மேலும் அறிய

Queen Elizabeth II Death: இங்கிலாந்தின் ராஜமாதா.! இரண்டாம் எலிசபெத் ராணியின் வரலாறு!

உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த பெயர் இங்கிலாந்துக்கு உண்டு. அந்த நாட்டிற்கு 70 ஆண்டுகளாக ராஜ மாதாவாக இருப்பவர் தான் இரண்டாம் எலிசபத் மகாராணி.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பின் காரணமாக நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்னர் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த அக்டோபர் மாதம் முதலே 96 வயதாகும் ராணி எலிசபத்துக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. நிற்க, நடக்க சிரமப்பட்டு வந்த அவர் ஸ்காட்டிஷ் அரண்மனையில் சிகிச்சை பெற்றார்.  இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி நேற்று காலமானார்.

எலிசபத் மகாராணி வரலாறு:

உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த பெயர் இங்கிலாந்துக்கு உண்டு. அந்த நாட்டிற்கு 70 ஆண்டுகளாக ராஜ மாதாவாக இருப்பவர் தான் இரண்டாம் எலிசபத் மகாராணி. ஜனநாயகம் தழைத்தோங்கும் காலத்திலும் இங்கிலாந்து ராஜ குடும்பம் மட்டும் வசீகரம் குறையாமல் அப்படியே இருக்கிறது. இதற்கு இரண்டாம் எலிசபத் ராணியின் புரட்சிகளும் காரணம் தான். ராஜா, ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார் இரண்டாம் எலிசபத் ராணி. அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டு சர்வதேச கவனத்தைப் பெற்றார். உணையில் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கி வாழ்ந்து வருபவர் எலிசபத் ராணி. எல்லோரையும் ஜனநாயகப்படுத்தும் அவரது அணுகுமுறைக்கு ஜனநாயக நாடுகளிலும் வரவேற்பு உண்டு.


Queen Elizabeth II Death: இங்கிலாந்தின் ராஜமாதா.! இரண்டாம் எலிசபெத் ராணியின் வரலாறு!

அதென்ன வானளாவிய அதிகாரங்கள்:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உலகில் எந்த நாட்டிற்கும் செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை. அவர் கார் ஓட்ட ஓட்டுநர் உரிமமும் தேவையில்லை. கிட்டத்தட்ட 15 நாடுகள் ராணியின் ஆளுமையின் கீழ் உள்ளன. அந்த நாடுகளில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய அரசை அமைக்கவோ ஆட்சியில் இருக்கும் அரசைக் களைக்கும் அதிகாரமும் உண்டு. அந்த நாடுகளில் வேண்டிய நிலப்பரப்பை தனதாக்கிக் கொள்ளும் உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் அவர் அது மாதிரியான எந்த உரிமைகளையும் பயன்படுத்தியதில்லை. அவரது எளிமையைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், சவுதி மன்னர் இங்கிலாந்து வந்தபோது அவரை தனது காரில் ஏற்றி தானே அதை ஓட்டிக் கொண்டு ஸ்காட்லாந்து அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. அதை இடித்துரைக்கவே ராணி அவ்வாறாக காரோட்டியாக இருந்ததாக கூறப்படுவதும் உண்டு. ராணி இரண்டாம் எலிசபத் எந்த நாட்டின் மீதும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி படையெடுத்ததில்லை.

14 பிரதமர்களைக் கண்டவர்:


இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆனவர், அவரது மகள் எலிசபெத். இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகிற அவருக்கு அப்போது வயது 25. அப்போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில், அதன் பின்னர் சர் ஆண்டனி ஈடன் தொடங்கி போரிஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார். தற்போது இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரசை ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்துள்ளார். அந்த வகையில் ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15-வது பிரதமர் என்ற சிறப்பை லிஸ் டிரஸ் பெறுகிறார். ராணி இரண்டாம் எலிசபெத் பதவிக்காலத்தில் இங்கிலாந்து 3 பெண் பிரதமர்களைக் கண்டிருக்கிறது. அவர்கள், மார்கரெட் தாட்சர், தெரசா மே, லிஸ் டிரஸ் ஆவார்கள். 11 பிரதமர்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். 4 பேர் மட்டுமே தொழிற்கட்சியை சேர்ந்தவர்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மீண்டும் மீண்டுமா! எண்ணெய் இறக்குமதிக்கு கிடுக்கிப்பிடி! ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா வைத்த செக்!
மீண்டும் மீண்டுமா! எண்ணெய் இறக்குமதிக்கு கிடுக்கிப்பிடி! ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா வைத்த செக்!
காதலாக மாறிய கோவில் பழக்கம் ; 37 வயது பெண்ணுடன் 22 வயது இளைஞர் திருமணம் !!
காதலாக மாறிய கோவில் பழக்கம் ; 37 வயது பெண்ணுடன் 22 வயது இளைஞர் திருமணம் !!
Trump on Nuclear Attack: ஈரான் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துமா அமெரிக்கா.? ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.? பாருங்க
ஈரான் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துமா அமெரிக்கா.? ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.? பாருங்க
Netanyahu Health Issue: நெதன்யாகுவிற்கு வந்த உயிர்க்கொல்லி நோய்; “போர் உச்சத்தில்...“ அவரே போட்ட பதிவு என்ன தெரியுமா.?
நெதன்யாகுவிற்கு வந்த உயிர்க்கொல்லி நோய்; “போர் உச்சத்தில்...“ அவரே போட்ட பதிவு என்ன தெரியுமா.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: தேர்தல் நேரத்தில் உள்ளடி! கலக்கத்தில் வேட்பாளர்கள்! அமைச்சர்கள் மீது அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: தேர்தல் நேரத்தில் உள்ளடி! கலக்கத்தில் வேட்பாளர்கள்! அமைச்சர்கள் மீது அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!
வரும் 27ல் சித்திரை தேரோட்டம்: தஞ்சை பெருவுடையார் கோயில் தேர் அலங்காரம் நிறைவு
வரும் 27ல் சித்திரை தேரோட்டம்: தஞ்சை பெருவுடையார் கோயில் தேர் அலங்காரம் நிறைவு
Lungi Ngidi: தலையில் பலத்த அடி! சுருண்டு விழுந்த லுங்கி ங்கிடி.. உள்ளே வந்த ஆம்புலன்ஸ் நிசப்தமான மைதானம்
Lungi Ngidi: தலையில் பலத்த அடி! சுருண்டு விழுந்த லுங்கி ங்கிடி.. உள்ளே வந்த ஆம்புலன்ஸ் நிசப்தமான மைதானம்
வேட்பாளரை தாக்கியவர்களை கைது செய்யுங்கள்... சாலைமறியல் செய்த நாதகவினர் 225 பேர் கைது
வேட்பாளரை தாக்கியவர்களை கைது செய்யுங்கள்... சாலைமறியல் செய்த நாதகவினர் 225 பேர் கைது
TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?
TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?
Eps Alert : ”வதந்திகளை பரப்புவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள், உஷாரா இருங்க”- அதிமுகவினருக்கு இபிஎஸ் அலர்ட்
”வதந்திகளை பரப்புவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள், உஷாரா இருங்க”- அதிமுகவினருக்கு இபிஎஸ் அலர்ட்
KL Rahul: 19 வருஷத்துல முதல்முறை! கோலி, தோனி, ரோகித் செய்யாததை செய்த கே.எல்.ராகுல் - என்ன?
KL Rahul: 19 வருஷத்துல முதல்முறை! கோலி, தோனி, ரோகித் செய்யாததை செய்த கே.எல்.ராகுல் - என்ன?
TN WEATHER ALERT : கொளுத்தும் வெயிலுக்கு இடையே கொட்டப்போகுது மழை.! எந்த எந்த மாவட்டம்.? லிஸ்ட் இதோ...
கொளுத்தும் வெயிலுக்கு இடையே கொட்டப்போகுது மழை.! எந்த எந்த மாவட்டம்.? லிஸ்ட் இதோ...
Embed widget