மேலும் அறிய

பெத்தமனம் பித்து; பிள்ளை மனம் கல்லு - மழையால் இடிந்த வீடு; பிள்ளைகள் கைவிட்டதால் கையேறு நிலையில் மூதாட்டி

’’5 பிள்ளைகளுக்கும் திருமணமாகி அனைவரும் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் யாரும் வேலம்மாளை கவனிப்பதில்லை என்பதால், அவர் மட்டும் தான் தனது வீட்டில்  தனியாக வசித்து வருகிறார்'’

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  மழைக்கு வீடு இடிந்து போனதால் வேலம்மாள் என்கிற 62 வயது மூதாட்டி தார்பாய் அமைத்து வசித்து வருகிறார். கணவனும் இல்லை, பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் மழைநீர் சகதியிலும், விஷபூச்சிகளுடன் தனது வாழ்வினை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மூதாட்டி வேலம்மாள் அரசின் உதவிக்கரத்தினை எதிர்ப்பார்த்து காத்து இருக்கிறார்
 

பெத்தமனம் பித்து; பிள்ளை மனம் கல்லு - மழையால் இடிந்த வீடு; பிள்ளைகள் கைவிட்டதால் கையேறு நிலையில் மூதாட்டி
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயுரம் தாலூகாவிற்குட்பட்ட ஊராட்சி அயன்ராசாபட்டி. இந்த ஊராட்சியில் உள்ள கைலாசபுரம் கிராமத்தினை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி வேலம்மாள், இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 2 பெண்கள். விவசாய கூலி வேலை செய்து வந்த கருப்பையா கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வேலம்மாள் தான் கூலி வேலை பார்த்து குடும்பத்தினை காப்பாற்றி வந்தார். அவருடைய 5 பிள்ளைகளுக்கும் திருமணமாகி அனைவரும் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் யாரும் வேலம்மாளை கவனிப்பதில்லை என்பதால், அவர் மட்டும் தான் தனது வீட்டில்  தனியாக வசித்து வருகிறார். கணவனும் இல்லை, பிள்ளைகளும் கவனிக்கவில்லை என்பதால் மிகுந்த வறுமையுடன் 100 நாள் வேலைக்கு செல்வது, விவசாய கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தினை கொண்டு தனது வாழ்வினை நடத்தி வருகிறார். 62 வயதான மூதாட்டி. உடல்நிலை வேறு பாதிப்பு இருப்பதால் பல நாள்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் ரேஷனில் கிடைக்கும் அரியை வாங்கி கஞ்சி காய்ச்சி வடித்து தனது வாழ்நாள்களை கழித்து வருகிறார்.

பெத்தமனம் பித்து; பிள்ளை மனம் கல்லு - மழையால் இடிந்த வீடு; பிள்ளைகள் கைவிட்டதால் கையேறு நிலையில் மூதாட்டி
தனது வறுமை மற்றும் வயோதிகத்தினை கருத்தில் கொண்டு அரசு வழங்கும் மாத உதவி தொகை கேட்டு பலமுறை மனு அளித்தும், அந்த மனுக்கள் கிணற்றி போட்ட கல் போல இருப்பதால் உதவி தொகையும் கிடைக்கவில்லை, வயதான காலத்திலும் தனது உடல் நிலையை பார்க்கமால் உழைத்து வாழும் வேலம்மாளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழை வடிவில் மற்றொரு துயரத்தினை அடைந்துள்ளார்.
 
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் அவரது ஓட்டு வீட்டின் பல பகுதிகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெயர்ந்து மட்டுமின்றி,மேற்கூரையும் சேதமடைந்து சுற்றுசுவர்களும் விரிசல் அடைந்தன. உணவிற்கே அல்லப்படும் வேலம்மாளினால் வீட்டினை சீரமைக்க முடியாத நிலை. வேறு வழியில்லமால் தார் பாய் வாங்கி அதனை வீட்டு முழுவதும் கட்டி வசித்து வருகிறார். அதிக மழை பெய்ய தொடங்கினால் தார்பாயையும் மீறி வீட்டிற்கு தண்ணீர் புகுந்து விடுவதால் மழைநீர் தேங்கிய சேற்றில் தான் மூதாட்டி வேலம்மாள் வசித்து வருகிறார்.

பெத்தமனம் பித்து; பிள்ளை மனம் கல்லு - மழையால் இடிந்த வீடு; பிள்ளைகள் கைவிட்டதால் கையேறு நிலையில் மூதாட்டி
 
வீடு இடிந்து சேதமடைந்த போது மின் இணைப்பும் துண்டிகப்பட்டதால், மின்வசதி இல்லமால் இரவுவில் மெழுகுவர்த்தி, மண்ணெணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் இருந்து வருகிறார். சுற்றுச்சுவர்களும் சேதமடைந்து ஆங்கங்கே துளைகள் காணப்படுவதால் அந்த துளைகள் வழியாக பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வேம்மாள் வீட்டிற்கு ஹாயாக வந்து செல்லும் நிலை உள்ளது. இனி அடுத்து மழை பெய்யதால் இருக்க கூடிய சுற்றுசுவர்களும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை தான் உள்ளது. கணவனும் இல்லை, பிள்ளைகள் ஆதரவும் இல்லமால் இடிந்து போன வீட்டில் தார் பாய் அமைத்து வாழ்ந்து வரும் வேலம்மாளின் நிலைமையை கருதி அவருக்கு பசுமை வீடு கட்டி தருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்படுது மட்டுமின்றி, மாத உதவி தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மூதாட்டி வேலம்மாளின் கோரிக்கையாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் ரத்து ; மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிரடி ஏற்பாடு !!
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் ரத்து ; மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிரடி ஏற்பாடு !!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
Tata Sierra Discount: செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Embed widget