மேலும் அறிய

அரியலூர்: பட்டா கோரி இருளரின மக்கள் மயானத்தில் நூதன போராட்டம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் உள்ள இருளரின மக்கள் மயானத்தில் குடியேறி நூதன போராட்டம்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இருளரின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் குடியிருப்பு பகுதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். சுமார் 4 தலைமுறையாக இந்த இடத்தில் இருளரின மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு விவசாய நிலமும் இருந்தது. இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு வனத்துறையினர் விவசாய நிலங்களை பறிமுதல் செய்தனர். இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலையில், இருளரின மக்கள் தினக்கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு பட்டா இல்லாத நிலையும் உள்ளது. இதனால் பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்து பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், ஆத்திரமடைந்த இருளரின மக்கள் நேற்று தங்கள் வீடுகளில் உள்ள அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மயானத்தில் குடியேறி, சமைத்து சாப்பிடும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு சமையல் செய்து, வாழை இலையில் உணவை பறிமாறி அனைவரும் சாப்பிட்டனர்.


அரியலூர்: பட்டா கோரி இருளரின மக்கள் மயானத்தில் நூதன போராட்டம்

மேலும் மாவட்டத்தில், 2006 வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தினர். இது பற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் விஜயபாஸ்கர், ஜெயங்கொண்டம் ஆதிதிராவிடர் தனி தாசில்தார் கலைவாணன், வருவாய் அலுவலர் சிவகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர், அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து இருளரின மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் இருளர் பழங்குடியினர் மாநில தலைவர் இருளபூ.செல்வக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் சின்னத்துரை மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணிக்கு முடிந்தது.இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
Embed widget