மேலும் அறிய

Crime ; பஸ்சில் இருந்து வெளியே இழுத்து பிளஸ்-1 மாணவருக்கு அரிவாள் வெட்டு !

பாதிக்கப்பட்ட சிறுவன் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தகவல்.

மாணவனை அரிவாளில் வெட்டிய நிலையில் சக பயணிகள் அலறி அடித்து ஓடினர்.

பேருந்தில் வந்த பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அடுத்த அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன்  (வயது17).  பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இம்மாணவன், நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று, தேர்வு எழுதுவதற்காக, தனது ஊரில் இருந்து தனியார் பேருந்தில் தேவேந்திரன் -ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார். கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து ஏறியது. பேருந்தில் இருந்த மாணவனை கீழே இழுத்து வந்த அந்த கும்பல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதைப்பார்த்த சக பயணியர் அலறி ஓட்டம் பிடித்தனர்.

சிறுவர்கள் உட்பட மூவர் கைது

தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வெட்டுக் காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேரில் விசாரித்தார். அரியநாயகிபுரம் மற்றும் கெட்டியம்மாள்பரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து காவல்துறையினர் வெளியிட்ட தகவலில்..,” ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மர்மநபர்கள் சிலர் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, தனது மகனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார்.

வழக்குப் பதிவு

இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் Cr.No. 118/2025 u/s 296(b),127(2),109(2), 351(3) BNS r/w 3(1)(r), 3(1)(s), 3(2)(v) SC/ST POA Act 1989ன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் (எ) பெரியவன் (19), மற்றும் 2 இளஞ்சிறார்கள் ஆகியோர்கள் சேர்ந்து மேற்படி சிறுவனை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

சிகிச்சையில் அனுமதி

உடனடியாக தனிப்படை போலீசார் லெட்சுமணன் (எ) பெரியவனை கைது செய்தும், மற்ற 2 இளஞ்சிறார்களை கையகப்படுத்தியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தாக்குதலுக்குள்ளான மேற்படி 17 வயது சிறுவன் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 14,889 பேருக்கு தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு.. எப்படி அப்ளைசெய்வது ! முழு விவரம்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சொந்த இடங்களை அளக்க இனி கஷ்டப்பட வேண்டாம்.. வந்தாச்சு ஈசியான வழி.. முழு விபரம் இதோ !

தலைப்பு செய்திகள்

விஜய் கட்சி நிர்வாகியின் விஸ்வரூப மோசடி - தூத்துக்குடியில் நிலத்தை அமுக்க பார்த்த தவெக பிரமுகர் மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்
விஜய் கட்சி நிர்வாகியின் விஸ்வரூப மோசடி - தூத்துக்குடியில் நிலத்தை அமுக்க பார்த்த தவெக பிரமுகர் மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?
தவெகவின் முதல் வெற்றி... திமுக கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை.. தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி
தவெகவின் முதல் வெற்றி... திமுக கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை.. தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Embed widget