மேலும் அறிய

Ind vs Eng 2nd Test: : பரபரப்பான கட்டத்தை எட்டியது லார்ட்ஸ் டெஸ்ட் : தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாளான இன்று பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்களையும், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 391 ரன்களையும் குவித்தது.

இதையடுத்து, நான்காவது நாளான நேற்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. 55 ரன்கள் எடுப்பதற்குள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி என்று முக்கிய விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. இதையடுத்து, புஜாராவும்- ரஹானேவும் அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினார்.


Ind vs Eng 2nd Test: : பரபரப்பான கட்டத்தை எட்டியது லார்ட்ஸ் டெஸ்ட் : தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

மிகவும் நிதானமாக விக்கெட் வீழாமல் பார்த்துக்கொண்ட இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆண்டர்சன், மார்க்வுட், ராபின்சன், சாம் கரன், மொயின் அலி என்று பந்துவீச்சாளர்களை மாறி மாறி பயன்படுத்தினார். ஆனால், இருவரும் அனைவரது பந்துவீச்சுக்களையும் சமாளித்து, அதே சமயத்தில் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களையும் சேர்த்தனர்.

இறுதியில் அணியின் ஸ்கோர் 155ஆக உயர்ந்த போது புஜாரா, மார்க் உட் பந்துவீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 206 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த துணை கேப்டன் ரஹானேவும் வெளியேறினார். அவர் மொயின் அலி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 146 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


Ind vs Eng 2nd Test: : பரபரப்பான கட்டத்தை எட்டியது லார்ட்ஸ் டெஸ்ட் : தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 3 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். நேற்றை ஆட்டநேர முடிவில் இந்திய அணி 82 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. களத்தில் ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும், இஷாந்த் சர்மா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

ஆட்டத்தின் 5வது நாள் இன்று தொடங்கப்பட உள்ளது. இந்திய அணி தற்போது இங்கிலாந்தை விட 154 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இன்று இந்திய அணி தனது விக்கெட்டுகளை முழுமையாக இழக்கும் வரை ஆடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு குறைந்தது 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கவே இந்தியா திட்டமிடும். உணவு இடைவேளை வரை இந்திய அணி ஆடினால் மட்டுமே ஆட்டத்தை டிரா செய்ய முடியும். இல்லாவிட்டால் குறைந்த இலக்கை நிர்ணயித்து, இங்கிலாந்து வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தால் அவர்கள் வெற்றிக்காக அதிரடியாக ஆடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அது இந்திய அணிக்கு சாதகமாவும், பாதகமாகவும் அமையவும் வாய்ப்பு உள்ளது. இதனால், ஆட்டத்தின் 5வது நாளான இன்று விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget