மேலும் அறிய

திருச்சியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் பகுதியில் ஒரு பெண் உட்பட 2 பேர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 4 நாட்களாக மாலை முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு -13.90  மில்லி மீட்டர் ஆகும். லால்குடி, புள்ளம்பாடி பகுதியில் 9.40 மில்லி மீட்டர், மண்ணச்சநல்லூர் தேவி மங்கலம் 31.00 மி.மீ, சமயபுரம் 37.40 மி.மீ, மருங்காபுரி 4.20 மி.மீ, முசிறி புலிவலம் 20.00 மி.மீ, ஸ்ரீரங்கம் நவலூர் குட்டப்பட்டு 17.60 மி.மீ,  துறையூர் 1.மி.மீ,, கோல்டன் ராக் 34.30 மி.மீ, ஜங்ஷன் 31.00 மி.மீ,  திருச்சி நகரம் 48.00 மி.மீ  மழை பதிவாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பல்வேறு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து  மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


திருச்சியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு

திருச்சி  அருகே மாலை இடியுடன் பெய்த பலத்த மழையில் இடி மின்னல் தாக்கி இருவேறு இடங்களில் வேலை பார்த்த ஒரு பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் ஒருவர் காயமடைந்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி கிளிமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன் வேலாயுதம் (60) அதே பகுதியை சேர்ந்த பாண்டு மகன் சங்கர் (55) உட்பட சிலர் திருச்சி மாவட்டம். திருவெறும்பூர் அடுத்துள்ள  பத்தாளப்பேட்டை பகுதியில் தங்கி விவசாய கூலியாக  வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த போது வேலை பார்த்தவர்கள் கரையில் மழைக்கு ஒதுங்குவதற்காக வந்தபோது  வேலாயுதம் மற்றும் சங்கர் இருவரையும் இடி மின்னல் பலமாக தாக்கியது. இதில் வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சங்கர் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


திருச்சியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு

இதேபோல் தஞ்சை மாவட்டம் இந்தலூர் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த சின்னையன் மகள் ரங்கம்மாள் (45) இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண்  தொழிலாளர்களுடன் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள கிளியூர் பகுதியில் சம்பா  நாற்று நடும் பணி செய்து  கொண்டிருந்தனர்.  அப்பொழுது இடி மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வேலாயுதம் மற்றும் ரங்கம்மாள் ஆகியோரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் ஒரு பெண் உட்பட 2 பேர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சி மக்களே அலர்ட்.. நாளை (20-06-2026) ஏகப்பட்ட இடத்தில் கரண்ட் இருக்காது
திருச்சி மக்களே அலர்ட்.. நாளை (20-06-2026) ஏகப்பட்ட இடத்தில் கரண்ட் இருக்காது
திருச்சி - முசிறி நெடுஞ்சாலை: 2 கி.மீ. குறுகிய சாலை... ஆயிரக்கணக்கான உயிர்களின் தினசரி போராட்டம்!
திருச்சி - முசிறி நெடுஞ்சாலை: 2 கி.மீ. குறுகிய சாலை... ஆயிரக்கணக்கான உயிர்களின் தினசரி போராட்டம்!
திருச்சி வான்வெளியை ஆளப்போகும் 'மெகா' கோபுரம்: ரூ.100 கோடியில் அதிநவீன ATC... 2027 ஜூனில் அதிரடி துவக்கம்!
திருச்சி வான்வெளியை ஆளப்போகும் 'மெகா' கோபுரம்: ரூ.100 கோடியில் அதிநவீன ATC... 2027 ஜூனில் அதிரடி துவக்கம்!
Trichy power cut: திருச்சியில் நாளை (17-06-2026) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை (17-06-2026) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Today: காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
Tamilnadu Roundup: செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
செந்தில் பாலாஜி வீட்டில் போலீஸ், தங்கம் விலை உயர்வு - தமிழ்நாட்டில் இதுவரை - 10 மணி செய்திகள்
Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Embed widget