மேலும் அறிய

விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்... வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தல்

தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர்: தி.மு.க. வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தை கண்டு பயந்துவிட்டது. இருப்பினும் நாம் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்க இரவு பகல் பாராது கடுமையாக உழைக்க வேண்டும் என்று தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.

தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணிய மூர்த்தி, மனோகரன் சதீஷ்குமார்,  ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். 


விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்... வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தல்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளர் காமராஜ், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக இரவு பகல் பாராமல் பாடுபட வேண்டும். அதற்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதியை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும். ஒவ்வொரு முகவர்களும் அதிக வாக்குகளை பெற்று தர கடுமையாக உழைக்க வேண்டும்.

தி.மு.க. வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தை கண்டு பயந்துவிட்டது. இருப்பினும் தி.மு.க.வை எளிதாக எண்ணி விடாமல் நாம் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. எனவே ஒரு மாத காலம் நமக்கு முக்கியமான காலம். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் அவருக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.  டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் 18 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கிறது. இதற்கு ஒவ்வொரு அ.தி.மு.க. உண்மையான தொண்டனும் கடுமையாக உழைத்து உள்ளீர்கள்.


விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்... வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தல்

எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். விவசாயிகளை காப்பாற்ற முடியும். அவர் மீண்டும் முதல்வர் ஆவார் நீங்கள் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள். டெல்டா பகுதியில் மழையினால் நெல் மணிகள் முளைத்து விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்த போது எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து பார்த்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஒரு நாள் டெல்டாபகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்ததற்கே திமுகவினர் ஆடிப் போய்விட்டனர். உடனடியாக நெல்மணிகளை கொள்முதல் செய்தனர். இதனைப் பார்த்த விவசாயிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை திருஞானம், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் துரைவீரணன், விவசாய பிரிவு துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், துணைச் செயலாளர் வெண்ணிலா பாலைரவி,  முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், வல்லம் பேரூர் செயலாளர் சசிகுமார், பொதுக்குமு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

22 ஏக்கர் நீர்ப்பிடிப்பு குளம் ஆக்கிரமிப்பை உடன் மீட்க வேண்டும்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்
22 ஏக்கர் நீர்ப்பிடிப்பு குளம் ஆக்கிரமிப்பை உடன் மீட்க வேண்டும்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தீர்மானம்
பசியின் சக்தி எவ்வளவு பெரியது? அதிர்ச்சி தரும் விளக்கம்!
பசியின் சக்தி எவ்வளவு பெரியது? அதிர்ச்சி தரும் விளக்கம்!
நவீன கடிகாரத்திற்கு முன்னோடி! நாழிகை வட்டில் – தமிழர் கண்டுபிடிப்பு ரகசியம்!
நவீன கடிகாரத்திற்கு முன்னோடி! நாழிகை வட்டில் – தமிழர் கண்டுபிடிப்பு ரகசியம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!
Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TN PONGAL GIFT : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
Embed widget