மேலும் அறிய

பதற்றம்..காலிஸ்தானுக்கு ஆதரவாக போராட்டம்..கனடா தூதருக்கு இந்தியா சம்மன்..விஸ்வரூபம் எடுத்த அம்ரித் பால் சிங் விவகாரம்..!

உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களுக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இது பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தானின் தீவிர ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கை கைது செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள இவர், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். 

விஸ்வரூபம் எடுத்த அம்ரித் பால் சிங் விவகாரம்:

இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாகவே, உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களுக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இது பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

கனடாவில் இந்திய தூதரகத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியா அதிருப்தியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்ட அறிக்கையில், "கனடா அரசாங்கம் எமது தூதர்களின் பாதுகாப்பையும் எமது தூதரகங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை முன்னிலையிலேயே தூதர்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்புக்கு குளறுபடி ஏற்பட எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறைப் போராட்டத்திற்குப் பிறகு, பாதுகாப்புக் காரணங்களால் கனடாவில் ஒரு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற இந்திய வம்சாவளி பத்திரிகையாளரும் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பதற்றத்தில் பஞ்சாப்:

அம்ரித்பால் சிங்கை கைது செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், பஞ்சாம் முழுவதுமே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மட்டும் இன்றி, பிற நாடுகளிலிலும் இது பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூவர்ண கொடியை அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தூதரகத்தின் கட்டிடத்தில், 'அம்ரித்பாலை விடுதலை செய்யுங்கள்' என வாசகங்களை எழுதி சர்ச்சையை கிளப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், தூதரக கட்டிடங்களின் கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடித்து உடைப்பது போல பதிவாகியுள்ளது.

இந்தியத் தூதரகத்தின் ஊழியர்கள் மூன்று பேர், நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் கொடிகளை அகற்றுவதும் அதில் பதிவாகியுள்ளது. 

இதையும் படிக்க: Rahul Gandhi Twitter Bio: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி..! பயோவை மாற்றி ட்விட்டரை அலறவிட்ட ராகுல்காந்தி..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget