மேலும் அறிய

இலங்கைக்கு உயிர்மூச்சு வழங்கியது இந்தியா - இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நெகிழ்ச்சி

இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்திருக்கிறார்.

இலங்கை எதிர்கொண்ட இக்கட்டான நெருக்கடியில் உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உரையின் போது தெரிவித்திருக்கிறார்.
 
இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும் போது இந்தியா வழங்கிய உதவியையும் இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தில் நினைவு கூர்ந்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாக கூறியுள்ள இலங்கை அதிபர், அனைத்து பிரச்சினைகளும் வெகு விரைவில் தீர்க்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
 
அதேவேளை எமக்கு இந்தியா வழங்கிய உதவிக்கு நாம் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார். இன்று எரிபொருள்  பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனை தீர்ப்பதற்றக்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
 நாடு இதுவரை முகம் கொடுக்காத பிரச்சினைகளுக்கு இப்போது முகம் கொடுக்கிறது. இந்த நிலையை மாற்ற  அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.
 
நாடாளுமன்றத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு எனக் கூறியுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க ,பிரிந்து செயற்படுவதன் மூலம் முழு நாடும் பாதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
 
நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தலும் நாம் அனைவரும் இலங்கையர்களே என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல தானும் எவ்வாறு அதிபராக தெரிவு செய்யப்பட்டாலும்  இன்று இலங்கையராகவே உங்கள் முன் நிற்கிறேன் என  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
ரணில் விக்கிரமசிங்க தனது நாடாளுமன்ற உரையின் போது சர்வ கட்சி அரசு தொடர்பாக அனைவரையும் இணைந்து செயல்பட அழைப்பதாக கூறியுள்ளார்.
 
 
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல சர்வ கட்சி அரசு  மிக மிக அவசியம் என்பதை தான் மீண்டும் நினைவுபடுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
 
இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது.   நிலைத்த ,நீடித்த பொருளாதாரத்தை கட்டி எழுப்ப நாம் மேற்கொள்ளவிவுள்ள நடவடிக்கைகள் குறித்து இனிவரும் நாட்களில் தகவல்கள் தெரிவிக்கப்படும் என இலங்கை அதிபர் கூறியுள்ளார்.
 
அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இம்மாதம் முடிவதற்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்து இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல் இலங்கையின் பழைய வரலாற்றின் படி மீண்டும் மேற்குலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியாளராக ‍,நாம் நாட்டை மாற்றுவோம் என உறுதி கொண்டு உள்ளார் ரணில் விக்ரமசிங்க.
 
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக வர்த்தகத் துறை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மக்களுக்கான வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போய் இருப்பதாக தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார் இலங்கை அதிபர்.
 
 இலங்கை ரூபாவின் பெருமதி மிகவும் வீழ்ழ்ச்சி அடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு எதிர் பார்த்திருப்பதாக  தெரிவித்திருக்கிறார்.
 
மேலும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி, அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையின் 9வது நாடாளுமன்றத்தில் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோபூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget