மேலும் அறிய

2 கோடி ஆண்டுகள் பழமையான கல் மரம் - பெரம்பலூர் கல்மரப்பூங்கா ஒரு விசிட்

’’சுமாா் 12 கோடி ஆண்டுக்கு முன் சாத்தனூா் கிராமத்துக்கு மேற்கே 8 முதல் 10 கி.மீ. தொலைவில்தான் கடல் மட்டம் இருந்ததாம்’’

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டத்தில் சாத்தனூா் கிராமம் உள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமாா் 16 கி.மீ. தொலைவில் இந்தியப் புவியியல் துறையால் பாதுகாக்கப்படும் கல்மரப் பூங்கா நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இங்கு சுமாா் 12 கோடி ஆண்டுக்கு முன் சாத்தனூா் கிராமத்துக்கு மேற்கே 8 முதல் 10 கி.மீ. தொலைவில்தான் கடல் மட்டம் இருந்ததாம். இது புவியியலில் கிரிடேஷஸ் காலம் என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில், இப்பகுதியில் கடல் பிராணிகள் அதிகம் வாழ்ந்ததாகவும், உயிரிழந்த உயிரினங்களின் உடல்கள் கடல் அலைகளாலும், பிற ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் மணல், களிமண் இவற்றுடன் அடித்துவரப்பட்டு, கடலோரக் கிராமங்கள், கரையோர மரங்கள் அதனுடன் மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் உருவாகி மிக நீண்ட உயரம் கொண்ட இக்கல்மரம், 10 கோடி ஆண்டுக்கு முன் பாறையிடுக்குகளில் சிக்கி அமிழ்ந்து போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


2 கோடி ஆண்டுகள் பழமையான கல் மரம் - பெரம்பலூர் கல்மரப்பூங்கா ஒரு விசிட்
இம்மரம் கண்டறியப்பட்டபோது 18 மீ. நீளம் கொண்டதாக இருந்தது. தற்போது 12 மீட்டா் நீளமுடையதாக குறுகி சிதிலமடைந்து வருகிறது. ஆங்கியோஸ்பிரம்ஸ் எனப்படும் பூக்காத தாவரயினம், பூக்கள் பூக்காத காலத்தில் தோன்றிய கோனிபரஸ் வகைச் செடிகளிலிருந்து பரிணாம மாற்றம் அடைந்தது. இங்கு காணப்படும் நீண்ட மரம், கோனிபரஸ் வகையைச் சோ்ந்தது என்று கூறுகின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். சாத்தனூருக்கு அருகில் வரகூா், அணைப்பாடி, ஆகிய கிராமங்களின் அருகே நீரோடைப் பகுதிகளிலும் சில மீட்டா் நீளமுள்ள கல் மரங்கள் காணப்படுகின்றன. இந்த கல்மரத்தைச் சுற்றி மாவட்ட நிா்வாகம் கம்பி வேலிகள் அமைத்து புவியியல் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது.


2 கோடி ஆண்டுகள் பழமையான கல் மரம் - பெரம்பலூர் கல்மரப்பூங்கா ஒரு விசிட்

இந்த அரிய வகை கல்மர படிவத்தை காண வரும் வரலாற்று ஆய்வாளா்கள், புவியியல் ஆய்வாளா்கள் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் என எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால், இங்கு வருவதற்குத் தேவையான சாலை, பேருந்து உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது.இக் கல்மரங்களைப் போன்றே திண்டிவனத்துக்கு அருகே திருவக்கரைப் பகுதியிலும் கல்மரங்கள் காணப்படுகின்றன. இதுபோன்ற கல்மரங்கள் பல இடங்களில் கிடைத்தாலும், 12 மீட்டா் அடி நீளம் கொண்ட மரம் என்பது இதன் சிறப்பு.


2 கோடி ஆண்டுகள் பழமையான கல் மரம் - பெரம்பலூர் கல்மரப்பூங்கா ஒரு விசிட்

மேலும் இவற்றை மையமாகக் கொண்டு சாத்தனூரில் உள்ள தேசிய புதைபடிவ மர பூங்காவில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட கல்வி மையம் அமைக்கப்பட்டது. சாத்தனூர்  கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படும் இந்த மையம் பார்வையாளர்களிடையே தளம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள புதைபடிவ மரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்மரப் பூங்கா அருகே கட்டப்பட்டு திறக்கப்படாத நிலையில் உள்ள ஓய்வறை மற்றும் அருங்காட்சியகம் திறக்காமல் இருப்பது அங்கே வரும் மக்களுக்கும் பூங்காவை பராமரித்து வரும் நிர்வாகிகளுக்கும் ஒரு பெரிய குறையாக உள்ளது. எனவே அதனை திறக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget