மேலும் அறிய

Ind vs Eng 2nd Test: : பரபரப்பான கட்டத்தை எட்டியது லார்ட்ஸ் டெஸ்ட் : தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாளான இன்று பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்களையும், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 391 ரன்களையும் குவித்தது.

இதையடுத்து, நான்காவது நாளான நேற்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. 55 ரன்கள் எடுப்பதற்குள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி என்று முக்கிய விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. இதையடுத்து, புஜாராவும்- ரஹானேவும் அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினார்.


Ind vs Eng 2nd Test: : பரபரப்பான கட்டத்தை எட்டியது லார்ட்ஸ் டெஸ்ட் : தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

மிகவும் நிதானமாக விக்கெட் வீழாமல் பார்த்துக்கொண்ட இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆண்டர்சன், மார்க்வுட், ராபின்சன், சாம் கரன், மொயின் அலி என்று பந்துவீச்சாளர்களை மாறி மாறி பயன்படுத்தினார். ஆனால், இருவரும் அனைவரது பந்துவீச்சுக்களையும் சமாளித்து, அதே சமயத்தில் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களையும் சேர்த்தனர்.

இறுதியில் அணியின் ஸ்கோர் 155ஆக உயர்ந்த போது புஜாரா, மார்க் உட் பந்துவீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 206 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த துணை கேப்டன் ரஹானேவும் வெளியேறினார். அவர் மொயின் அலி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 146 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


Ind vs Eng 2nd Test: : பரபரப்பான கட்டத்தை எட்டியது லார்ட்ஸ் டெஸ்ட் : தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 3 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். நேற்றை ஆட்டநேர முடிவில் இந்திய அணி 82 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. களத்தில் ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும், இஷாந்த் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

ஆட்டத்தின் 5வது நாள் இன்று தொடங்கப்பட உள்ளது. இந்திய அணி தற்போது இங்கிலாந்தை விட 154 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இன்று இந்திய அணி தனது விக்கெட்டுகளை முழுமையாக இழக்கும் வரை ஆடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு குறைந்தது 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கவே இந்தியா திட்டமிடும். உணவு இடைவேளை வரை இந்திய அணி ஆடினால் மட்டுமே ஆட்டத்தை டிரா செய்ய முடியும். இல்லாவிட்டால் குறைந்த இலக்கை நிர்ணயித்து, இங்கிலாந்து வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால் அவர்கள் வெற்றிக்காக அதிரடியாக ஆடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அது இந்திய அணிக்கு சாதகமாவும், பாதகமாகவும் அமையவும் வாய்ப்பு உள்ளது. இதனால், ஆட்டத்தின் 5வது நாளான இன்று விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Embed widget