மேலும் அறிய

Trichy Bus Fire : “திருச்சியில் பரபரப்பு – தனியார் பேருந்தில் திடீரென பிடித்த தீ” அலறியடித்துக்கொண்டு பயணிகள் ஓட்டம்..!

திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தில் தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் இருந்து தினந்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்னைக்கு செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக தனியார் பேருந்துகள் அதிக அளவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. 

திருச்சியில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே செல்வதால், அங்கிருந்து கோயம்பேடு, எக்மோர் , கிண்டி, கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆகையால் தனியார் பேருந்துகள் சில கோயம்பேடு மற்றும் எக்மோர் வரை செல்வதால், பயணிகள் அதிக அளவில் தனியார் பேருந்துக்களை தேர்வு செய்து ,திருச்சியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து வருகிறார்கள்.


Trichy Bus Fire : “திருச்சியில் பரபரப்பு – தனியார் பேருந்தில் திடீரென பிடித்த தீ” அலறியடித்துக்கொண்டு பயணிகள் ஓட்டம்..!

தனியார் பேருந்து திடீர் தீ விபத்து - 27 பயணிகள் உயிர் தப்பினர்.

இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 27 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்து திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தைக் கடந்தபோது பேருந்தின் டயர் வெடித்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமானது.

மேலும், சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியதால், பேருந்தில் பயணம் செய்த 27 பேரும் உயிர் தப்பினர்.  சில மணி நேரம் கழித்து பயணிகள் மாற்று பேருந்தில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

பேருந்து  விபத்து குறித்து சமூக ஆர்வர்கள் தெரிவித்தது..

தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்கள் தொகைக்கு ஏற்ப,  தனியார் பேருந்துகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் கடந்த சில வருடங்களாக அரசு பேருந்தில் பயணம் செய்வதை விட தனியார் பேருந்துகளில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

ஏனென்றால் குறித்த நேரத்தில் விரைந்து நாம் சென்று விடலாம் என்ற எண்ணத்தோடும் தனியார் பேருந்துகளில் சில வசதிகள் ஏற்படுத்தியதால் பொதுமக்கள் அந்த பேருந்தையே தேர்வு செய்து பயணம் செய்கிறார்கள்.

நேற்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆன மன்னார்புர பகுதியில் தனியார் பேருந்து  தீ பற்றி எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் தனியார் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதேசமயம் அரசு அதிகாரிகளும் பேருந்துகளில் அனைத்து ஆவணங்கள் சரியாக உள்ளதா? பேருந்துகள் அனைத்தும் முறையான சர்வீஸ் செய்யப்பட்டு தரமான டயர்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

அவ்வாறு அரசு விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் இயக்கக்கூடிய பேருந்துகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களும், அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Embed widget