மேலும் அறிய

Pugar Petti: கூடங்குளத்தில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்...! தேங்கி நிற்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு...! சீரமைக்கப்படுமா..?

தெருக்களின் இருபுறமும் கட்டப்படும் கால்வாய் மூலம் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர், மழைநீர் அந்த கால்வாயில் செல்ல வேண்டும். ஆனால் கால்வாயை உயர்த்திக் கட்டி எந்தவித பயனும் இன்றி கட்டி வருகின்றனர்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட்மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த அணுஉலை நிர்வாகம் சார்பில் அணு உலை அமைந்து இருக்கும் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக கூடங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் சூழலில் அங்கு மழை நீர் மற்றும் வீடுகளில் தேங்கும் கழிவு நீர் செல்ல வழியில்லாத நிலையில் அணு உலை நிர்வாகம் சார்பில் 8 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு அதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.

 


Pugar Petti: கூடங்குளத்தில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்...! தேங்கி நிற்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு...! சீரமைக்கப்படுமா..?

குறிப்பாக இந்த பணிகள் துவங்கப்பட்டு சில மாதங்களிலேயே பொதுமக்கள் இந்த பணிகள் முறையாக நடைபெறவில்லை, தெருக்களின் இருபுறமும் கட்டப்படும் கால்வாய் மூலம் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் மழை நீர் அந்த கால்வாயில் செல்லும் வகையில் இருக்க வேண்டும், ஆனால் கால்வாயை உயர்த்தி, எந்தவித பயனும் இன்றி கட்டி வருகின்றனர் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

கால்வாயை முறையாக கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம்  என அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது 3 ஆண்டுகள் ஆகியும் இந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி வருகின்றனர்.


Pugar Petti: கூடங்குளத்தில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்...! தேங்கி நிற்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு...! சீரமைக்கப்படுமா..?

 தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

மேலும் தற்போது கால்வாய் பணிகள் கிடப்பில் கிடப்பதால் மழைநீர் மற்றும் வீடுகளிலிருந்து செல்லக்கூடிய கழிவுநீர் செல்ல வழியின்றி அந்த கால்வாயில் தேங்கி அந்தப்பகுதி  பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.  தேங்கியிருக்கும் கழிவு நீரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். எனவே அதிகாரிகள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கால்வாயை கழிவு நீர் செல்லும் வகையில் முறையாக கட்டித்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Pugar Petti: கூடங்குளத்தில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்...! தேங்கி நிற்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு...! சீரமைக்கப்படுமா..?

இதுகுறித்து பாஜக ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் கூறும் பொழுது, ’’கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் நிதியில் கூடங்குளத்தில் கழிவு நீர் கால்வாய் பணிகள் செய்யப்பட்டன. எந்தவித திட்டமிடலும் இல்லாமல், வேலை தெரியாத பொறியாளரை வைத்து பணிகளை செய்தனர். தற்போது கழிவு நீர், மழை நீர் என எதுவுமே செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதிகள் முழுவதும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே  இந்த சுகாதார சீர்கேட்டை வரும் 22 ஆம் தேதிக்குள் ஊராட்சி நிர்வாகம்  சரி செய்யவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போகிறோம்’’ என்று தெரிவித்தார்.


Pugar Petti: கூடங்குளத்தில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய்...! தேங்கி நிற்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு...! சீரமைக்கப்படுமா..?

அதே போல சமூக ஆர்வலர் ராதை காமராஜ் கூறும்பொழுது, ’’பொதுமக்கள் அடிப்படை தேவைக்காக குறிப்பாக குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை, கொசு தொல்லை ஆகியவற்றிக்காக  ஊராட்சி மன்ற அலுவலகம் சென்றால்மக்களை அவமரியாதையாக நடத்துகின்றனர், கேள்வி கேட்டால் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய தலைவரே குடிநீர் மோட்டார் அறைக்கு பூட்டு போட்டு யாரும் திறக்க கூடாது என்று கூறுகின்றார். இது போன்ற சூழல்தான் இங்கு நிலவி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு பணி செய்யவே பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் அதனை உரிய முறையில் அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். கழிவு நீர் கால்வாயை முறையாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

உங்கள் பகுதிகளிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளனவா?

ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.  

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
திருநெல்வேலியில் ஜூலை 6 நாளை மின் தடை: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
திருநெல்வேலியில் ஜூலை 6 மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
திருநெல்வேலியில் ஜூலை 6 மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில்: ஜூலை முன்பதிவு இன்றுதொடக்கம்!
திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில்: ஜூலை முன்பதிவு இன்றுதொடக்கம்!

வீடியோ

Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Embed widget