மேலும் அறிய

Covid guidelines : உலக சுகாதார அமைப்பின் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்: தெரிந்துகொள்ள வேண்டியவைகள்!

Covid guidelines: உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா வழிக்காட்டு நடைமுறைகள்.

உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு (The World Health Organisation (WHO)) புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. 

 கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திகொள்ளாத மக்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒமிக்ரான் வைரஸின் புதிய திரிபு பரவலால் உலக நாடுகள் நீண்ட தூர விமான பயணத்தின்போது பயணிகள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பாவில்  XBB.1.5 திரிபு பரவி வருகிறது. அமெரிக்காவில் இந்த வகை திரிபு தான் இப்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரிபு உலகம் முழுவதும் இன்னொரு அலையை ஏற்படுத்துமா என்று இப்போதே கணிக்க முடியாது என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், ஓமிக்ரான் வைரஸின் புதிய திரிபு பரவலால் உலக நாடுகள் நீண்ட தூர விமான பயணத்தின்போது பயணிகள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியது. கொரோனா பரவியதையடுத்து உலகம் முழுவதும் திகைத்து முடங்கியது. உலகமே ஊரடங்கு, தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என கொரோனாவுடன் போராடத் தொடங்கியது. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஓமிக்ரான் என கொரோனா நிறைய திரிபுகளாக உருமாறியுள்ளது. இவற்றில் டெல்டா திரிபு தான் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனாவில் நிறைய உயிர்கள் பலியாகவும் டெல்டா திரிபு தான் காரணமாக இருந்தது. இந்நிலையில் சீனாவில் நவம்பர் இறுதி தொடங்கி மீண்டும் ஓமிக்ரானின் புதிய திரிபு ஒன்று பரவிவருகிறது.

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து சீனா அரசாங்கம் எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடாததால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வந்தது. 

புதிய விதிமுறைகள் என்னென்ன?

கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளவர்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.அறிகுறிகள் கண்டுப்பிடிக்கப்படும் நாள் முதல் இதை கடைப்பிடிக்க வேண்டும். 

ஆண்டிஜென் ராப்ட் டெஸ்ட் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு 10 நாட்கள் காத்திருக்காமல், உடனடியாக வீடு திரும்பலாம். 

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை 5 நாட்கள் தனிமைப்படுத்துதல் கண்காணிக்க வேண்டும். 

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.  

நாசி வழி தடுப்பு மருத்தான ‘Paxlovid’ நிறுவனத்தின் ’ nirmatrelvir-ritonavir ’ என்ற பூஸ்டர் டோஸ்சை செலுத்தவும் பரிந்துரைத்துள்ளது. 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget