மேலும் அறிய

20 நாளா பஸ் வந்திச்சி- அப்புறம் 17 வருசமாச்சி.. பஸ்ஸே காணோம் - மூடுவிழாவை நோக்கி கோவில்பட்டி பேருந்து நிலையம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும்போது திறந்து வைக்கப்பட்ட பஸ் நிலையம் தற்போது வரை முழுமையாக செயல்படாத நிலை இருந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.1.80 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 16.07.2007  தி.மு.க. ஆட்சியில் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. 20 நாட்கள் மட்டுமே இயங்கிய அப்பேருந்து நிலையம் தற்போது வரை செயல்படவில்லை. சென்னை, நாகர்கோவில், கோவை,  சேலம், மதுரை, பெங்களூர் , ஓசூர், திருப்பதி என வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என 1000க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதல் பஸ் நிலையம் வழியாக தான் செல்லும் நிலை உள்ளது.


20 நாளா பஸ் வந்திச்சி- அப்புறம் 17 வருசமாச்சி.. பஸ்ஸே காணோம் - மூடுவிழாவை நோக்கி கோவில்பட்டி பேருந்து நிலையம்

கோவில்பட்டி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது புதிய பேருந்து நிலையம். நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், கோவை, திருச்சி, சென்னை என புற நகர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும் வகையில் மொத்தம் 52 பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.


20 நாளா பஸ் வந்திச்சி- அப்புறம் 17 வருசமாச்சி.. பஸ்ஸே காணோம் - மூடுவிழாவை நோக்கி கோவில்பட்டி பேருந்து நிலையம்

இதுகுறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி கூறும்போது, "தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக பெரிய ஊர் கோவில்பட்டி. விரைவில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது.  இந்த பேருந்து நிலைய கட்டிடம், கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான இடம், என்றாலும் இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்டது. தேர்தலில் ஓட்டுக்காக மக்களிடம்  கொடுத்த வாக்குறுதிப்படி  அவசரகதியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் முறையாக அனுமதியே பெறவில்லை.  இது ஒருபுறம் இருந்தாலும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பேருந்து நிலையம் அமைக்க அனுமதியே கிடையாது.


20 நாளா பஸ் வந்திச்சி- அப்புறம் 17 வருசமாச்சி.. பஸ்ஸே காணோம் - மூடுவிழாவை நோக்கி கோவில்பட்டி பேருந்து நிலையம்

புதிய பேருந்து நிலையம் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் ஏதும் நகராட்சி நிர்வாக கோப்பில் இல்லை என்பதை நகராட்சி நிர்வாகமே எனக்கு ஆர்.டி.ஐயில் பதில் கூறியுள்ளது. இதை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கும் தொடுத்தேன். ஆனால், எந்த பலனுமில்லை. மின் விளக்குகள் இருந்தும் இரவு நேரங்களில் ஒரு மின் விளக்கு கூட எரியாததால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.  இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், விரும்பத் தகாத செயல்கள் நடக்கும் இடமாகவும் உள்ளது.


20 நாளா பஸ் வந்திச்சி- அப்புறம் 17 வருசமாச்சி.. பஸ்ஸே காணோம் - மூடுவிழாவை நோக்கி கோவில்பட்டி பேருந்து நிலையம்

பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வராமல் தேசிய நெடுஞ்சாலை அல்லது சர்வீஸ் சாலையில் தான் பயனிகளை இறக்கி செல்லும் நிலை உள்ளது. இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. பயணிகளும் மழை வெயில் என நடுரோட்டில் நிற்கும் நிலையில் தான் உள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து விற்பனையும் ஜோராக நடக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு தி.மு.க ஆட்சியில் திறக்கப்பட்டதால் பேருந்து நிலையம் செயல்படாமல் மூடப்பட்டது என்பது ஒருபுறம் இருந்தாலும் எந்த கட்சியின் ஆட்சியும் பேருந்து நிலையத்தை இயக்க முன்வரவில்லை. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம்" என்கின்றார்.


20 நாளா பஸ் வந்திச்சி- அப்புறம் 17 வருசமாச்சி.. பஸ்ஸே காணோம் - மூடுவிழாவை நோக்கி கோவில்பட்டி பேருந்து நிலையம்

ஆனாலும் இதுகுறித்து கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, புதிய பேருந்து நிலையத்தில் இறக்கிலால் விடுதாக.. ஆனால் இங்கிட்டு இருந்து அங்கிட்டு க்ராஸ் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்துடும், லைட் கிடையாது, வேகமாக செல்லும் பஸ்ஸில அடிப்பட்டு போகத்தான் செய்யனும் எனக்கூறும் பயணிகள், சட்டுபுட்டுன்னு இந்த பஸ்ஸ்டாண்டுக்குள்ள பஸ்ஸை வர ஏற்பாடு செஞ்சா நல்லாருக்கும் என்கின்றனர்.


20 நாளா பஸ் வந்திச்சி- அப்புறம் 17 வருசமாச்சி.. பஸ்ஸே காணோம் - மூடுவிழாவை நோக்கி கோவில்பட்டி பேருந்து நிலையம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget