மேலும் அறிய

திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு

திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குடகு மலையில் இருந்து புறப்பட்டு பூம்புகாரில் கலக்கும் காவிரி ஆற்று கரையில் புனித நீராட 3 இடங்கள் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஐப்பசி முதல் நாள் அன்று திருப்பராயத்துறையிலும், ஐப்பசி கடைசிநாளில் மயிலாடுதுறையிலும் புனித நீராடி அங்குள்ள சிவபெருமானை வணங்கினால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க திருப்பராயத்துறை திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் போன்றோர்களால் பாடல்பெற்ற தலமாகும். இதனை தொடர்ந்து ஐப்பசி முதல்நாளையொட்டி இங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) துலா முழுக்கு என்னும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வழக்கமாக காவிரி ஆற்றில் சாமியை அழைத்து சென்று புனித நீராட்டு செய்வார்கள். ஆனால் தற்போது, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாமியை காவிரி ஆற்றுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு

மேலும் அதுமட்டுமின்றி பக்தர்களும் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்த்தவாரியையொட்டி இன்று காலை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன் பின்னர் மாலையில் அம்மன் குடிபுகும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் செல்வராஜ் மேற்பார்வையின் பேரில் உதவி ஆணையர் லட்சுமணன், திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி, தக்கார் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் ராகினி ஆகியோர் செய்து வருகின்றனர். 


திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருப்பராய்த்துறை ஊராட்சி மன்றத்தின் சார்பில் கோவில் மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்காதவாறு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை யையொட்டி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பு கம்பிகளை தாண்டி யாரும் உள்ளே செல்லாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று ஆய்வு செய்தார். அவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். அப்போது, அவர் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். இதேபோல் ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை, அறநிலையத்துறை ஆகிய துறையினர் முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றனர். இதுபோல் அம்மாமண்டபம் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்களால் துலா ஸ்தானம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தரிசனம்: வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய தமிழகத்தின் 7 அற்புத ஆலயங்கள்!
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தரிசனம்: வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய தமிழகத்தின் 7 அற்புத ஆலயங்கள்!
Aani Thirumanjanam: 2026 ஆனித் திருமஞ்சனம் எப்போது? - நடராஜரை வழிபட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
2026 ஆனித் திருமஞ்சனம் எப்போது? - நடராஜரை வழிபட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
பிரம்மாண்ட ஆன்மீகப் பொக்கிஷம்: மன்னார்குடி ‘ஹரித்ரா நதி’ தெப்பக்குளத்தின் வரலாற்றுச் சிறப்பு!
பிரம்மாண்ட ஆன்மீகப் பொக்கிஷம்: மன்னார்குடி ‘ஹரித்ரா நதி’ தெப்பக்குளத்தின் வரலாற்றுச் சிறப்பு!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
Tamilnadu Round Up: திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
Consecutive holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Embed widget