மேலும் அறிய
Sri Lanka PM Speech : 15 மணி நேரம் மின்வெட்டு! பெட்ரோல் இல்லை! இலங்கையின் நிலைமையை புட்டுபுட்டு வைத்த பிரதமர்!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய அம்சத்தை கீழே காணலாம்.

ரணில் விக்கிரமசிங்க
- கடந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில்3 ரில்லியன் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் யாதார்தத்தில் அந்த வருமானம் 1.6 ரில்லியாக மாத்திரமே உள்ளது.
- மதிப்பிடப்பட்ட அரச செலவு 3 ரில்லியன் ரூபாய்.
- மேலதிக செலவுகள் காரணமாக மொத்த செலவீனம் 4 ட்ரில்லியனாக உயர்வடைந்துள்ளது.
- கடந்த 2019 ஆம் ஆண்டு5 பில்லியன் டாலராக காணப்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 1 மில்லியன் டாலரை விட குறைவடைந்துள்ளது.
- மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்குள் சுமார் 75 மில்லியன் டாலர்களை பெற வேண்டும்.
- ஒரு நாளுக்குரிய பெட்ரோல் கையிருப்பே உள்ளது.
- நேற்று டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் டீசல் பற்றாக்குறை ஓரளவு நீங்கும்.
- சமையல் எரிவாயுவிற்கான இறக்குமதிக்கான பணம் செலுத்தினால், அதனை பற்றாக்குறையும் சில காலங்களுக்கு இருக்காது.
- 40 நாட்களுக்கும் மேலாக மசகு எண்ணெய் மற்றும் உலை எண்ணெய் கொண்ட 3 கப்பல்கள் இலங்கையின் கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
- இறக்குமதிகளுக்கான பணம் செலுத்த திறந்த சந்தையில் டாலர்களைப் பெறுவதற்கு நாங்கள் பணியாற்றி வருகின்றோம்.
- நான்கில் ஒரு பங்கு மின்சாரம் எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் தினசரி மின்வெட்டு 15 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனினும் இந்த நெருக்கடியைத் தவிர்க்க நாங்கள் ஏற்கனவே பணத்தைப் பெற்றுள்ளோம்.
- நுகர்வோருக்கு எரிவாயு வழங்க 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை உடனடியாகப் பெற வேண்டும். மண்ணெண்ணெய் மற்றும் உலை எண்ணெய் நிலைமை இதனை விட அவசரமாக உள்ளது.
- இதய நோய்க்கு தேவையான மருந்து, அறுவை சிகிச்சை கருவிகள் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- மருந்து, மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்கு உணவு விநியோகம் செய்பவர்களுக்கு நான்கு மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை.
- அரச மருந்துக் கூட்டு ஸ்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கான பணம் நான்கு மாதங்களாக செலுத்தப்படவில்லை.
மருந்து நிறுவனங்கள் அரச மருந்துக் கூட்டுஸ்தாபனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. - 2022ம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்திற்கு மாற்றாக புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம்.
- ஸ்ரீலங்கன் ஏர்லயன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த முன்மொழிகின்றேன் எனவும் ஸ்ரீலங்கா பிரதமர் சுட்டிக்காட்டினார். பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு லிட்டர் ஒன்றுக்கு என்ற அடிப்படையில் பாரிய நட்டத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எதிர்கொள்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 04:18 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion