மேலும் அறிய

மத்திய மண்டலத்தில் போக்சோ வழக்குகளில் கட்டபஞ்சாயத்து செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு

திருச்சி மத்திய மண்டலத்தில் போக்சோ வழக்குகளில் கட்டபஞ்சாயத்து செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய உத்தரவு- மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்.

திருச்சி மத்திய மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, நாகை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, ஆகிய 9 மாவட்டங்களிலும் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்ததை அடுத்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக குற்ற செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டு கைது செய்து சிறையில் அடைக்கபட்டுள்ளனர். மேலும் பாலியல் தொந்தரவு, போதைப்பொருடகள் விற்பனை செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளபட்டு வருகிறது என்றார். அதனபடி திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதலையான வழக்குகள் குறித்து தீவிர ஆய்வு நடத்த உத்தரவிடபட்டது.


மத்திய மண்டலத்தில் போக்சோ வழக்குகளில் கட்டபஞ்சாயத்து செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு

இதனை தொடர்ந்து நடத்திய  இந்த ஆய்வில் 2019 ஆம் ஆண்டு 52 வழக்குகளும், 2020, ஆம் ஆண்டு 53 வழக்குகளும் ,2021 ஆம் ஆண்டு  8 வழக்குகளும் என  பதியப்பட்ட  மொத்தம் 113 வழக்குகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் குற்றவாளிகளுடன் சமாதானமாக சென்றதால் வழக்கு விடுதலையானதாக தெரியவந்தது. மேலும்  ஒரு சில போக்சோ வழக்குகளில் ஊர் முக்கிய வக்கீல்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என அனைவரும் இணைந்து போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் காப்பாற்றுவதற்காக பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோர்களை சமாதானம் செய்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து தண்டனையில் முடிவுறாத வழக்குகள் பற்றி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து செய்து அதன் மூலம் வழக்குகள் விடுதலையில் முடிந்ததாக தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மத்திய மண்டலத்தில் போக்சோ வழக்குகளில் கட்டபஞ்சாயத்து செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத முறையில் கட்டப்பஞ்சாயத்து மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்தால் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குறிப்பாக குழந்தைகளுக்கு பாதுகாப்பானவர்கள் பெற்றோர்கள் மட்டுமில்லை அரசும் பாதுகாவலர்கள் தான் ஆகவே  மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் விடுதலையான பல வழக்குகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து சட்டத்திற்கு பிறம்பாக தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget