மேலும் அறிய

’திருச்சியை தெறிக்க விட வருகிறது 2 உயர்மட்ட பாலங்கள்’- போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

’’முதற்கட்டமாக திருச்சி சிந்தாமணியிலிருந்து  சத்திரம் பேருந்து நிலையம்-மரக்கடை வழியாக ஜங்ஷன் வரை புதிய உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2.65 கோடி ஒதுக்கீடு’’

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஒத்தக்கடை வழியாக எம்ஜிஆர் சிலை வரையும், சிந்தாமணி ஓடத்துறை காவேரி பாலத்திலிருந்து கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாச்சிப்புரம்  வரையிலும் 2 உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்று சட்டசபையில் நெடுஞ்சாலை மானிய கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இதை தொடர்ந்து திருச்சி சிந்தாமணியிலிருந்து  சத்திரம் பேருந்து நிலையம்-மரக்கடை வழியாக ஜங்ஷன் வரை புதிய உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 2.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


’திருச்சியை தெறிக்க விட வருகிறது 2 உயர்மட்ட பாலங்கள்’- போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

இந்நிலையில் திருச்சி சிந்தாமணி அறிஞர் அண்ணா சிலையில்  இருந்து மரக்கடை வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை உயர்மட்ட பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு அதற்கு ரூபாய் 2.65 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,அவர்கள் கூறியது.. திருச்சி மாநகரின் முக்கிய வழித்தடம் பகுதிகளில் ஒன்றான சிந்தாமணி அண்ணாதுரை சிலையில்  இருந்து சத்திரம் பேருந்து நிலையம், தெப்பகுளம் மேலப்புலிவார்டு சாலை  மரக்கடை, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம் வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை 6.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

இப்பாலத்தில் நாள்தோறும் சென்று வரக்கூடிய உத்தேச வாகனங்களின் எண்ணிக்கை, அமைக்கப்பட வேண்டிய தூண்கள், மற்றும் காரிடர்கள் எண்ணிக்கை, முக்கிய சந்திப்புகளில் இணைப்பு சாலைகள், பாலம் கட்டுவதற்கு தேவையான மொத்த நிலம் அதில்  கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் அளவு, திட்ட பணிகளுக்கான செலவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.


’திருச்சியை தெறிக்க விட வருகிறது 2 உயர்மட்ட பாலங்கள்’- போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

இந்த உயர்மட்ட பாலத்தின் சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம் ஆகிய இடங்களில் இரண்டு சுரங்கப் பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முடிந்தவரை இப்போதுள்ள சாலையை ஒட்டியே இந்த உயர்மட்ட பாலம் அமையும், குறைந்த அளவிலான நிலம் மட்டுமே கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வடிவமைக்கப்படும் இப்பாலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஓடத்துறை மல்லாச்சிப்புரம் பாலத்தை, அண்ணா சிலை பகுதியிலும், தலைமை தபால் நிலையம், எம்ஜிஆர் சிலை வரையிலான பாலத்தை, தலைமை தபால் நிலையம் பகுதிகளிலும், இணைக்கும் வகையில் வடிவமைக்கப்படும். தென்னூர் மேம்பாலம், பாலக்கரை மேம்பாலத்தையும், இப்பாலத்துடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் திருச்சி மாநகரில் பெரும்பாலான பகுதிகளை தரைவழியாக மட்டுமின்றி பாலங்கள் வழியாகவும் கடந்து செல்ல முடியும் இப்பணிகளுக்கு ரூபாய் 650 கோடி வரை செலவாகும் வாய்ப்பு உள்ளது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட பிறகு முழுமையான விபரம் தெரியும் என்றனர்.பல ஆண்டுகளுக்குப்பின் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Embed widget