Navratri 2023 : நவராத்திரி விழாவால் கோலாகலமாக காட்சி அளிக்கும் காஞ்சிபுரம்..! பக்தி வெள்ளத்தில் பக்த கோடிகள்..!
Navratri 2023 Celebration : " மூன்றாம் நாள் ஸ்ரீ அமிருதவல்லி தாயார் ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் திவ்ய அலங்காரத்தில் கண்ணாடி அறையில் எழுந்தருளினார் "

நவராத்திரி 2023:
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரி(Navratri) பண்டிகையும் ஒன்றாகும். நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நவம் என்பதற்கு ஒன்பது என்று பொருள் ஆகும். துர்கா தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூன்று தேவிகளும் சேர்ந்து மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை வதம் செய்ததே நவராத்திரி ஆகும். 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை மூன்று, மூன்று நாட்களாக பிரித்து 3 தேவிகளுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது.
அம்மன் கோவில்களில் விசேஷம்
அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. செல்வத்தை தரும் லட்சுமி தேவியின் ஆட்சிக்காலம் இதுவாகும். கடைசி 3 நாட்கள் கல்விச்செல்வத்தின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கான வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 24ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஒன்பது நாட்களும் வீட்டில் கொலு வைத்து வழிபாடு செய்வது வழக்கம் தான். கொலு வைத்தவர்கள், கொலு வைக்காதவர்கள் என்று வெவ்வேறு வகையில் நவராத்திரியை கொண்டாடினாலும் பல பெண்கள் நவராத்திரிக்கு விரதம் இருப்பார்கள். ஒரு சில பெண்கள் 9 நாட்களும் விரதம் இருந்து பூஜை செய்து, அம்பாளை வழிபடுவார்கள்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

