மேலும் அறிய
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Mar. 10th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நீடிப்பதால், தொழிற்சாலை மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியன் ஆயில் நிறுவனம்.
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரபல ஹோட்டல்களில் நேரம் மற்றும் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
- ஒரு எல்பிஜி சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தியது மத்திய அரசு. வீட்டிற்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு.
- சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெங்களூருவில் ஹோட்டல்கள் இன்று முதல் மூடல்.
- சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- சென்னை மெரினா கடற்கரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு‘ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை.
- மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்தானது மார்ச் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்திருந்த பயணிகள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயணத்தின் தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது ரத்து செய்து முழு பணத்தை திரும்பப் பெறலாம் என அறிவிப்பு.
- மோடி ட்ரம்ப்புடன் சமரசம் செய்து கொண்டதாக அமெரிக்கர்கள் கூறுவதாகவும், தனக்கு தெரிந்த தகவல்களை வெளிப்படுத்தினால், மோடி ராஜினாமா செய்ய நேரிடும் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி.
- ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. போரால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், ரஷ்ய அதிபருடன் பேசிய நிலையில் ட்ரம்ப் தகவல்.
- ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தை தடுத்தால், ஈரான் ஒரு நாடாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு 20 மடங்கு வலிமையுடன் தாக்குவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























