மேலும் அறிய

திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு

திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குடகு மலையில் இருந்து புறப்பட்டு பூம்புகாரில் கலக்கும் காவிரி ஆற்று கரையில் புனித நீராட 3 இடங்கள் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஐப்பசி முதல் நாள் அன்று திருப்பராயத்துறையிலும், ஐப்பசி கடைசிநாளில் மயிலாடுதுறையிலும் புனித நீராடி அங்குள்ள சிவபெருமானை வணங்கினால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க திருப்பராயத்துறை திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் போன்றோர்களால் பாடல்பெற்ற தலமாகும். இதனை தொடர்ந்து ஐப்பசி முதல்நாளையொட்டி இங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) துலா முழுக்கு என்னும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வழக்கமாக காவிரி ஆற்றில் சாமியை அழைத்து சென்று புனித நீராட்டு செய்வார்கள். ஆனால் தற்போது, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாமியை காவிரி ஆற்றுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு

மேலும் அதுமட்டுமின்றி பக்தர்களும் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீர்த்தவாரியையொட்டி இன்று காலை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன் பின்னர் மாலையில் அம்மன் குடிபுகும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் செல்வராஜ் மேற்பார்வையின் பேரில் உதவி ஆணையர் லட்சுமணன், திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி, தக்கார் ஹேமலதா, கோவில் செயல் அலுவலர் ராகினி ஆகியோர் செய்து வருகின்றனர். 


திருச்சி: தாருகாவனேசுவரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி - பக்தர்கள் நீராட தடை விதிப்பு

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திருப்பராய்த்துறை ஊராட்சி மன்றத்தின் சார்பில் கோவில் மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் பகுதியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்காதவாறு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை யையொட்டி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பு கம்பிகளை தாண்டி யாரும் உள்ளே செல்லாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று ஆய்வு செய்தார். அவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். அப்போது, அவர் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். இதேபோல் ஸ்ரீரங்கம் தாசில்தார் குணசேகரன் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை, அறநிலையத்துறை ஆகிய துறையினர் முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றனர். இதுபோல் அம்மாமண்டபம் உள்ளிட்ட அனைத்து படித்துறைகளிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்களால் துலா ஸ்தானம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Embed widget