மேலும் அறிய

விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்... வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தல்

தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர்: தி.மு.க. வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தை கண்டு பயந்துவிட்டது. இருப்பினும் நாம் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்க இரவு பகல் பாராது கடுமையாக உழைக்க வேண்டும் என்று தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார்.

தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணிய மூர்த்தி, மனோகரன் சதீஷ்குமார்,  ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். 


விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்... வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தல்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளர் காமராஜ், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக இரவு பகல் பாராமல் பாடுபட வேண்டும். அதற்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதியை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும். ஒவ்வொரு முகவர்களும் அதிக வாக்குகளை பெற்று தர கடுமையாக உழைக்க வேண்டும்.

தி.மு.க. வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தத்தை கண்டு பயந்துவிட்டது. இருப்பினும் தி.மு.க.வை எளிதாக எண்ணி விடாமல் நாம் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. எனவே ஒரு மாத காலம் நமக்கு முக்கியமான காலம். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் அவருக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.  டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் 18 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கிறது. இதற்கு ஒவ்வொரு அ.தி.மு.க. உண்மையான தொண்டனும் கடுமையாக உழைத்து உள்ளீர்கள்.


விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்... வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தல்

எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். விவசாயிகளை காப்பாற்ற முடியும். அவர் மீண்டும் முதல்வர் ஆவார் நீங்கள் நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள். டெல்டா பகுதியில் மழையினால் நெல் மணிகள் முளைத்து விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்த போது எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து பார்த்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஒரு நாள் டெல்டாபகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்ததற்கே திமுகவினர் ஆடிப் போய்விட்டனர். உடனடியாக நெல்மணிகளை கொள்முதல் செய்தனர். இதனைப் பார்த்த விவசாயிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை திருஞானம், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் துரைவீரணன், விவசாய பிரிவு துணைச் செயலாளர் சிங்.ஜெகதீசன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், துணைச் செயலாளர் வெண்ணிலா பாலைரவி,  முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், வல்லம் பேரூர் செயலாளர் சசிகுமார், பொதுக்குமு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராஜராஜ சோழனின் மாஸ்டர் பிளான்: ஒருபோதும் அழியாத ‘சாவா மூவா’ கால்நடைச் செல்வம்!
ராஜராஜ சோழனின் மாஸ்டர் பிளான்: ஒருபோதும் அழியாத ‘சாவா மூவா’ கால்நடைச் செல்வம்!
தஞ்சை கள்ளப்பெரம்பூரின் ‘செங்கழுநீர்’ ஏரி: ஒரு துளி மழையும், ஒரு காலத்தின் வரலாறும்!
தஞ்சை கள்ளப்பெரம்பூரின் ‘செங்கழுநீர்’ ஏரி: ஒரு துளி மழையும், ஒரு காலத்தின் வரலாறும்!
காவிரி மண்ணின் கலைநயமும், திருவையாறு அசோகாவின் தனித்துவமும்: ஒரு சுவையான பார்வை
காவிரி மண்ணின் கலைநயமும், திருவையாறு அசோகாவின் தனித்துவமும்: ஒரு சுவையான பார்வை
முத்தெடுக்கும் சோளத்தில் முளைத்த முட்களாய் படைப்புழு: மீட்கும் வழிகள் என்ன?
முத்தெடுக்கும் சோளத்தில் முளைத்த முட்களாய் படைப்புழு: மீட்கும் வழிகள் என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!
NS Raja Subramani : தமிழருக்கு தலைமை பொறுப்பு! முப்படைக்கும் ஒற்றைத் தலைவன்..யார் இந்த ராஜா சுப்ரமணி?
”குதிரை பேரம் நடத்திய விஜய்” இமேஜை காலி செய்த TTV! அமமுகவின் MASTERPLAN
கிங்மேக்கராக மாறிய திருமா! CM ஆகப் போவது யார்? தவெகவுக்கு ஆதரவு தருமா
Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?
Vijay resigned : எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜய்.! திருச்சி மக்களுக்கு ஷாக் நியூஸ்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
டாஸ்மாக்கிற்கு பூட்டு போடுவாரா விஜய்? - தவெக அரசுக்கு அன்புமணி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
CM Vijay: 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு - மேடையிலேயே முதல் நாள், முதல் கையெழுத்து போட்ட CM விஜய்
TN Politics: கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்., வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
கரையப்போகும் மூன்றாவது கட்சி எது? கம்யூ., காங்கிரஸ் வரிசையில் அதிமுகவா? TVK Vs DMK தானா?
CM Vijay Speech: ”ஆட்டம்போடலாம்னு நினைக்காதிங்க” முதல் நாளே அமைச்சர்களுக்கு வார்னிங் கொடுத்த CM விஜய்
”ஆட்டம்போடலாம்னு நினைக்காதிங்க” முதல் நாளே அமைச்சர்களுக்கு வார்னிங் கொடுத்த CM விஜய்
CM Vijay:
CM Vijay: "100 சதவீதம் நம்புகிறேன்.." விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற கருணாநிதி பேத்தி நம்பிக்கை
Embed widget