மேலும் அறிய

திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு

திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குடகு மலையில் இருந்து புறப்பட்டு பூம்புகாரில் கலக்கும் காவிரி ஆற்று கரையில் புனித நீராட 3 இடங்கள் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஐப்பசி முதல் நாள் அன்று திருப்பராயத்துறையிலும், ஐப்பசி கடைசிநாளில் மயிலாடுதுறையிலும் புனித நீராடி அங்குள்ள சிவபெருமானை வணங்கினால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க திருப்பராயத்துறை திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் போன்றோர்களால் பாடல்பெற்ற தலமாகும். இதனை தொடர்ந்து ஐப்பசி முதல்நாளையொட்டி இங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) துலா முழுக்கு என்னும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வழக்கமாக காவிரி ஆற்றில் சாமியை அழைத்து சென்று புனித நீராட்டு செய்வார்கள். ஆனால் தற்போது, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாமியை காவிரி ஆற்றுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு

மேலும் அதுமட்டுமின்றி பக்தர்களும் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்த்தவாரியையொட்டி இன்று காலை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன் பின்னர் மாலையில் அம்மன் குடிபுகும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் செல்வராஜ் மேற்பார்வையின் பேரில் உதவி ஆணையர் லட்சுமணன், திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி, தக்கார் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் ராகினி ஆகியோர் செய்து வருகின்றனர். 


திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருப்பராய்த்துறை ஊராட்சி மன்றத்தின் சார்பில் கோவில் மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்காதவாறு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை யையொட்டி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பு கம்பிகளை தாண்டி யாரும் உள்ளே செல்லாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று ஆய்வு செய்தார். அவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். அப்போது, அவர் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். இதேபோல் ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை, அறநிலையத்துறை ஆகிய துறையினர் முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றனர். இதுபோல் அம்மாமண்டபம் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்களால் துலா ஸ்தானம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget