேண்டாம் என்று மறுப்பதற்கான வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது வாட்ஸ்அப். ஆனாால் இந்தியாவில் மட்டும் பிரைவசி பாலிசியை அமலுக்கு கொண்டு வர ஏன் வாட்ஸ் அப் கட்டாயப்படுத்துகிறது எனவும் இரு நாட்டு பயனர்களுக்கிடையே பாகுபாடு காட்டுகிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.  

எனவெ இந்த புதிய பிரைவசி பாலிசியை திரும்பப் பெற்றுக்கொள்ளக்கூறி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கடிதம் அனுப்புவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னரும் கடந்த ஜனவரி மாதம் புதிய தனியுரிமைத் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூறி கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அதற்கும் வாட்ஸ்-அப்பின் தரப்பில் இருந்து முறையான பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தான் வாட்ஸ்-அப்பின் இந்த புதிய பிரைவசி பாலிசி  இந்திய தொழில்நுட்பக்கொள்கைக்கு எதிராக உள்ளது என தெரிவித்த மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்  இதனை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு உரிய பதிலளிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்து.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்து.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..
HBD CM Vijay: காலம் பார்க்காது உழைக்கும் மக்கள் ஊழியனே.. விஜய்க்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
HBD CM Vijay: காலம் பார்க்காது உழைக்கும் மக்கள் ஊழியனே.. விஜய்க்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
Maruti Suzuki Baleno: 30KM ப்ரீமியம் ஹேட்ச்பேக்..! குடும்பங்களுக்கான 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.11,000 EMI திட்டம் - முழு விவரம்
30KM ப்ரீமியம் ஹேட்ச்பேக்..! குடும்பங்களுக்கான 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.11,000 EMI திட்டம் - முழு விவரம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்து.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்து.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..
HBD CM Vijay: காலம் பார்க்காது உழைக்கும் மக்கள் ஊழியனே.. விஜய்க்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
HBD CM Vijay: காலம் பார்க்காது உழைக்கும் மக்கள் ஊழியனே.. விஜய்க்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
Maruti Suzuki Baleno: 30KM ப்ரீமியம் ஹேட்ச்பேக்..! குடும்பங்களுக்கான 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.11,000 EMI திட்டம் - முழு விவரம்
30KM ப்ரீமியம் ஹேட்ச்பேக்..! குடும்பங்களுக்கான 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.11,000 EMI திட்டம் - முழு விவரம்
TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
Vadapalani-Poonamallee Metro Rail : வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம் எப்போது தொடங்கும்.? தேதி குறித்த மோடி- வெளியான குட் நியூஸ்
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்டம் எப்போது தொடங்கும்.? தேதி குறித்த மோடி- வெளியான குட் நியூஸ்
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
Tamilnadu Round Up: சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget