மேலும் அறிய

"போர்க்களத்தில் பிரச்னைக்கான தீர்வை காண முடியாது" மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி!

ஆஸ்திரியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, "இந்தியா பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டிக்கிறது. அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்தும் விவாதித்துள்ளார்.

ரஷியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு சென்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

உக்ரைன் போர் குறித்து விவாதித்த பிரதமர் மோடி: உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில், ரஷிய, ஆஸ்திரியா பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹாம்மரிடம் பயனுள்ள விவாதத்தை மேற்கொண்டதாக மோடி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர், மேற்காசியாவில் நிலவும் சூழல் உள்பட பல உலகளாவிய விவகாரங்கள் குறித்து அவரிடம் பேசியதாக கூறினார். இது போருக்கான நேரம் என மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, "போர்க்களத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.

பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுகளை இந்தியாவும் ஆஸ்திரியாவும் வலியுறுத்துகின்றன. அதற்காக நாங்கள் எந்த ஆதரவையும் வழங்க தயாராக உள்ளோம். இந்தியாவும் ஆஸ்திரியாவும் பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டிப்பதோடு, அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை ஒப்புக்கொள்கிறோம். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்றார்.

"இது போருக்கான நேரம் அல்ல" ஆஸ்திரிய பிரதமர் உடனான உரையாடல் குறித்து பேசிய பிரதமர் மோடி, "இன்று, பிரதமர் நெஹாமரும் நானும் மிகவும் பயனுள்ள விவாதம் செய்தோம். நமது பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

எங்கள் உறவுக்கு வியூக ரீதியான திசையை வழங்க முடிவு செய்துள்ளோம். வரும் பத்தாண்டுகளுக்கு ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் மோதலாக இருந்தாலும் அல்லது மேற்கு ஆசியாவின் சூழ்நிலையாக இருந்தாலும், உலகெங்கிலும் நடந்து வரும் மோதல்கள் பற்றி அதிபர் நெஹாமரும் நானும் நீண்ட நேரம் பேசியுள்ளோம். இது போருக்கான நேரம் அல்ல என்று நான் முன்பே கூறியுள்ளேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஆஸ்திரிய பிரதமர், "இந்தியா ஒரு செல்வாக்கு மிக்க நாடு. அனைத்து விதமான புகழ்களுக்கும் தகுதியான நாடு. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்போது அதன் பங்கு முக்கியமானது. உக்ரைனுக்கு எதிரான ரஷிய ஆக்கிரமிப்பு பற்றி நாங்கள் தீவிரமாக ஆலோசித்தோம்.

ஆஸ்திரியாவின் பிரதமராக இருக்கும் என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைபாட்டை தெரிந்துகொள்வதும், அதைப் புரிந்துகொள்வதும், ஐரோப்பிய பிரச்னைகள் குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பாஜக - வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பாஜக - வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
Srikanth Confession: போதை பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் காரணம்.. நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் !
Srikanth Confession: போதை பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் காரணம்.. நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் !
EPS: கமிஷன்தான் குறி.. அரைகுறை மருத்துவமனையை திறக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
EPS: கமிஷன்தான் குறி.. அரைகுறை மருத்துவமனையை திறக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
Kanimozhi: மாநில அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி? அறிவாலயத்தில் தனி அறை- தயாராகும் தலைமைப் பதவி!
Kanimozhi: மாநில அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி? அறிவாலயத்தில் தனி அறை- தயாராகும் தலைமைப் பதவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi vs Kanimozhi : துணை பொதுச்செயலாளர் உதயநிதி !கனிமொழியை வைத்து ஸ்கெட்ச்ஸ்டாலின் MASTERMIND
கனிமொழிக்கு புதிய பதவி? அறிவாலயத்தில் தனி அலுவலகம்! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்!
Union Minister Meena : மத்திய அமைச்சராகும் மீனா?வாக்கு கொடுத்த BIGSHOT திடீர் டெல்லி விசிட்
தவெகவினரை தாக்கிய திமுகவினர் உடனே CALL போட்ட விஜய்”எதுனாலும் நான் பாத்துக்குறேன்” DMK vs TVK Fight
”நீ யாருயா அத சொல்ல?”ட்ரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் சைலண்ட் மோடில் இஸ்ரேல் Israel vs Iran Ceasefire

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பாஜக - வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
25 ஆயிரம் பேரு பேசுற சமஸ்கிருதத்திற்கு ரூ.2,500 கோடியா? பாஜக - வை விளாசும் மொழி ஆர்வலர்கள்!
Srikanth Confession: போதை பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் காரணம்.. நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் !
Srikanth Confession: போதை பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் காரணம்.. நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் !
EPS: கமிஷன்தான் குறி.. அரைகுறை மருத்துவமனையை திறக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
EPS: கமிஷன்தான் குறி.. அரைகுறை மருத்துவமனையை திறக்கப்போகும் மு.க.ஸ்டாலின் - இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு
Kanimozhi: மாநில அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி? அறிவாலயத்தில் தனி அறை- தயாராகும் தலைமைப் பதவி!
Kanimozhi: மாநில அரசியலில் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி? அறிவாலயத்தில் தனி அறை- தயாராகும் தலைமைப் பதவி!
சென்னை ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல் திட்டம்: மின்சார உற்பத்திக்கு புதிய முயற்சி! சாத்தியக்கூறுகள் என்ன?
சென்னை ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல் திட்டம்: மின்சார உற்பத்திக்கு புதிய முயற்சி! சாத்தியக்கூறுகள் என்ன?
முருக பக்தர்கள் மாநாட்டில், அரசியல் இருக்காது என்று நம்பி போனோம் - மனம் திறக்கும் ஆர்.பி.உதயகுமார்
முருக பக்தர்கள் மாநாட்டில், அரசியல் இருக்காது என்று நம்பி போனோம் - மனம் திறக்கும் ஆர்.பி.உதயகுமார்
இனி, இதை செய்யவேக் கூடாது! தவெக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்ட விஜய்.. என்ன மேட்டர்?
இனி, இதை செய்யவேக் கூடாது! தவெக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்ட விஜய்.. என்ன மேட்டர்?
IND vs ENG: அசால்டா அடிக்கும் இங்கி..! இந்திய பவுலிங் ஆகிடுச்சு சொங்கி - அப்போ அம்பேல்தானா?
IND vs ENG: அசால்டா அடிக்கும் இங்கி..! இந்திய பவுலிங் ஆகிடுச்சு சொங்கி - அப்போ அம்பேல்தானா?
Embed widget