மேலும் அறிய

தூத்துக்குடி துறைமுகத்தில் இ-சிகரெட் கடத்தல்: ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், 3 பேர் கைது!

கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ. 10.5 கோடி மதிப்பிலான இ-சிகரெட் பாக்கெட்டுகள்பறிமுதல். 3 பேர் கைது.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக தடை செய்யப்பட்ட பட்டாசுகள், சிகரெட்டுகள் ஆகியவை சீனாவிலிருந்து கடத்தி வரப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்ததையடுத்து, துறைமுகத்துக்கு வரும் சரக்குப் பெட்டகங்களை புலனாய்வுத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.


தூத்துக்குடி துறைமுகத்தில் இ-சிகரெட் கடத்தல்: ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், 3 பேர் கைது!

இந்நிலையில், நவம்பர் 27ஆம் தேதி சீனாவின் பீஜிங் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கன்டெய்னரில், ஒரு நிறுவனத்துக்கு குடைகள் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதில், சந்தேகமடைந்து கன்டெய்னரை சோதனை செய்தனா். அதில், பெயரளவுக்கு குடைகளும், நடுவில் இ-சிகரெட் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 10.5 கோடி என கூறப்படுகிறது. இந்த இ-சிகரெட்டுகளைக் கடத்தி வந்த மூன்று பேர் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த நாகராஜ் (42), சென்னை, கொட்டிவாக்கத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (46), சென்னை, மடிப்பாக்கத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் (56) ஆகிய 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவா்கள் 3 பேரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனா்.

சிகரெட் லைட்டர் போன்ற கருவியில் நிகோடின் பவுடரை அடைத்து விற்பனை செய்யப்படுவதுதான் இ-சிகரெட் ஆகும். ஒரு இ-சிகரெட்டின் விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஒரு இ-சிகரெட்டை 10 ஆயிரம் முறை புகைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சிகரெட் பிடிப்போர் விலை அதிகமாக இருந்தாலும் கூட சாதாரண சிகரெட் புகைப்பதைவிட இ-சிகரெட் புகைப்பதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சாதாரண சிகரெட் புகைப்பதைவிட இ-சிகரெட் புகைப்பது அதிக ஆபத்தானது என்று கூறப்படுகிறது.


தூத்துக்குடி துறைமுகத்தில் இ-சிகரெட் கடத்தல்: ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், 3 பேர் கைது!

கடந்த 2019லிருந்து இந்தியாவில் இ-சிகரெட்டை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த சம்பவம், துறைமுகம் வழியாக நடக்கும் சட்டவிரோத கடத்தல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இ-சிகரெட் என்பது மின்னணு முறையில் புகையை உருவாக்கும் ஒரு சாதனம் ஆகும். இது சாதாரண சிகரெட்டுகளுக்கு மாற்றாக சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து பல கேள்விகள் உள்ளன. இந்த கடத்தல் சம்பவம், இ-சிகரெட் பயன்பாடு மற்றும் அதன் சட்டவிரோத வர்த்தகம் குறித்த விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget