மேலும் அறிய
Noble Peace Prize : அதிகாரத்தைக் கேள்விகேட்ட டிமிட்ரி அந்த்ரேயவிச் முராட்டோவ் மற்றும் மரியா ஏஞ்ஜெலிட்டா ரெஸ்ஸா

peace_Prize
1/6

பேச்சுரிமையை பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக, பத்திரிகை உலகைச் சேர்ந்த டிமிட்ரி அந்த்ரேயவிச் முராட்டோவ், மரியா ஏஞ்ஜெலிட்டா ரெஸ்ஸா ஆகிய இருவருக்கு இவ்வாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
2/6

தங்கள் ஜனநாயக நாடுகளில் பேச்சு உரிமையை நிலைநாட்டுவதுடன் அமைதியை உருவாக்க இந்த பத்திரிகையாளர்கள் முக்கிய பங்காற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நாட்டின் நோபல் குழுவின் தலைவர் பெரிட் ரீஸ் ஆண்டர்சன் கூறினார்.
3/6

ஜனநாயகத்தில் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு கடும் இடையூறு ஏற்படும்போது அச்சமின்றி உரிமைகளை நிலைநாட்டுவதற்கு இவர்கள் அரும்பாடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
4/6

பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெருங்கதையாடல் மூலம் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் மேற்கொண்ட சட்டவிரோதக் கொலைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வந்தார்.
5/6

2012ல் இவர் உருவாக்கிய Rappler என்ற ஊடக தளம் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கொடுங்கோல் செயல்களை வெளிக்கொண்டு வந்தது. பத்திரிகை சுதந்திரத்தில் பிலிப்பைன்ஸ் அரசு 138வது இடத்தில் உள்ளது. இந்தியா 140வது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
6/6

ரசியாவில் விளாதிமிர் பூட்டின் அடக்குமுறைக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலான முறையில் பதிவிட்டு வருகிறார். 1993ல் இவர் உருவாக்கிய Novaja Gazeta என்ற நாளிதழ் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிபடுத்தி வருகின்றன
Published at : 09 Oct 2021 12:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion