மேலும் அறிய

Nepal Landslide: நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் - 63 பேரின் நிலை என்ன? சோகத்தில் நேபாளம்

Nepal Landslide: நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 63 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Nepal Landslide: நேபாளத்தில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து 63 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

63 பேரை தேடும் பணிகள் தீவிரம்:

மத்திய நேபாளத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கட்டுப்பாட்டை இழந்த இரண்டு பேருந்துகள் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அதில் 63 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இடைவிடாத மழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையின் நாராயண்காத்-முகின் சாலையில் அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, காணாமல் போன பயணிகளைக் கண்டுபிடிக்க தேடுதல் பணி நடந்து வருகிறது, ஆனால் அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 

நேபாள பிரதமர் உத்தரவு:

விபத்து தொடர்பாக சித்வானின் தலைமை மாவட்ட அதிகாரி இந்திரதேவ் யாதவ் பேசுகையில்,  ”முதற்கட்ட தகவலின்படி, இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்தனர். அதிகாலை 3:30 மணியளவில் நிலச்சரிவு பேருந்துகளை அடித்துச் சென்றது. சம்பவ இடத்தில் நாங்கள் இருக்கிறோம், தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இடைவிடாத மழை இடையூறாக உள்ளது. காணாமல் போன பேருந்துகளைத் தேடுவதற்கான எங்கள் முயற்சிகள்,” என்று தெரிவித்தார். இதற்கிடையில், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், காணாமல் போன பயணிகளை தேடி, திறம்பட மீட்க, நாட்டின் உள்துறை நிர்வாகம் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நாராயண்காத்-முகலின் சாலைப் பிரிவில் பேருந்து நிலச்சரிவில் மூழ்கியதில் சுமார் ஐந்து டஜன் பயணிகளைக் காணவில்லை மற்றும் பொருளாதார இழப்பு குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக காணாமல் போன பயணிகளை தேடி, திறம்பட மீட்க, உள்துறை நிர்வாகம் உட்பட, அரசின் அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

விமான சேவை நிறுத்தம்:

இதனிடையே,  சீரற்ற காலநிலை நிலவுவதால் காத்மாண்டுவில் இருந்து சித்வான் மாவட்டத்தில் உள்ள பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த வாரம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பேரிடர் அதிகாரிகள் பல நதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கிற்கான எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் எல்லையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம், நேபாளத்தில் நிலச்சரிவு, மின்னல், வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட சிக்கி 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.