மேலும் அறிய

"போர்க்களத்தில் பிரச்னைக்கான தீர்வை காண முடியாது" மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி!

ஆஸ்திரியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, "இந்தியா பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டிக்கிறது. அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்தும் விவாதித்துள்ளார்.

ரஷியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு சென்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

உக்ரைன் போர் குறித்து விவாதித்த பிரதமர் மோடி: உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில், ரஷிய, ஆஸ்திரியா பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹாம்மரிடம் பயனுள்ள விவாதத்தை மேற்கொண்டதாக மோடி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர், மேற்காசியாவில் நிலவும் சூழல் உள்பட பல உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவரிடம் பேசியதாக கூறினார். இது போருக்கான நேரம் என மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, "போர்க்களத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.

பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுகளை இந்தியாவும் ஆஸ்திரியாவும் வலியுறுத்துகின்றன. அதற்காக நாங்கள் எந்த ஆதரவையும் வழங்க தயாராக உள்ளோம். இந்தியாவும் ஆஸ்திரியாவும் பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டிப்பதோடு, அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை ஒப்புக்கொள்கிறோம். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்றார்.

"இது போருக்கான நேரம் அல்ல" ஆஸ்திரிய பிரதமர் உடனான உரையாடல் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இன்று, பிரதமர் நெஹாமரும் நானும் மிகவும் பயனுள்ள விவாதம் செய்தோம். நமது பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

எங்கள் உறவுக்கு வியூக ரீதியான திசையை வழங்க முடிவு செய்துள்ளோம். வரும் பத்தாண்டுகளுக்கு ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் மோதலாக இருந்தாலும் அல்லது மேற்கு ஆசியாவின் சூழ்நிலையாக இருந்தாலும், உலகெங்கிலும் நடந்து வரும் மோதல்கள் பற்றி அதிபர் நெஹாமரும் நானும் நீண்ட நேரம் பேசியுள்ளோம். இது போருக்கான நேரம் அல்ல என்று நான் முன்பே கூறியுள்ளேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஆஸ்திரிய பிரதமர், "இந்தியா ஒரு செல்வாக்கு மிக்க நாடு. அனைத்து விதமான புகழ்களுக்கும் தகுதியான நாடு. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்போது அதன் பங்கு முக்கியமானது. உக்ரைனுக்கு எதிரான ரஷிய ஆக்கிரமிப்பு பற்றி நாங்கள் தீவிரமாக ஆலோசித்தோம்.

ஆஸ்திரியாவின் பிரதமராக இருக்கும் என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைபாட்டை தெரிந்துகொள்வதும், அதைப் புரிந்துகொள்வதும், ஐரோப்பிய பிரச்னைகள் குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
2026-ல் திமுகவிற்கு கடைசி பெஞ்ச் கூட கிடைக்காது - எரிமலையாய் வெடித்த சி.வி. சண்முகம் !
"கல்லை வீசினேன்.. தீ வைத்து கொளுத்தினோம்.."ஏன் என்ற காரணத்தை உடைத்த திலகபாமா!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
காஞ்சிபுரம், வாலாஜாபாத்: பாஜக, அதிமுக-வை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்! காரணம் என்ன?
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் 50 % வரை இரத்த இழப்பு குறைவது தடுப்பு - அப்போலோ மருத்துவமனை
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
Embed widget