மேலும் அறிய

’திருச்சியை தெறிக்க விட வருகிறது 2 உயர்மட்ட பாலங்கள்’- போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

’’முதற்கட்டமாக திருச்சி சிந்தாமணியிலிருந்து  சத்திரம் பேருந்து நிலையம்-மரக்கடை வழியாக ஜங்ஷன் வரை புதிய உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2.65 கோடி ஒதுக்கீடு’’

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஒத்தக்கடை வழியாக எம்ஜிஆர் சிலை வரையும், சிந்தாமணி ஓடத்துறை காவேரி பாலத்திலிருந்து கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாச்சிப்புரம்  வரையிலும் 2 உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்று சட்டசபையில் நெடுஞ்சாலை மானிய கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இதை தொடர்ந்து திருச்சி சிந்தாமணியிலிருந்து  சத்திரம் பேருந்து நிலையம்-மரக்கடை வழியாக ஜங்ஷன் வரை புதிய உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 2.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


’திருச்சியை தெறிக்க விட வருகிறது 2 உயர்மட்ட பாலங்கள்’- போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

இந்நிலையில் திருச்சி சிந்தாமணி அறிஞர் அண்ணா சிலையில்  இருந்து மரக்கடை வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை உயர்மட்ட பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு அதற்கு ரூபாய் 2.65 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,அவர்கள் கூறியது.. திருச்சி மாநகரின் முக்கிய வழித்தடம் பகுதிகளில் ஒன்றான சிந்தாமணி அண்ணாதுரை சிலையில்  இருந்து சத்திரம் பேருந்து நிலையம், தெப்பகுளம் மேலப்புலிவார்டு சாலை  மரக்கடை, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம் வழியாக ரயில்வே ஜங்ஷன் வரை 6.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

இப்பாலத்தில் நாள்தோறும் சென்று வரக்கூடிய உத்தேச வாகனங்களின் எண்ணிக்கை, அமைக்கப்பட வேண்டிய தூண்கள், மற்றும் காரிடர்கள் எண்ணிக்கை, முக்கிய சந்திப்புகளில் இணைப்பு சாலைகள், பாலம் கட்டுவதற்கு தேவையான மொத்த நிலம் அதில்  கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் அளவு, திட்ட பணிகளுக்கான செலவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.


’திருச்சியை தெறிக்க விட வருகிறது 2 உயர்மட்ட பாலங்கள்’- போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்

இந்த உயர்மட்ட பாலத்தின் சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம் ஆகிய இடங்களில் இரண்டு சுரங்கப் பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முடிந்தவரை இப்போதுள்ள சாலையை ஒட்டியே இந்த உயர்மட்ட பாலம் அமையும், குறைந்த அளவிலான நிலம் மட்டுமே கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வடிவமைக்கப்படும் இப்பாலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஓடத்துறை மல்லாச்சிப்புரம் பாலத்தை, அண்ணா சிலை பகுதியிலும், தலைமை தபால் நிலையம், எம்ஜிஆர் சிலை வரையிலான பாலத்தை, தலைமை தபால் நிலையம் பகுதிகளிலும், இணைக்கும் வகையில் வடிவமைக்கப்படும். தென்னூர் மேம்பாலம், பாலக்கரை மேம்பாலத்தையும், இப்பாலத்துடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் திருச்சி மாநகரில் பெரும்பாலான பகுதிகளை தரைவழியாக மட்டுமின்றி பாலங்கள் வழியாகவும் கடந்து செல்ல முடியும் இப்பணிகளுக்கு ரூபாய் 650 கோடி வரை செலவாகும் வாய்ப்பு உள்ளது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட பிறகு முழுமையான விபரம் தெரியும் என்றனர்.பல ஆண்டுகளுக்குப்பின் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் மின்தடை அறிவிப்பு: நாளை (14-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
திருச்சியில் மின்தடை அறிவிப்பு: நாளை (14-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
பிளம்பர்கள் பற்றாக்குறை... தண்ணீருக்காக தவிக்கும் திருச்சி: அதிகாரிகள் மெத்தனம்?
பிளம்பர்கள் பற்றாக்குறை... தண்ணீருக்காக தவிக்கும் திருச்சி: அதிகாரிகள் மெத்தனம்?
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget