மேலும் அறிய

திருவாரூர்: அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர இடம் கோரி மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ஆத்திரமடைந்த மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின்  சுற்று சுவர் மீது ஏறி குதித்து வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சி ஏழு பேரூராட்சிகள் 10 ஊராட்சி ஒன்றியங்கள் 534 ஊராட்சிகள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் விவசாயமும் விவசாய தொழிலாளர்களும் நிறைந்த மாவட்டம் இந்தப் பகுதியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கடந்த ஆட்சிக் காலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு உறுப்பு கலை கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கு தேவையான கட்டிட வசதி பேராசிரியர்கள் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் அரசு உறுப்பு கலைக்கல்லூரி அறிவிக்கப்பட்டு கட்டிட வசதி இல்லாமல் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கல்லூரி வகுப்புகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த பல நாட்களாக புதிய கட்டிட வசதி கொண்டு தர வேண்டும் குடவாசல் உறுப்புக்களைக் கல்லூரியை குடவாசல் பகுதியில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரி  செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் இல்லாமல் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் இந்த கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு நிரந்தரம் நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவ, மாணவிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுகுறித்து நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் குடவாசல் அரசு கலை கல்லூரியை வேறு இடத்திற்கு  மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதாகவும் அதற்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனவும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.


திருவாரூர்: அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர இடம் கோரி மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இந்த நிலையில் கல்லூரிக்கு நிரந்தர இடம் தேர்வு செய்யவும், கல்லூரிக்காக தற்போது கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகள் குறைவாக இருப்பதால் குடவாசல் ஒன்றியத்திற்குள் ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் எனவும்,தற்போது கல்லூரி செயல்பட்டு வரும் தற்காலிக இடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும்  வலியுறுத்தி இன்று  மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.அவர்களை காவல்துறையினர் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தடுத்து நிறுத்தினர்.இதனால்  மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின்  சுற்று சுவர் மீது ஏறி குதித்து வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


திருவாரூர்: அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர இடம் கோரி மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

அதனைத் தொடர்ந்து குடவாசல் வட்டாட்சியர்  மாணவர்களை  பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.இந்த சமாதான பேச்சுவார்த்தை நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் வட்டாட்சியர் குடவாசல் காவல் ஆய்வாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.அதில் மாணவ மாணவிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வட்டாட்சியரிடம் அளித்துள்ளனர்.இந்த கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என வட்டாட்சியர் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MEMU Special Trains: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி: விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு ரயில்கள்! பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி: விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு ரயில்கள்! பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சாவூரில் 8 ஆயிரம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
தஞ்சாவூரில் 8 ஆயிரம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
ஆன்லைன் வாயிலாக தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 34 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைன் வாயிலாக தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 34 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஈரான்–இஸ்ரேல் போர் தாக்கம்… ஆபத்தில் கோவை ஜவுளி ஏற்றுமதி
ஈரான்–இஸ்ரேல் போர் தாக்கம்… ஆபத்தில் கோவை ஜவுளி ஏற்றுமதி
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Chennai Mini Bus : சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
சென்னையில் 220 மினி பேருந்து.! சூப்பர் திட்டத்தை தொடங்கும் அரசு- எங்கிருந்து எங்கே இயக்கப்படுகிறது.?
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Embed widget