மேலும் அறிய

இலங்கைக்கு உயிர்மூச்சு வழங்கியது இந்தியா - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நெகிழ்ச்சி

இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்திருக்கிறார்.

இலங்கை எதிர்கொண்ட இக்கட்டான நெருக்கடியில் உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்திருக்கிறார்.
 
இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும் போது இந்தியா வழங்கிய உதவியையும் இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தில் நினைவு கூர்ந்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாக கூறியுள்ள இலங்கை அதிபர், அனைத்து பிரச்சினைகளும் வெகு விரைவில் தீர்க்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
 
அதேவேளை எமக்கு இந்தியா வழங்கிய உதவிக்கு நாம் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார். இன்று எரிபொருள்  பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனை தீர்ப்பதற்றக்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
 நாடு இதுவரை முகம் கொடுக்காத பிரச்சினைகளுக்கு இப்போது முகம் கொடுக்கிறது. இந்த நிலையை மாற்ற  அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.
 
நாடாளுமன்றத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு எனக் கூறியுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க ,பிரிந்து செயற்படுவதன் மூலம் முழு நாடும் பாதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
 
நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தலும் நாம் அனைவரும் இலங்கையர்களே என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல தானும் எவ்வாறு அதிபராக தெரிவு செய்யப்பட்டாலும்  இன்று இலங்கையராகவே உங்கள் முன் நிற்கிறேன் என  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
ரணில் விக்கிரமசிங்க தனது நாடாளுமன்ற உரையின் போது சர்வ கட்சி அரசு தொடர்பாக அனைவரையும் இணைந்து செயல்பட அழைப்பதாக கூறியுள்ளார்.
 
 
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல சர்வ கட்சி அரசு  மிக மிக அவசியம் என்பதை தான் மீண்டும் நினைவுபடுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
 
இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது.   நிலைத்த ,நீடித்த பொருளாதாரத்தை கட்டி எழுப்ப நாம் மேற்கொள்ளவிவுள்ள நடவடிக்கைகள் குறித்து இனிவரும் நாட்களில் தகவல்கள் தெரிவிக்கப்படும் என இலங்கை அதிபர் கூறியுள்ளார்.
 
அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இம்மாதம் முடிவதற்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல் இலங்கையின் பழைய வரலாற்றின் படி மீண்டும் மேற்குலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியாளராக ‍,நாம் நாட்டை மாற்றுவோம் என உறுதி கொண்டு உள்ளார் ரணில் விக்ரமசிங்க.
 
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக வர்த்தகத் துறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மக்களுக்கான வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போய் இருப்பதாக தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார் இலங்கை அதிபர்.
 
 இலங்கை ரூபாவின் பெருமதி மிகவும் வீழ்ழ்ச்சி அடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு எதிர் பார்த்திருப்பதாக  தெரிவித்திருக்கிறார்.
 
மேலும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோபூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Tata Sierra EV QWD Review: டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
டாடா சியரா EV QWD எப்படி இருக்கு.? இது இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் SUV-யா.? இதோ ரிவ்யூவ்
Scorpio N on EMI: உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
Embed widget